என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஷ்மிகா மந்தனா"

    • தமிழில் கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’, விஜய்யுடன் ‘வாரிசு’ படங்களில் நடித்து இருக்கிறார்.
    • ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

    கன்னடத்தில் 2016-ல் வெளியான 'கிரிக் பார்ட்டி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கில் நடித்த 'புஷ்பா' படம் திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். பட வாய்ப்புகளும் குவிந்தன.

    தமிழில் கார்த்தி ஜோடியாக 'சுல்தான்', விஜய்யுடன் 'வாரிசு' படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தனுசுடன் 'குபேரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியில் நடித்த 'அனிமல்', 'சாவா' படங்களும் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளன. ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ராஷ்மிகா வைத்துள்ள சொத்துக்கள் விவரம் பற்றிய தகவல் இணையதளத்தில் பரவி வருகிறது. அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.100 கோடியை எட்டும் நிலையில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ராஷ்மிகா மந்தனா சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும், பல வர்த்தக நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருந்தும் சம்பாதிக்கிறார். பெங்களூருவில் ரூ.8 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா வீடு உள்ளது. நிறைய விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்துள்ளார். மும்பை, கோவா, கூர்க், ஐதராபாத் பகுதிகளிலும் அவருக்கு நிறைய சொத்துக்கள் உள்ளனவாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை ராஷ்மிகா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை.
    • இவர் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ராஷ்மிகா மந்தனா

    'வாரிசு' படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா சமூக வலைதளத்தில் வேதனையுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு சில விஷயங்கள் என்னை சில நாட்களாக, சில மாதங்களாக ஏன், சில வருடங்களாக மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இதுபற்றி வெளிப்படையாகப் பேச வேண்டிய தருணம் இது என்று நினைக்கிறன். இதில் நான் என்னைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.


    ராஷ்மிகா மந்தனா

    நான் எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்புகளைப் பெற்று வருகிறேன். நிறைய ட்ரோல்களால், நெகட்டிவான விமர்சனங்களால் தாக்கப்படுபவராகவே நான் இருந்து வருகிறேன். இதுபோன்றவற்றை சந்திக்கக்கூடிய ஒரு துறையைதான் நான் என் வாழ்கையாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் எல்லோராலும் நேசிக்கப்படும் ஒருவராக இருக்க முடியாது என்பது தெரியும். அதற்காக எதிர்மறையான கருத்துகளைப் பரப்புவது சரியில்ல. எல்லோரையும் எப்படி மகிழ்விப்பது என்பதுதான் எனது தினசரி சிந்தனையாக இருக்கிறது.


    ராஷ்மிகா மந்தனா

    உண்மையில், என்னை மட்டுமல்ல நம் அனைவரையும் பெருமைப்படுத்துவதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். ஆனால், சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வரும் பொய்யான தகவல்களையும், குறிப்பாக நேர்காணல்களில் நான் சொல்லாத விஷயங்களுக்காக நான் கேலி செய்யப்படுவது என்னை வருத்தத்திற்குள்ளாக்குகிறது.


    ராஷ்மிகா மந்தனா

    என்னைப்பற்றிய விமர்சனங்கள் அர்த்தமுள்ளதாக இருந்தால் நான் அவற்றை வரவேற்கிறேன், ஏனென்றால் அவை என்னை மேம்படுத்த உதவுகின்றன. என்னை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து எனக்கு அன்பு கிடைக்கிறது. உங்களுக்காக நான் கடினமாகவும் சிறப்பாகவும் உழைப்பேன். ஏனென்றால் உங்களை மகிழ்விப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.




    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா.
    • இப்படம் ரஷ்யாவின் மாஸ்கோவில் இன்று படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

     

    இந்நிலையில் 'புஷ்பா' படம் ரஷ்ய மொழியில் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் இன்று (01.12.2022) படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது. இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ராஷ்மிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    மேலும் ரஷ்யாவின் 24 நகரங்களில் நடைபெற இருக்கும் ஐந்தாவது இந்தியத் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் 'புஷ்பா' திரைப்படம் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கன்னட படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் பரவியது.
    • இது குறித்து ராஷ்மிகா விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழில் கார்த்தியின் 'சுல்தான்' படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா கன்னட படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கன்னட திரையுலகில் விமர்சனங்கள் கிளம்பின. கன்னடத்தில் தயாராகி பிறமொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட 'காந்தாரா' படம் வசூலை குவித்து பலரது பராட்டை பெற்ற நிலையில், அந்த படத்தை நான் பார்க்கவில்லை என்று ராஷ்மிகா பேசியது கன்னட ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

     

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகாவை விமர்சித்து வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டனர். கன்னட படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாகவும் வதந்தி பரவியது. இதனால் கோபமான ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ''காந்தாரா படத்தை நான் பார்த்து விட்டேன். 'காந்தாரா' படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளேன். 'காந்தாரா' படம் வெளியானபோது நான் படப்பிடிப்பில் இருந்ததால் பார்க்க முடியவில்லை.

     

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

     

    என்னை இழிவுபடுத்தி கேவலமாக பலர் பேசுகிறார்கள். உண்மை அவர்களுக்கு தெரிவது இல்லை. எனது நடிப்பில் ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் சொந்த வாழ்க்கை பற்றி பேசுகிறார்கள். இவர்களின் பேச்சுகளை நான் பொருட்படுத்துவது இல்லை" என்று ஆவேசமாக கூறினார்.

    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா.
    • இப்படம் ரஷ்யாவின் மாஸ்கோவில் சமீபத்தில் படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

     

    புஷ்பா படக்குழு

    புஷ்பா படக்குழு

    'புஷ்பா' படம் ரஷ்ய மொழியில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் 01.12.2022 அன்று படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது. இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

     

    புஷ்பா

    புஷ்பா

    இந்நிலையில் புஷ்பா திரைப்படம் ரஷ்யாவில் வசூல் சாதனை நிகழ்த்திவருவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் ரஷ்யாவில் 25 நாட்களை கடந்து 774 திரைகளில் 10 மில்லியன் ரூபல்ஸ் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்', விஜய் ஜோடியாக 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
    • விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவு சென்றது தவறா? என்று நடிகை ராஷ்மிகா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

    தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்', விஜய் ஜோடியாக 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்கும்படி வற்புறுத்தினர். நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாகவும், அவருடன் மாலத்தீவுக்கு சென்று வந்ததாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில், "சமீபகாலமாக சமூக வலைதளங்களில் என்மீது அவதூறு செய்வது அதிகமாகிவிட்டது. சிறு வயது முதலே ஹாஸ்டலில் தங்கி படித்தேன். பள்ளியில் அதிகமாக யாரோடும் சேரமாட்டேன். அதனால் நிறைய பேர் எனக்கு திமிர் என்று தவறாக புரிந்து கொண்டார்கள். அறையில் தனியாக உட்கார்ந்து அழுத நாட்கள் கூட உண்டு.

    வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. இந்த சிறிய பிரச்சினைக்கு நீ இப்படி இடிந்து போய்விட்டால் எப்படி என்று அம்மா சொன்ன வார்த்தைகள் எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தன. ஒரு எல்லை வரை காத்திருப்பேன். எல்லை தாண்டினால் யாராக இருந்தாலும் சரி எதிர்த்து பதிலடி கொடுப்பேன். மாலத்தீவுக்கு விஜய் தேவரகொண்டாவுடன் சென்றீர்களாமே? அவருடன் காதலில் இருக்கிறீர்களா? இப்படி எல்லாம் விமர்சனம் செய்கிறார்கள். விஜய் தேவரகொண்டா எனது நண்பர். அவரோடு 'டூர்' சென்றால் தவறு என்ன?'' என்றார்.

    • தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
    • சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. தெலுங்கு, கன்னடம், தமிழ் என பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார்.


    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

    இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட ராஷ்மிகா கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.
    • இவர் சமீபத்தில் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. தெலுங்கு, கன்னடம், தமிழ் என பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார்.


    ராஷ்மிகா மந்தனா

    நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அழகுக்கு உதாரணமாக யாரையும் சொல்ல முடியாது. எல்லோரிடமும் ஒரு விதமான அழகு இருக்கத்தான் செய்கிறது. கண்ணாடியின் முன்னால் நின்று என்னை நான் பார்த்துக் கொள்ளும்போது ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டால் போதும்.


    ராஷ்மிகா மந்தனா

    அப்படித்தான் நான் நினைக்கிறேன். சிலர் பருமனாக இருந்தால்தான் அழகாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் யாருக்காகவும் தங்கள் உடலின் வடிவத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஆறு மாதம் தவறாமல் உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். என்னை பொறுத்தவரை நான் ஒரு உடற்பயிற்சியாளரை நியமித்து இருக்கிறேன். அவரது ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடக்கிறேன். அதன் மூலம் எனது கட்டுக்கோப்பான உடல் தோற்றத்தை காப்பாற்றி வருகிறேன்'' என்றார்.

    • கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.
    • இவர் சமீபத்தில் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. தெலுங்கு, கன்னடம், தமிழ் என பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார்.

     

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா


    இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஷ்மிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வித்யாசமான புடவையில் வலம் வரும் ராஷ்மிகாவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    • 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (31.03.2023 வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடனமாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 15 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (31.03.2023 வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மே மாதம் 28-ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐ.பி.எல். போட்டி 10 அணிகளுடன் மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.


    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

    நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இதன் தொடக்க நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் இதில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடனமாடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • நீடா அம்பானியின் கலாசார மைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா நாட்டு நாட்டு பாடலுக்கு கலக்கல் உடையில் நடனம் ஆடினர்.
    • இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

    மும்பையில் நீடா அம்பானியின் கலாசார மைய நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், ஹாலிவுட், பாலிவுட் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட்டை சேர்ந்த டாம் ஹாலண்ட், ஜெண்டயா, கீகி ஹதீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பாலிவுட் நடிகர், நடிகைகளான ஷாருக்கான், வருண் தவான், ரன்வீர் சிங், அலியா பட், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


    ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா

    ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா

    இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ஷாருக்கான் உலகம் முழுவதும் வசூலில் ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக சாதனை படைத்த பதான் படத்தில் இடம் பெற்ற ஜூமி ஜோ பதான் பாடலுக்கு மேடையில் நடனம் ஆடினார். அவருடன் நடிகர்கள் வருண் தவான் மற்றும் ரன்வீர் சிங்கும் கலந்து கொண்டனர். இவர்கள் நடனமாடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.


    ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா

    ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா

    இதேபோன்று, ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளிவந்து, ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகைகள் ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனம் ஆடும் வீடியோ பலரையும் கவந்து வருகிறது. ஆலியா பட்-ராஷ்மிகா இருவரும் குழுவினருடன் சேர்ந்து நாட்டு நாட்டு பாடலுக்கு அதிரடியான ஸ்டெப்புகளை போட்டு நடனம் ஆடிய வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

    • நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
    • தற்போது ராஷ்மிகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்த நடிகை ராஷ்மிகா, தமிழில் கார்த்தியின் சுல்தான் மற்றும் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும், இந்தியில் அனிமல் படத்திலும் நடித்து வருகிறார்.


    ராஷ்மிகா மந்தனா 

    ராஷ்மிகா மந்தனா 

    இந்நிலையில் ராஷ்மிகா நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குனர் சாந்தரூபன் இயக்கவிருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு 'ரெயின்போ' என்று பெயரிடப்பட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.


    ரெயின்போ

    ரெயின்போ

    இப்படத்தின் கதாநாயகனாக சமந்தாவின் சாகுந்தலம் படத்தில் நடித்துள்ள நடிகர் தேவ் மோகன் நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 7ம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    ×