என் மலர்
நீங்கள் தேடியது "சீனு ராமசாமி"
- சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'இடிமுழக்கம்'.
- இப்படம் 22-வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'இடிமுழக்கம்'.
ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் 22-வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாடலான `கானா விளக்கு மயிலே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா இருவரும் அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.
சீனு ராமசாமி கடைசியாக இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்கிள் கொண்டாடப்பட்டு வருகிறது.
- ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இடிமுழக்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார்.
- சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'இடிமுழக்கம்'.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'இடிமுழக்கம்'.
ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் 22-வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கானா விளக்கு மயிலே பாடல் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் சேதுபதி வெளியிடவுள்ளார்.
சீனு ராமசாமி கடைசியாக இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்கிள் கொண்டாடப்பட்டு வருகிறது.
- புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
- இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் இயக்குனர் சீனு ராமசாமி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்பட்டது.

சீனு ராமசாமி
இந்நிலையில், புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர். இன்று இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர் பெரிய விசயம் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர்.
— Seenu Ramasamy (@seenuramasamy) May 27, 2023
இன்று இந்தியாவின் புதிய
பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம்
செங்கோலை
போற்றும்
பிரதமர் @narendramodi
அவர்களே
உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர்
பெரிய விசயம் ?
- சமீபத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
கூடல் நகர் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதன்பின்னர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல விருதுகளையும் இப்படம் குவித்தது.

சீனு ராமசாமி
இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் ஒன்றை இணைத்து அவர் பதிட்டிருப்பது,
மேடைக்
கச்சேரிகளுக்கு பெரிய ரசிகனாகிய நான்
இவரை வியந்தேன்
நெகிழ்ச்சியாகவும்
இருந்தது,
இந்த பாடலை நீங்கள் கேட்டு
ருப்பீர்கள்
இச்சோகப்பாட்டை ஒருவர் இன்முகத்தோடு
பாடி நம் இதயத்தை கனக்கச்
செய்கிறார் அவர்
அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்..
துன்பம்
சுவையாக மாறுகிறது
அதை இனிப்போடு நாம்
எதிர்கொண்டால் என்பதை இவர்
பாடிய விதத்தை
காணுங்கால்
அறியலாம்.
குரு வணக்கம்
தேச வணக்கம்
சொல்லி முடிகிறது
கணீர் கச்சேரி
என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.
மேடைக்
— Seenu Ramasamy (@seenuramasamy) May 29, 2023
கச்சேரிகளுக்கு பெரிய ரசிகனாகிய நான்
இவரை வியந்தேன்
நெகிழ்ச்சியாகவும்
இருந்தது,
இந்த பாடலை நீங்கள் கேட்டு
ருப்பீர்கள்
இச்சோகப்பாட்டை ஒருவர் இன்முகத்தோடு
பாடி நம் இதயத்தை கனக்கச்
செய்கிறார் அவர்
அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்..
துன்பம்
சுவையாக மாறுகிறது
அதை…
- ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே மூன்று ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
- இந்த விபத்து குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு தமிழக அரசு சிறப்பு ரயில் மூலம் தமிழகம் கொண்டு வந்தது. இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டிருப்பது,
தொலைந்து போயிருக்கலாம்
ஆறுதலாவது உண்டு,
தென்னங்கீற்று பந்தல் சிந்தும் ஒளியென நம்பிக்கையிருக்கும்
திரும்ப வரலாம்மென்ற நினைப்பு,
நினைப்பே உயிர் ஜோதி வளர்க்கும்.

சீனு ராமசாமி
வாழ
போனவர்கள்
திரும்ப வருகையில் நிகழும்
பயணங்கள் மீதான
காலத்தின் விபரீதப் போர்
கோர விபத்துகள்,
விபத்துக்கு பின்னிருக்கும்
ஒரு கவனமின்மை
அக்கவனமின்மைக்கு பின்னே நான் போகவில்லை,
இறப்பின்
அஞ்சலி செலுத்தும் நேரமிது.
பிழைத்தவர்கள்
மறுபடி
பிழைக்கச்
செய்யும்
தருணமிது
தப்பியவர்கள்
இல்லம் வரும்
மாலையிது.
சுற்றி வந்து
கைகொடுத்த கிராமத்து மனிதத்தை
வாழ்த்தும் நிமிடமிது என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.
- சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இடிமுழக்கம்’.
- இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'இடிமுழக்கம்'. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இடிமுழக்கம்
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் பிறந்த நாளான இன்று இப்படத்தின் போஸ்டரை இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் எங்கள் ஜல்லிக்கட்டுக்கு துள்ளி வந்து குரல் கொடுத்த வெற்றித்தமிழன் ஜிவி பிரகாஷுக்கு இடிமுழக்கம் படக்குழுவின் சார்பில் அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் ஜல்லிக்கட்டுக்கு துள்ளி வந்து
— Seenu Ramasamy (@seenuramasamy) June 13, 2023
குரல் கொடுத்த #வெற்றித்தமிழன் @gvprakash க்கு #இடிமுழக்கம் படக்குழுவின் சார்பில் அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள்.@SGayathrie @Actor_ArulDass @NRRaghunanthan @thamizh_editor @Vairamuthu @SonyMusicSouth @CtcMediaboy @SureshChandraa… pic.twitter.com/uvTS2SeXcd
- 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கப்பட்டது.
- இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது, கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா'. இளைய தளபதி விஜய் உங்களை வாழ்த்துகிறேன். தங்கள் நடிப்பில் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா'
— Seenu Ramasamy (@seenuramasamy) June 18, 2023
இளைய தளபதி @actorvijay
உங்களை வாழ்த்துகிறேன்.
தங்கள் நடிப்பில்
புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தது போல்
தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின்
Content Based Realistic படங்களை
தயாரித்து
சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர… pic.twitter.com/GJRZovMIxV
- இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் மாமனிதன்.
- இப்படம் நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளையும் குவித்தது.
கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சீனு ராமசாமி, அதன்பின்னர் தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் படங்களை இயற்றி தனக்கான இடத்தை பிடித்தார். மாமனிதன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளையும் பெற்றது.

இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து, 'தர்மதுரை' எனக்கு ஏழாம் தேசிய விருது பெற்றுத் தந்த படமாகும் இதில் இடம்பெற்ற 'ஆண்டிபட்டிக் கணவாக்காத்து' பாடல் 10கோடிப் பார்வையாளர்களைக் கடந்திருப்பது பெருமை மற்றும் பெருமிதம் என்று பதிவிட்டிருந்தார்.

இவரின் இந்த பதிவை பகிர்ந்த இயக்குனர் சீனு ராமசாமி, மாமனிதன் திரைப்படத்தை பாவலர் பிரதர்ஸ் திரு,பாஸ்கர் திரு,இளையராஜா திரு,கங்கையமரன் அவர்கள் பிறந்த பண்ணைப்புரத்தில் பதிவு செய்தோம். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த வைகை அணையின் மையத்தில் இருக்கும் 'மெட்டூர்' என்ற இலக்கிய ஸ்தலத்தில் 'ஆண்டிப்பட்டி கணவாக் காத்து' பாடலை தர்மதுரை படத்திற்காக பதிவு செய்தோம். மூத்தோர்கள் அன்பே ஆசிகள்.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.
- சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்து திரைக்கு வந்த படம் 'கண்ணே கலைமானே'.
- இந்த படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்து திரைக்கு வந்த 'கண்ணே கலைமானே' படம் தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023-ம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது.

தற்போது 'கண்ணே கலைமானே' படம் சிறந்த படத்துக்கான 17-வது அமெரிக்க சோகால் திரைப்பட விருதையும் வென்றுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் செப்டம்பர் 12-ந்தேதி நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகி உள்ளது.
இதுகுறித்து டைரக்டர் சீனு ராமசாமி கூறும்போது, "நல்ல படைப்புகள் காலம் கடந்தும் பேசப்படும். அந்த வகையில் 'கண்ணே கலைமானே' படம் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகிறது. உலக படத்துக்கான தன்மைகள் இந்த படத்தில் இருப்பதால் சோகால் விருதை வென்று அமெரிக்க சர்வதேச பட விழாவில் திரையிடவும் தேர்வாகி உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது'', என்றார்.
- வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.
- அந்த வரிசையில் சீனு ராமசாமி படத்திற்கும் பாடல் எழுதுகிறார்.
1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.

வைரமுத்து தற்போது பல படங்களுக்கு பிசியாக பாடல் எழுதி வருகிறார். அந்த வரிசையில் இயக்குனர் சீனு ராமசாமி படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சீனுராமசாமி
நல்லதொரு கதைசொல்லி
அவள் பானை விற்கிறவள்;
இவன் கோழி விற்கிறவன்
பானைக்காரிக்குக்
கோழிக்காரன்மீது
ஒருதலைக் காதல்
அவனோ
வாழ்வில் நொந்துபோனவன்;
பால்யத்தில் நரைத்தவன்
அவளுக்குப் புரிகிற மொழியில்
காதலை நிராகரிக்க வேண்டும்
அதுதான் பாட்டு
ரகுநந்தன் மெட்டுக்கு
வட்டார வழக்கில்
எழுதினேன்
அவரவர் தொழில்வழி
இயங்கியது தமிழ்:
"ஒடைஞ்ச பானைக்கு
ஒலை எதுக்கு? – அடி
அறுத்த கோழிக்கு
அடை எதுக்கு?"
படித்ததும் –
சீனிச்சேவு
சாப்பிட்ட குழந்தைமாதிரி
சிரித்தார் சீனு" என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனுராமசாமி
— வைரமுத்து (@Vairamuthu) November 17, 2023
நல்லதொரு கதைசொல்லி
அவள் பானை விற்கிறவள்;
இவன் கோழி விற்கிறவன்
பானைக்காரிக்குக்
கோழிக்காரன்மீது
ஒருதலைக் காதல்
அவனோ
வாழ்வில் நொந்துபோனவன்;
பால்யத்தில் நரைத்தவன்
அவளுக்குப் புரிகிற மொழியில்
காதலை நிராகரிக்க வேண்டும்
அதுதான் பாட்டு
ரகுநந்தன் மெட்டுக்கு
வட்டார… pic.twitter.com/YvkXmuzpZj
- மனிஷா யாதவ் மீண்டும் என் படத்தில் நடிப்பார்.
- சீனு ராமசாமியுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்.
திரையுலகில் நடிகைகள் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை எதிர்கொண்டது பற்றி பல பிரபலங்கள் வெளிப்படையாக கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அந்த வரிசையில், நடிகை விசித்திரா தானும் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொண்டதாக கூறி, முன்னணி நடிகர் மீது மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதன் பின்னணியில் பத்திரிகையாளர் ஒருவர், தமிழ் சினிமா இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகை மனிஷா யாதவ் தனக்கு நன்றி தெரிவித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட இயக்குனர் சீனு ராமசாமி, மனிஷா யாதவ் தன் படத்தில் நடிப்பார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், நடிகை மனிஷா யாதவ் இனி சீனு ராமசாமியுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான பதிவில் அவர், "சீனு ராமசாமியின் படத்தில் நான் நடிக்கிறேனா? இதனை இப்போது தான் முதல் முறையாக கேட்கிறேன். விழா மேடையில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தை போன்று தான் அவருக்கும் நான் நன்றி தெரிவித்தேன். இது எதையும் மாற்றிவிடாது."
"ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறிய கருத்தில் இன்றும் உறுதியாகவே இருக்கிறேன். என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவருடன் நான் ஏன் பணியாற்ற வேண்டும்? சீனு ராமசாமி சார், நீங்கள் கூறும் கருத்துகளில் உண்மை இருப்பதை உறுதிப்படுத்துக் கொள்ளுங்கள்," என்று தெரிவித்தார்.
- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அப்படத்திற்கு வடக்கன் என பெயரிடப்பட்டுள்ளது.
- இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அப்படத்திற்கு வடக்கன் என பெயரிடப்பட்டுள்ளது.
'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகி வருகிறது.
படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து, வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் நாளை (பிப் 29) காலை 10 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதனை இயக்குநர்கள் பாரதிராஜா, லிங்குசாமி, சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர் நாசர் ஆகியோர் வெளியிடுகின்றனர்.