search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடிவேலு"

    • நடிகர் வடிவேலு மாரீசன் படத்தில் நடித்துள்ளார்.
    • மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் வடிவேலுவுடன் பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு மாரீசன் படத்தில் நடித்துள்ளார். மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் வடிவேலுவுடன் பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் வடிவேலுக்கு வாழ்த்து தெரிவித்து மாரீசன் படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சிரித்துக்கொண்டு மக்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக நடனம் ஆடுவதுப்போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல்.
    • சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய சக்சஸ் கூட்டணி.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு இணையும் படம் ஒன்று உருவாகி வருவதாக செய்தி வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


    சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய சக்சஸ் கூட்டணி என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் திரைப்படத்தில் இணையாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்திற்கு `கேங்கர்ஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • பொது மக்கள் போட்டா போட்டி போட்டு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த படத்திற்காக அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி ரெயில்வே நிலையங்களின் எதிரே கடந்த 2 நாட்களாக படப்பிடிப்பு பணி முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இந்த காட்சிகளில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் வடிவேலு அங்கு முகாமிட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று அந்த இடத்தில் ஒரு கேரவனில் வடிவேலு தங்கியிருப்பதை கேள்விப்பட்டு அவரை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் கேரவினை முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தனர்.

    இதனை அறிந்த வடிவேலு, வேனில் இருந்து இறங்கி வெளியே வந்து முகம் கோணாமல் அனைவருடனும் தனித்தனியாக நின்று கொண்டு செல்பி எடுக்க போஸ் கொடுத்தார். பொது மக்கள் போட்டா போட்டி போட்டு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது.
    • தமன்னா கதாநாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது.

    சுந்தர் சி இயக்கி, நடித்து வெளியான அரண்மனை 4 வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து இவர் எடுக்கும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதனிடையே சுந்தர் சி தனது அடுத்த படத்தில் வடிவேலுவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும், இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், சுந்தர் சி இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

    மேலும், இதில் வடிவேலு மற்றும் ராஷி கண்ணா முதன்மை பாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • வெங்கல் ராவுக்கு முதல் ஆளாக நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
    • வெங்கல் ராவுக்கு சின்னத்திரை நடிகர் கேபிஒய் பாலா ரூ.1 லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25 ஆயிரமும் என உதவி வழங்கினர்.

    தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். சண்டை பயிற்சி கலைஞராக சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய வெங்கல் ராவ் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

    நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் வெங்கல் ராவ். வடிவேலு நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டார் வெங்கல் ராவ்.

    ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட வெங்கல் ராவ் சில தினங்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு கை மற்றும் ஒரு கால் வேலை செய்யவில்லை என்றும் பேசக் கூட முடியாமல் கஷ்டப்படுகிறேன். சினிமா நடிகர்கள் உதவி செய்யுங்க என கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்க்குள்ளாகினர்.

    இதையடுத்து, வெங்கல் ராவுக்கு முதல் ஆளாக நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். வெங்கல் ராவ் வெளியிட்ட வீடியோவை பார்த்த சிம்பு, தனது உதவியாளரை நேரில் அனுப்பி ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் வழங்கி உள்ளார். உதவி பெற்றுக்கொண்ட வெங்கல் ராவ் நடிகர் சிம்புவுக்கு நன்றியை தெரிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு சின்னத்திரை நடிகர் கேபிஒய் பாலா ரூ.1 லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25 ஆயிரமும் என உதவி வழங்கினர்.

    இந்நிலையில், நடிகர் வடிவேலு ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவுக்கு வழங்கியுள்ளார். வெங்கல் ராவை போனில் தொடர்பு கொண்டு பேசிய வடிவேலு அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னதாக, வடிவேலு தன்னுடன் நடித்த நடிகர்கள் மோசமான நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யமாட்டார் என பலரும் அவரை விமர்சித்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெங்கல் ராவுக்கு அவர் உதவி செய்துள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகியது ஜெமினி திரைப்படம்
    • இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பபை பெற்றது. படத்தின் பாடல்களும் செம ஹிட் ஆனது.

    படம் வெளியாகி 22 வருடங்களான நிலையில், ஜெமினி பட போஸில் நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் "என்மேல் அன்பு பொழியும் எல்லோருக்கும் மிக்க நன்றி. சுவாரசியமான அப்டேட் இன்னும் சில தினங்களில் எனி கெஸ்சஸ்?" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதன்மூலம், ஜெமினி படம் ரீ-ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளது என்றும், வரும் ஏப்ரல் 17ம் தேதி இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏற்கனவே பட்ட சூட்டால் சுதாரித்து கொண்டு அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தவிர்த்து நழுவிவிட்டார்.
    • கருணாசை தொடர்ந்து நடிகர் போஸ் வெங்கட்டுக்கும் 5 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வைகை புயல் வடிவேலு தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக வலம் வந்தவர். 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சூறாவளியாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் அவரது துரதிருஷ்டம் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இதனால் வடிவேலுவின் சிரிப்பும் அடங்கிப் போனது. சினிமா வாய்ப்புகள் அரிதான நிலையில் தனது 2-வது இன்னிங்சை மாமன்னன் படத்தின் மூலம் தொடங்கினார். அமைச்சர் உதயநிதியுடன் நடித்த அந்த படத்தில் மாமன்னன் பாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து அவரது 2-வது இன்னிங்ஸ் விறுவிறுப்பானது.

    இந்த நிலையில் இந்த தேர்தலில் அவரை பிரசாரத்துக்கு அழைத்தனர். ஆனால் ஏற்கனவே பட்ட சூட்டால் சுதாரித்து கொண்டு அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தவிர்த்து நழுவிவிட்டார்.

    அ.தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்ய நடிகர்-நடிகைகள் அதிகம் இருப்பதால் தி.மு.க.வும் திரை நட்சத்திரங்களை அதிக அளவில் எதிர்பார்த்தது.

    இந்நிலையில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    இதையடுத்து வடிவேலுக்கு பதிலாக கருணாசை பயன்படுத்த தி.மு.க. முடிவு செய்தது. அதற்கு கருணாசும் ஒத்துக்கொண்டார். தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலில் 33-வது இடத்தில் கருணாஸ் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரை 10 நாட்கள் பிரசாரம் செய்யும்படி தி.மு.க. மேலிடம் அறிவித் துள்ளது.

    கருணாசை தொடர்ந்து நடிகர் போஸ் வெங்கட்டுக்கும் 5 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் 13 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இந்த பயண பட்டியலை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது.

    • 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
    • இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவிருக்கிறார்

    மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் நடிகர் பிரபு தேவா,வடிவேலு,விவேக்,கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டானது.

    விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. அதில் வரும் சிங் இன் தி ரெயின். வொய் ப்ளட் சேம் ப்ளட், வடிவேலு ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். இன்று வரை நாம் அனைவராலும் பார்த்து ரசிக்கப் பட்ட காட்சிகள் அவை. இன்றும் அவை இன்ஸ்டாகிராமில் மீம் டெம்ப்லேட்டுகளாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.

    மனதை திருடிவிட்டாய் படத்திற்கு அடுத்து பிரபு தேவாவும், வடிவேலும் இணைந்து படம் நடிக்கவில்லை.

    இவர்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் படம் நடிக்க மாட்டார்களா என்று ஏக்கம் ரசிகர்களுக்கு இப்போதும் உண்டு.

    இந்நிலையில், 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு "லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்" என பெயரிட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூடிய விரைவிலேயே படகுழுவினரால் அறிவிக்கப்படும் என நம்பபடுகிறது. தற்போது வடிவேலு ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து மாரீசன் எனும் படத்தில் நடித்து வருகிறார். பிரபு தேவா தளபதி விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் கலைஞர் நினைவிடம் சென்று வந்தேன்.
    • வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலும் முடியாது. யாருக்கும் கிடையாது.

    சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா சென்னை பெரவள்ளூர் அகரத்தில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு பேசியதாவது:-

    நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் கலைஞர் நினைவிடம் சென்று வந்தேன். திராவிடம் என்றால் என்னவென்று கேட்பவர்கள் ஒரே ஒருமுறை கலைஞர் நினைவிடம் சென்று பாருங்கள். உள்ளே போனால், அங்கிருக்கும் காட்சிகளை கண்டால், எனக்கு மூச்சு நிற்கும் அளவுக்கு கருணாநிதியின் வரலாறை முதலமைச்சர் மிகச்சிறந்த அளவில் உருவாக்கியுள்ளார். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலும் முடியாது. யாருக்கும் கிடையாது.

    நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் என்ற போதிலும் கலைஞர் கருணாநிதியின் தீவிர பக்தன், தீவிர விசுவாசி. எம்.ஜி.ஆரை நான் வெளியே இருந்துதான் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர்- கருணாநிதி 2 பேரும் நண்பர்கள் தான். ஆனால் கலைஞரின் கதை- வசனத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் அமர்ந்து பேசியிருக்கிறேன். பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் கலைஞர் எனக்கு தைரியம் சொல்லுவார். திரை உலகத்தை அவர் எந்தளவுக்கு நேசித்தார் என்பது எல்லா மக்களுக்கும் தெரியும்.

    23 ஆம் புலிகேசி படத்தை என்னால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனுக்கு போன் செய்து கலைஞரிடம் பேச வேண்டும் என சொன்னேன். உடனே என்ன வென்று பேசினார். நான் உங்களை பார்க்க வேண்டுமென சொன்னேன். எதுவும் பிரச்சினையா? என கருணாநிதி கேட்டார். புலிகேசி படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று சொல்கிறார்கள். ராஜா குதிரை போக விடமாட்டேன் என்று சொல்கிறார்கள். ஏதோ புளூ கிராஸ் அமைப்பில் பஞ்சாயத்து ஆகிவிட்டது என நான் விஷயத்தை சொன்னேன். அதற்கு அவர் என்னிடம், 'ராஜா குதிரையில் போகாம குவாலிஸ்லயா போவார்?' என பதிலடியாக பேசினார்.

    பின்னர் நான் கருணாநிதியை சந்திக்க நேரில் சென்றேன். கிட்டதட்ட 22 நிமிடம் இதற்காக பேசினார். பின்னர் உதவியாளர் சண்முகநாதனை கூப்பிட்டு ஆ.ராசாவுக்கு போன் செய்ய சொன்னார். அவரிடம், 'ராஜா குதிரை போகக்கூடாதுன்னு சொல்கிறார்களாம். உடனே நீ போற மாதிரி ஏற்பாடு பண்ணிரு. நீயும் ராஜா தானே'என கலாய்த்து பேசிவிட்டு போனை வைத்து விட்டார்.

    அதன்பின்னர் என்னை பார்த்து, 'இப்படித்தான் உன் எம்.ஜி.ஆர்.'என பேச ஆரம்பித்ததும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்படித்தான் எம்.ஜி.ஆர். நடித்த காஞ்சித்தலைவன் படம் பண்ணும்போது அதில் புலிகேசி மன்னனாக எம்.ஜி.ஆர். வருவார். அப்போதும் இதே மாதிரி பிரச்சினை வந்தது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. காட்சியை தூக்கி விட்டோம். அதன்பிறகு இப்போது இந்த பட பிரச்சினை வந்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் வெளியாகும் என தைரியம் கொடுத்தார். ஒருவாரத்தில் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் செய்ய வைத்தவர் கலைஞர் கருணாநிதி தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பவதாரிணி நேற்று காலமானார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


    கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் வடிவேலு வருதத்துடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மாரீசன் படத்திலிருந்து இரவு ஷூட்டிங் முடிந்து வந்ததுமே இந்த அதிர்ச்சியான செய்தி என்னை அப்படியே நிலைகுலையச் செய்துவிட்டது. அருமை அண்ணன் இசைஞானி அவருடைய தங்க மகள் பவதாரிணி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு ஒன்றும் புரியவில்லை. 47 வயது பெண். அவர் இறந்த செய்தி நெஞ்சமெல்லாம் நொறுங்கிவிட்டது.


    பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல. அது ஒரு தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும். அவருடைய மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் அனைவரும் இன்னைக்கு நொறுங்கிப்போய் இருக்கிறார்கள். தைப்பூச நாளில் பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் இளைப்பாருவார்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என அழுதபடி ஆடியோவை வெளியிட்டுள்ளார்.


    • வடிவேலு மற்றும் பகத் பாசில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்கள்.
    • இந்த படத்தை இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்குகிறார்.

    மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் வடிவேலுவுடன் பகத் பாசில் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.


    மாரீசன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'மாரீசன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரை வெளியிட்டுள்ளது. மான் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் 'இன்னைக்கு வேட்டை ஆரம்பம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கின்றனர்.
    • புதிய படம் குறித்த அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியீடு.

    தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தனது 98-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அறிமுக இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி இயக்கும் இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கின்றனர்.

    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மாமன்னன் படத்தை தொடர்ந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இதன் தலைப்பு, ரிலீஸ் மற்றும் இதர அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    ×