search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளி"

    • இவ்விமானம் அறிவானந்த வடிவமானது என்று தலப்புராணம் கூறுகிறது.
    • முதல் சுற்றாலையின் வட பகுதியில் அம்பாள் கோவிலும், அதன் கீழ் பால் சரபேசர் கோவிலும் இருக்கிறது.

    சரபேஸ்வரருக்கு கும்ப கோணத்திற்கு அருகில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் திருபுவனம் என்ற ஊரில் உள்ள கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது.

    திரிபுவன வீரபுரம் என்பதே இத் தலத்தின் பழைய பெயராகும்.

    இப் பெயரே இவ்வூர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

    இப் பெயர் இப்போது திருபுவனம் என்று மருவி வழங்கப்படுகிறது.

    இது மட்டுமின்றி விவவனம், திரிபுரவனம், தேவசேத்திரம் என்ற வேறு பல பெயர்களும் இத்தலத்திற்கு உள்ளன.

    ஊரின் நடுவே கிழக்கு நோக்கி இக் கோவில் அமைந்துள்ளது. இதற்கு 3 முக்கிய வாசல்கள் இருக்கிறது.

    அவைமட்டுமின்றி அர்த்த மண்டபத்தின் தென் பகுதியில் ஒன்றும், வட பகுதியில் ஒன்றும் ஆக 2 வாசல்கள் இருக்கின்றன.

    முதல் கோபுரம் 7 நிலைகளுடனும், 2ம் கோபுரம் 3 நிலைகளுடனும் கூடிய வாசல்கள் அழகுபெற செய்கின்றன.

    இக் கோவிலுக்கு 2 பிரகாரங்கள் இருக்கிறது.

    அவற்றுள் முதல் திருச் சுற்றாலையில் திருச்சுற்று மாளிகை இருக்கிறது.

    இம் முதல் திருச்சுற்றாலையில் நடுப்பகுதியில் நடுக்கந் தீர்த்த பெருமாள் எழுந்தருளி இருக்கிறார்.

    கர்ப்ப கிரகத்தின் விமானம் தஞ்சை ராஜராஜேச்சரம், கங்கை கொண்ட சோழேச்சரம் இவைகளின் விமானங்களை ஒத்தது ஆகும்.

    இவ்விமானம் அறிவானந்த வடிவமானது என்று தலப்புராணம் கூறுகிறது.

    முதல் சுற்றாலையின் வட பகுதியில் அம்பாள் கோவிலும், அதன் கீழ் பால் சரபேசர் கோவிலும் இருக்கிறது.

    2ம் திருச்சுற்றாலையில் வசந்த மண்டபமும், யாக சாலையும் அமைந்திருக்கிறது.

    மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெயர் ஸ்ரீகம்பகரேசுவர்.

    தமிழில் நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள்.

    திருபுவன ஈச்சரமுடையாக தேவர் என்பது இக்கோவில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருப்பெயராகும்.

    • திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.
    • ஆயுள் விருத்தி உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

    கருச்சிதைவையும், நம் கருமத்தையும் நீக்குபவள்.

    நம் ஜாதகத்தில் உள்ள ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தி செய்பவள்.

    நம் ஜாதகத்தில் உள்ள பூர்வீக தோஷங்கள், பாவங்களை நீக்கி அருள்பவள்.

    அமாவாசை தினத்தன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஷ்ட ஹோமம். ஸர்பரேஷ்வரர் ஹோமம். சரித்தியங்கர ஹோமம் நடைபெறும்.

    கணபதி ஹோமத்தின் பலன்கள்

    சங்கடங்களும், கஷ்டங்களும், துன்பங்களும் விலகி சகல நன்மைகளும் உண்டாகும்.

    நவக்கிரக ஹோமத்தின் பலன்கள்

    திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.

    அஷ்ட பைரவர் ஹோமத்தின் பலன்கள்

    ஆயுள் விருத்தி உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

    சர்பரேஸ்வரர் ஹோமத்தின் பலன்கள்

    பட்சி தோஷம், பிசு கத்தி தோஷம் (பெண் சாபம்) வாகன தோஷம் நிவர்த்தி ஆகும்.

    பிரத்தியங்கரா தேவி ஹோமத்தின் பலன்கள்

    கிரகங்களால் ஏற்படும் தடைகள், அதனால் உண்டாகும் பாவங்களும் நீங்கி தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த தெய்வத்தை ஆங்கிர அரசரிஷி, பிரத்தி யங்கரா ரிஷி ஆகிய இருவரும் தேவியை கண்டு வழிபட்டனர்.
    • இந்த தேவியை வழிபட்ட ரிஷிகளின் பெயராலே ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி என்று அழைக்கப்பட்டு வருகிறாள்.

    பிரத்தியங்கரா தேவி வழிபாடு குறித்து சேலம் அன்னை உக்ரபிரத்தியங்கரா கோவில் அர்ச்சகர் பூபதி சிவாச்சாரியார் கூறிய தாவது:

    இந்த கலியுகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆதிசக்தி அம்சமாகிய அன்னை ஸ்ரீ அதர்வண பத்ரகாளி.

    இந்த தெய்வத்தை ஆங்கிர அரசரிஷி, பிரத்தி யங்கரா ரிஷி ஆகிய இருவரும் தேவியை கண்டு வழிபட்டனர்.

    இந்த தேவியை வழிபட்ட ரிஷிகளின் பெயராலே ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி என்று அழைக்கப்பட்டு வருகிறாள்.

    இந்த தேவியின் மந்திரத்தை தெரிந்து கொண்டவர். அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆவார்.

    அவர் மூலமாய் இந்த தேவியை வழிபாடு செய்தவன் ராவணேஷ்வரன் மகன் மேகநாதன் எனும் இந்திரஜித் ஆவான்.

    இந்த தேவியின் மகிமை பற்றி புலிப்பாணி முனிவர் மிகவும் விமரிசையாக கூறியுள்ளார்.

    இந்த தேவி ஸ்ரீதேவி எந்திரத்தின் உத்தரதிக்கில் இருப்பவர் இந்த தேவியின் அவதாரம் ஆயிரம் சிங்க முகங்களும் இரண்டாயிரம் கைகளும் கோரைபற்களும் நீல நிறம் உடையவளாகவும், ஆமை மாலையையும் கபால மாலையும் அணிந்து காட்சி தருபவள் அக்கினி சுவாலை கொண்டவள்.

    சிம்ம வாகனத்தில் அமர்ந்து அஷ்ட நாகங்களையும் குடையாக கொண்ட இந்த தேவியின் பெயர் உக்ரகாளி அதர்வண பத்ரகாளி, பிரத்தியங்கரா தேவி எனவும் அழைக்கப்படுகிறாள்.

    இந்த தேவியானவள் விர்பரேஸ்வரர் சக்தியில் இருந்து தோன்றியவள்.

    இந்த தேவியானவள் தர்மம் காத்து அதர்மம் அழித்து இப்பூவுலகை காத்தருளுகிறாள்.

    இந்த தேவியை மங்களம் தரும் மகா காளிதேவி எனவும் அழைக்கப்படுகிறாள்.

    • இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள்.
    • இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு.

    1.அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் திகழும் மஹா பிரத்யங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து, ஆயிரம் சிங்கமுகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றியவள்.

    2.இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள். இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு.இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள். இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு.

    3. இவளே யந்தர, மந்திர, தந்திரங்களுக்கு அதிபதியான அதர்வண பத்ரகாளி ஆவாள்.

    4. இவளது மந்திரத்தை "அங்கிரஸ்' "பிரத்திரயங்கிரஸ்' என்ற இரு ரிஷிகள் சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயராலேயே "பிரத்யங்கிரா' என அழைக்கப்படுகிறாள். இவள் அனுமாரை காவலாக கொள்பவள்.

    5. இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரத்யங்கிரா தேவிக்கு புதுச்சேரி அருகில் 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன் கூடிய கோயில் அமைந்துள்ளது.

    6. மனத்தெளிவு, நோய்கள் குணமாதல், குடும்ப பிரச்னை தீர்தல், பைத்தியம் தெளிதல், விரைவில் திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத் தடை நீங்குதல், கைவிட்டுப்போன பணம் கிடைத்தல் போன்ற சகல விதமான தொல்லைகள் நீங்க இங்கு பிரார்த்திக்கலாம்.

    7. நீல நிற ஆடைகள், சர்க்கரைப்பொங்கல், எள்ளு சாதம், புளியோதரை, தயிர்சாதம், எள்ளுருண்டை, பானகம், கிழங்குவகைகள், உளுந்த வடை, வெண்ணெய், திராட்சை ஜூஸ், ஏலக்காய், ஜாதிக்காய் மாலைகள், நீலம் சிகப்பு நிற பூக்கள், எள்ளுப்பூ, செந்தாமரை போன்ற மலர்களில் பிரத்யங்கிராவுக்கு அதிக விருப்பம்.

    8. வாழை நாரில் கட்டப்பட்ட வாழைப்பூ மாலை. பிரத்யங்கிரா தேவிக்கு மிக மிக விருப்பமான இவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தலாம்.

    9. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜைகள், தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை ஆகியவை பிரத்யங்கிராவுக்கு விருப்பமானவை.

    10. இங்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசி வேளையில் பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகத்தில் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மகான்கள் ஆகியோர் சூட்சும (கண்களுக்கு புலப்படாத) ரூபத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பது ஐதீகம்.

    11. இந்த யாகத்தினால் நாம் நினைத்த காரியங்கள், நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் ஆகியவற்றை அடையலாம்.

    • ஒன்றை விரும்பி ஒன்றை வெறுப்பது என்ற எண்ணம் இருந்தால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.
    • எல்லாவற்றிலும் சரி, சமத்துவமான பாவம் ஏற்பட்டால் தான் ஞானத்தை அடைய முடியும்.

    சிவலீலைகளில் ஒன்று அந்தகன் என்ற அரசுனை பைரவ மூர்த்தியாக சிவபெருமான் வதம் செய்தது.

    சிவபெருமான் பைரவரை அழைத்து அந்தகனுக்கு அந்திய காலத்தை கொடுக்கும் ரகசியத்தை சொல்லி அனுப்பினார்.

    பைரவர் அந்தகனை சம்ஹரித்துத் திரும்பி வருகிறார். பைரவரின் பத்னியாதலால் பைரவி என்ற பெயரும் உண்டு.

    மங்கள் ரூபிணி :

    ஒன்றை விரும்பி ஒன்றை வெறுப்பது என்ற எண்ணம் இருந்தால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.

    எல்லாவற்றிலும் சரி, சமத்துவமான பாவம் ஏற்பட்டால் தான் ஞானத்தை அடைய முடியும்.

    காளியை தாமஸீ என்கிறது தேவி மகாத்மியம்.

    மோட்சம் என்பது இவளது கிருபையாலேதான் கிடைக்கிறது.

    மோட்சம் அடைவது என்றால் ஏதோ இறந்த பின்பு கிடைப்பது என்பதில்லை.

    இவள் அருள் இருந்தால் உயிருள்ளபோதே மோட்ச நிலை கிடைக்கும்.

    இதற்கு "உன்மனீ நிலை" என்பர்.

    பிரத்தியங்கிராவின் தயவு இருந்தால் இத்தகைய உன்மனீ நிலை எளிதில் ஏற்படும்.

    • பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்.
    • எந்த காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும்.

    நரசிம்மருக்கும், சரபருக்கும் இடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்ட போது கண்ட பேருண்டம் என்ற பட்சியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார். கண்ட பேருண்டம் சரபப் பட்சிக்கு எதிரியாகும்.

    சரபருக்கு கோபத்தில் அவர் நெற்றிக்கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள்.

    இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுந்தி விட்டாள்.

    சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும், சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவிகள்.

    இவர்கள் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர்.

    பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியே தான்.

    சரபமூர்த்தி நரசிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக "உக்ரா" என்று அழைக்கப்படுகிறாள்.

    பிரத்தியங்கிராவுக்கு ஆயிரம் முகங்கள். இம்முகம் எல்லாம் சிங்க முகம் போலவே இருக்கும்.

    இரண்டாயிரம் கைகள், பெரிய சரீரம், கரியநிறம், நீள ஆடை இப்படி தியானித்து உபாசித்தால் நாட்டுக்கோ, மக்களுக்கோ சத்ரு பயம் ஏற்படாது.

    தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்தியங்கிரா தான்.

    இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்று விட்டால், அந்த ராமலட்சுமணர்கள் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித் நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான்.

    தன்னை உபாசிப்பவன் நல்லவனா, கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள்.

    பிரத்தியங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்து விட்டு மறுவேலை பார்த்தார்.

    பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்.

    எந்த காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும்.

    • சன்னதிக்கு உள்ளே அனைத்து பக்க சுவர்களிலும் பல கதைகளை ஓவியமாக வரைந்து உள்ளார்கள்.
    • அங்கு பிரத்யங்கரா தேவிக்கு துணையாக அறுபத்தி நான்கு பைரவர்கள் எட்டு பிரிவாக வகுத்திருக்கிறாகள்..

    கோவைக்கு அருகில் சிங்காநல்லூரில் சரபேஸ்வரார் - பிரத்யங்கரா தேவி கோவில் ஒன்று சிறப்பாக அமைந்துள்ளது.

    ஆலயத்தில் ஒவ்வொரு மாத அமாவாசை தினத்தன்றும் காலை பத்து மணி முதல் பகல் ஒரு மணிவரை தேவிக்கு செய்யப்படும் நிகும்பலா யாகம் எனப்படும் யாகத்தில் மூட்டை மூடையாக சிவப்பு மிளகாயை யாகத் தீயில் கொட்டி யாகம் நடைபெறுகின்றது.

    தேவியின் சக்தியை காட்டும் அதிசயம் தீயில் போடப்படும் மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவதும் இல்லை,

    எவருடைய கண்களும் எரிவதும் இல்லாத அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காண முடியாது.

    ஆலயத்துக்குள் அமர்ந்து உள்ள பிரத்தியங்கா தேவி நான்கு சிங்கங்கள் பூட்டப்பட்ட ரதத்தில் அமர்ந்தவாறு எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். முகம் சிங்கத்தினுடயது .

    கழுத்திலோ மனித கபாலத்தில் கோர்த்த மாலைகள்.

    தலை மீது படம் எடுத்து ஆடும் எழு தலை நாகம். பயங்கரமான தோற்றம். பிரத்தியுங்கரா தேவி அதர்வண வேதத்தின் அதிபதி.

    சன்னதியின் நுழை வாயிலில் அவளுக்கு வலதுபுறம் மிகப் பெரிய சரபேஸ்வரர் மற்றும் அகஸ்தியர், இடது புறம் இரண்டு ரிஷிகளான பிரத்தியங்கரா மற்றும் அங்கீரசா போன்றவர்கள் என அவர்களின் உருவம் அந்த சுவற்றில் பதிக்கப்பட்டு உள்ள தாமிரத் தட்டில் காணப்படுகின்றது.

    சன்னதிக்கு உள்ளே அனைத்து பக்க சுவர்களிலும் பல கதைகளை ஓவியமாக வரைந்து உள்ளார்கள்.

    அங்கு பிரத்யங்கரா தேவிக்கு துணையாக அறுபத்தி நான்கு பைரவர்கள் எட்டு பிரிவாக வகுத்திருக்கிறாகள்..

    ஓவியங்களில் பைரவர் அன்னம், மாடு, மயில், இரண்டு விதமான நாய்கள், கழுகு, குதிரை, யானை மற்றும் கழுதை போன்ற வாகனங்களுடன் காட்சி தருகிறார்.

    ஆலயத்தில் அர்ச்சனைகள் செய்யப்படுவது இல்லை. தேவிக்கு பூஜை மட்டுமே செய்யப்படுகின்றது.

    ஆலய சன்னதிகள் முழுவதும் மேல் கூரையில் உத்ராக்ஷ மணிகளினால் ஆன மாலைகள் பந்தல் போடப்பட்டு உள்ளதைப் போல தொங்க விடப்பட்டு உள்ளன என்பதனால் அங்கு யாரும் தீபம் எற்றுவதையோ, கற்பூரம் கொளுத்துவதையோ அனுமதிப்பதும் இல்லை.

    ஆலய தல விருஷத்தில் ஐந்து விதமான இலைகளைக் கொண்ட அரச மரம் உள்ளது.

    ஆலயத்தின் எட்டு திக்குகளிலும் மயானம் உள்ளது.

    இரவில் ஆலயத்துக்குள் எவருமே தங்க அனுமதிப்பது இல்லை.

    இங்கு வந்து இந்த தேவியை வணகுவதின் மூலம் ஏவல், பில்லி, சூனிய வைப்புக்கள் போன்றவை விலகுகின்றன. -நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. -பூர்வ ஜென்ம பாபங்கள் விலகுகின்றன.

    நமக்கு தொல்லை தருபவர்களின் எண்ணம் நிறைவேறாது.

    • சுமார் 12 அடி உயரமுள்ள இந்த ஐம்பொன் சிற்பம் பார்க்க அழகான தோற்றமுடையது.
    • இங்குள்ள பிரத்தியங்கிரா தேவி சிலை பஞ்சலோகத்தில் 13 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    சென்னை, தாம்பரம், சேலையூர் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் மகாலட்சுமி நகரில் அமைந்துள்ளது பிரத்தியங்கிரா தேவி ஆலயம்.

    ஸ்ரீ சாந்தானந்தா சுவாமிகள் சென்னை, ராஜ கீழ்ப்பாக்கத்தில் உள்ள கந்தாஸ்ரமத்தில் இந்த பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயம் அமைத்துள்ளார்.

    இந்த ஆலயத்தில் ஸ்ரீபுவனேஸ்வரியும், சுவாமிநாதனும் எதிரெதிரே தனித்தனியாகக் கோவில் கொண்டிருக்கிறார்கள்.

    இவர்களையடுத்து ஸ்ரீசரபேஸ்வரரும் ஸ்ரீபிரத்தியங்கிராவும் தனித்தனியே கோவில் கொண்டிருக்கின்றனர்.

    இந்த நான்கு திருவடிகளுக்கும் மத்தியில் அழகான தியான மண்டபம் அமைந்துள்ளது.

    அபய, வரத முத்திரைகள் தாங்கி பாசமும் அங்குசமும் தரித்தவளாக அன்பும் சாந்தமும் நிறைந்த திருமுகத்தினளாய் பேரழகுடன் வீற்றிருக்கிறாள் ஸ்ரீபுவனேஸ்வரி.

    அகில உலகத்தையே ஆளும் அந்த நாயகியின் பக்கத்தில் முருகப்பெருமான் இடக்கையை ஊர்ஹஸ்தமாகவும் வலக்கரத்தில் தண்டூன்றியும் காட்சி தருகிறார்.

    பறவை, விலங்கு, மனிதன் மூன்றும் கலந்த வடிவாய். தலையில் பிறை நிலா விளங்க மான், மழு, நாகம், தீ, இந்நான்கையும் ஏந்திய கரத்தினராய்க் காட்சி தருகிறார் ஸ்ரீசரபேஸ்வரர்.

    இவர் ஸ்ரீநரசிம்மரின் ஆவேசத்தைத் தணிக்கும் பொருட்டு சிவபெருமானால் மேற்கொள்ளப்பட்ட திருவடிவம்.

    சுமார் 12 அடி உயரமுள்ள இந்த ஐம்பொன் சிற்பம் பார்க்க அழகான தோற்றமுடையது.

    இங்குள்ள பிரத்தியங்கிரா தேவி சிலை பஞ்சலோகத்தில் 13 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு உள்ள சிறப்பு அம்சம் இதுவாகும்

    இந்தப் பிரத்தியங்கிரா தேவி டமருகம், பாசம், கபாலம், சூலம் நான்கையும் தரித்தவளாய் சிம்ம வாகனத்தில் அமர்ந்து ஒளிதரும் பெரு விழிகளும், தெற்றுப்பற்களும், கோரைப்பற்களும் துலங்க காட்சி தருகிறாள்.

    தலைக்கு மேலே நாகம் குடையாய் கவிழ்ந்திருக்கிறது. பாதத்து அருகே காளியின் மந்திரத்தை வெளிப்படுத்திய அங்கிரஸ், பிரத்தியங்கிரஸ் ஆகிய இரு முனிவர்களும் கைகூப்பித் தொழுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் அரிய தரிசனங்களாக பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் தத்தாத்ரேயரின் வடிவங்கள் ஆகிய சிலைகள் காட்சி தருகின்றன.

    அபயம் என்று அலறிப் பணிந்த உயிர்களைக் காக்கும் அற்புத தேவி இந்தப் பிரத்தியங்கிரா.

    அதர்வணப் பத்ரகாளியும் இவளே. இவளை வழிபடும் எவரும் துன்பத்தின் நிழல்கூட தன் மீது படாமல் வாழ்வார்கள்.

    இந்தக் காளியை வழிபடும் எவரையும், யாரும் பகைப்பதோ, விரோதமாக்குவதோ கூடாது.

    பிரத்தியங்கிரா தேவியை தியானிப்பவர்களிடம் பகைமை பாராட்டக்கூடாது.

    அப்படி பக்தர்களைக் காக்கும் கவசமாகத் திகழ்கின்றாள் இந்தப் பிரத்தியங்கிரா தேவி.

    • ஆடி மாதத்தில் மகப்பேறு, குழந்தை செல்வம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் செய்யப்படுகிறது.
    • நீண்ட ஆயுள் விருத்திக்கு மிருத்யுஞ்ஜெய யாகம், நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்க மகா சுதர்சன யாகம் செய்யப்படுகிறது.

     ஆடி மாதத்தில் மகப்பேறு, குழந்தை செல்வம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம், நீண்ட ஆயுள் விருத்திக்கு மிருத்யுஞ்ஜெய யாகம், நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்க மகா சுதர்சன யாகம், கல்வி, கலைத்துறை வளர்ச்சி அடைய ராஜமாதங்கி யாகம், பகையை வெல்ல மகாவராகி யாகம், செழிப்பான வாழ்வு பெற வனதுர்கா யாகம், அன்புடன் உலக மக்கள் ஆனந்தமாய் வாழ ஸ்ரீ சதசண்டீமகா யாகம் நடைபெறுகிறது.

    யாகங்களில் கலந்து கொண்டு அதன் மூலம் நமக்கு தெய்வ பலன், ஆசி கிடைப்பதாக பல புராணங்களில் கூறி உள்ளதால் மேற்கண்ட யாகங்களில் கலந்து கொள்ள ஸ்ரீமகாபஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

    இங்கு 24 மணி நேர அன்னதான ஏற்பாடுகளை ஸ்ரீமகாபஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி தர்மஷேத்ரா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர். 

    • ஸ்ரீமகா புத்திர காமேஷ்டி யாகத்தில் கலந்து கொள்ள தம்பதிகள் மட்டுமே வரவேண்டும்.
    • யாகம் முடிந்தவுடன் தம்பதிகளுக்கு வெண்ணை பிரசாதம் வழங்கப்படுகிறது.

    சிவகங்கை மானாமதுரையில் உள்ள ஸ்ரீமகாபஞ்சமி பிரத்தியங்கரா தேவி கோவிலில் காலை 6 மணிக்கு மகாகணபதி யாகத்துடன் தொடங்கும் இந்த யாகம் இரவு 8 மணி வரை நோய், நொடியின்றி 100 வயதுடன் வாழ வேண்டி தன்வந்திரி யாகத்துடன் முடிவடைகிறது.

    இந்த புத்திர காமேஷ்டி யாகத்தில் மகப்பேறு, குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதிகள் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து கலந்து கொண்டு புத்திர பாக்கியம் பெற்று உள்ளனர்.

    ஸ்ரீமகா புத்திர காமேஷ்டி யாகத்தில் கலந்து கொள்ள தம்பதிகள் மட்டுமே வரவேண்டும்.

    யாகம் முடிந்தவுடன் தம்பதிகளுக்கு வெண்ணை பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இந்த வெண்ணை பிரசாதத்தை குழந்தை போல் தவழும் கிருஷ்ணர் படம் முன்பு பூஜை செய்தபின் சாப்பிட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைத்து விடுகிறது என பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலில் உள்ள வேப்பமரத்தின் கீழ் உள்ள குண்டு முத்து மாரியம்மனுக்கு தொட்டில் கட்டியும், இங்கு தரும் கூழ் பிரசாதத்தை சாப்பிட்டாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் உள்ளது.

    குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் பின் குண்டு முத்துமாரியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதமும் குண்டு முத்துமாரியம்மனுக்கு கூழ்காய்ச்சி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    • அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர்.
    • அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர்.

    அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர்.

    அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர்.

    அருணகிரிநாதரின் புகழில் பொறாமையுற்ற சம்பந்தன்,

    தனக்கும் அருணகிரிநாதருக்குமிடைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டார்.

    அதாவது இருவரில் யார் தங்களுடைய கடவுளை நேரில் தோன்ற செய்விப்பது என்பது தான் போட்டி.

    இப்போட்டியில் சம்பந்தனால் தனது தெய்வமான காளியைத் தோன்ற செய்ய இயலவில்லை.

    ஆனால் அருணகிரிநாதர் வேண்டுதலின் பேரில் முருகப்பெருமான் நேரில் காட்சியளித்தார்.

    இந்நிகழ்ச்சிக்குப் பின் இத்தலம் (திருவண்ணாமலை) முருகபக்தர்கள் யாத்திரை செல்லும் புகழ் மிக்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    • மருத்துவச்சியோ ஏதோ கெடுதி நடப்பதற்கான அறிகுறி கனவாக கண்டது போல் திடுக்கிட்டு எழுந்தாள்.
    • மனைவி காளி தேவியின் அம்சம் ஆவார்.

    ஆனைமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இளம் கணவன் மனைவி வாழ்ந்து வந்தார்கள். இனிதே வாழ்ந்த இல்லாள் நிறைமாத கர்ப்பிணியானாள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பினால் பிரியமனமின்றி அவள் தன் தாய்வீடு செல்லாமல் கணவருடனே இருந்தாள்.

    பிள்ளை பேறுகாலம் நெருங்கி விட்டது. இடுப்பு வலி ஆரம்பித்தது. மனைவியின் வேதனையைக் கண்ட கணவன் மருத்துவச்சியை அழைத்து வர புறப்பட்டான். ஆனால் மனைவியை தனியாக விட்டுவிட்டு செல்வதற்கு மனமில்லை. துணைக்கு ஒருவரும் இல்லை.

    நன்றாக இருட்டி விட்டது. பகலிலே செல்வதற்கே அச்சமாக இருக்கும் அடர்ந்த காடு, திருடர்கள் துஷ்டர்கள் பயம் வேறு அதிகம். என்ன செய்வது என்று யோசித்தான். அவளுக்கோ பேறுகால வேதனை அதிகமானது.

    கணவனின் தவிப்பை புரிந்து கொண்ட அவள் கணவனை பார்த்து, இனியும் நான் இங்கிருப்பது சரியல்ல. என் தாய்வீடு இரண்டு கல் தொலைவில் உள்ளது. அந்த ஊரில் தெய்வீகத் தன்மையுடையவளும் தர்ம சிந்தனையும் கொண்ட ஒரு மருத்துவச்சி இருக்கிறாள் அவள் முக்காலம் உணர்ந்தவள். பின்வருவதை முன் சொல்லும் ஆற்றல் உடையவள். என்னை அங்கு அழைத்துச் செல்லுங்கள். நான் மெதுவாக நடந்து வருகிறேன் என்றாள்.

    அவள் சொல்வது அவனுக்கு சரி எனப்பட்டது. இருவரும் புறப்பட்டார்கள். மெதுவாக நடந்து ஒரு கல் தொலைவு சென்றார்கள். மை இருட்டாக இருந்தது. ஆந்தைகளின் அலறலும், கோட்டான்களின் சத்தமும் அச்சத்தை அதிகப்படுத்தியது. அவளுக்கோ பிரசவ வலி அதிகமானது.

    கால்கள் பின்னின் ஓரடி எடுத்து வைப்பதும் கடினமாக இருந்தது. அவன் கைதாங்கலாகப் பிடித்து கொண்டான். ஆனாலும் வேதனை அதிகமானதால் என்னால் இனி நடக்க முடியாது என்று உட்கார்ந்து விட்டாள். அவன் என்ன செய்வது என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தான். ஊரை நெருங்கி தான் விட்டார்கள். அதோ விளக்கொளி தெரிந்தது.

    ஆனால் அவளோ வேதனை தாங்க முடியாதபடி, என்னால் நடக்க முடியாது, நீங்கள் வரும் வரை நான் பத்திரமாக இருக்கிறேன், நீங்கள் சென்று வாருங்கள், என்று கணவனை அனுப்பி வைத்தாள்.

    அவனும் வேறு வழியின்றி மிகுந்த மனக்கஷ்டத்துடன் உன் விருப்பப்படியே சென்று வருகிறேன் நீ தைரியமாக இரு என்று கூறி விரைந்து வெளிச்சம் வந்த திசை நோக்கிச் சென்றான்.

    அங்கு சென்று விசாரித்து மருத்துவச்சியின் வீட்டுக் கதவை தட்டினான்.

    மருத்துவச்சியோ ஏதோ கெடுதி நடப்பதற்கான அறிகுறி கனவாக கண்டது போல் திடுக்கிட்டு எழுந்து கதவைத் திறந்தாள். அவன் தன் மனைவி பற்றி கூறி உதவிக்கு அவளை அழைத்தான். உடனே அவள் மருத்துவத்திற்கான பொருட்களை எடுத்துக் கொண்டு தயாரானாள்.

    அதற்குள் அக்கம் பக்கத்தில் விசாரித்து அந்த ஊர் நாட்டாமை, பூசாரி மற்றும் விவரமான சில ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தான்.

    அதற்குள் மருத்துவச்சியும் கதவை பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள். அனைவரையும் அழைத்துக் கொண்டு அவன் விரைந்து நடந்தான்.

    ஆனால் அவன் மனைவியை அங்கு காணவில்லை. அப்பொழுது கடவுளே இது என்ன சோதனை நான் கண்ட கனவு நிஜமாகியதே என்று மருத்துவச்சி கதறிக் கொண்டு ஓர் இடத்திற்கு ஓடினாள். அங்கே மிகவும் கோரமான காட்சியைக் கண்டார்கள். அவன் மனைவி இறந்து கிடந்தாள்.

    கதறி அழுத அவன் மருத்துவச்சியை நோக்கி தாயே என் மனைவியும் குழந்தையை இப்படி கோரமாக இறந்து கிடப்பதற்கும், நீங்கள் ஏதோ கனவு கண்டதாகச் சொன்னீர்களே அதற்கும் என்ன சம்பந்தம்? என்று வேதனையுடன் கேட்டான். இதைக் கேட்டதும் அந்த மருத்துவ மூதாட்டி தான் கண்ட கொடூரக் கனவு பற்றி கூறினாள்.

    உங்கள் மனைவி காளி தேவியின் அம்சம் ஆவார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், இந்த காட்டுப்பகுதியில் வந்த போது அரக்கன் ஒருவன் அவளை வழிமறித்தான். அந்த அரக்கனிடம் இருந்து தப்ப அவள் ஓடினாள். அப்போது ஓடும் வேகத்தில் அங்கு கிடந்த மாட்டுச்சாணியில் கால் வைத்து வழுக்கி விழுந்து விட்டாள். துரத்திக் கொண்டு வந்த வஞ்சகன் அவளைத் தொட முயன்றான்.

    காளிதேவியை, உலக ரட்சகி, ஜெகன் மாதா என்று தெரிந்தும் அவளின் கையைப் பிடித்தான். அவ்வளவுதான். மேகம் திரண்டு மின்னலடித்து மின்னல் தாக்கிய அவன் கண் குருடாக அலறிக் கொண்டு ஓடினான். என்ன நடந்தது? என்று உணரும் முன் அவள் கீழே சரிந்தாள்.

    கர்ப்பத்தில் இருந்த சிசுவும் உயிரற்று வெளியில் வந்தது. அவள் உடலிருந்து ஆவி ஜோதி ரூபமாகி வானளாவி நின்றது. அதில் கோடி சூரியப்பிரகாசமாய் ஒளிர்ந்தது. மேல் எழும்பிய ஜோதி, காளி போல் ஆக்ரோஷமாக சுழன்று அவனை பிடித்து இழுத்து நெஞ்சைப் பிளந்து கொண்டு வந்து அப்பெண்ணின் காலடியில் போட்டது. இப்படித்தான் நான் கனவு கண்டேன் என்று அந்த மருத்துவச்சி கூறினாள்.

    இதை கேட்ட கணவன் அழுது புலம்பினான். இந்த அடர்ந்த காட்டில் என் மனைவியை தனியே விட்டு இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டனே! தெய்வமே இது என்ன சோதனை, என் மனைவியையும் குழந்தையையும் இப்படி பறிகொடுத்துட்டேனே என்று கண்ணீர் விட்டான்.

    அங்கு கூடி இருந்தவர்கள் அதிர்ச்சியுற்று செய்வதறியாது திகைத்து நின்றார்கள். அப்பொழுது அவர்கள் எல்லோரையும் பார்த்து ஞானிக்கு நிகரான மருத்துவ முதாட்டி இறந்து போன தாயும் சேயும் சாதாரணமானவர்கள் அல்ல. இவர்கள் அம்மனின் அவதாரம். இவர்கள் சாதாரணமாக பிறக்கவில்லை.

    வானத்தில் இருந்து மண்ணிற்கு தேவதைகள் போல தேரில் வந்தவர்கள். விண்ணகத்திலுள்ள தேவர்களும் முனிவர்களும் பூமாரி பொழிவது என் அகக்கண்களுக்குத் தெரிகிறது. இவர்கள் அவதார நோக்கம் நிறைவேறியபடியால் மீண்டும் தெய்வமானார்கள் என்றாள்.

    மாட்டுச்சாணியில் வழுக்கி விழாமல் இருந்திருந்தால் வேறு ஏதாவது நடந்திருக்கலாம் என்று அங்கிருந்த நாட்டாமைக்காரர் கூறினார். அதற்கு மூதாட்டி, அய்யா அது அப்படி இல்லை இவளின் மானிடப் பிறவி எடுத்து இந்த சாணியை மிதித்தால் இது சாப விமோச்சனம் அடைந்தது என்று கூறினாள்.

    சாணிக்கு சாப விமோச்சனமா? அது எப்படி? என்று அந்த ஊர் பூசாரி கேட்க, மீண்டும் மருத்துவ மூதாட்டி ஒரு விளக்கம் அளித்தாள்.

    முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருபாற்கடலை கடைந்த போது அதில் இருந்து காமதேனு கற்பகவிருட்சம் போன்ற பல அரிய பொக்கிஷங்கள் கிடைத்தன.

    அதில் காமதேனுவையும், கற்பக விருட்சத்தையும், வெள்ளையானை (ஐராவதம்) ஆகியவற்றை தேவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதைக் கண்டு பொறுக்காத அசுரர்கள் காமதேனுவை கைப்பற்ற ஆசை கொண்டு அதை இழுத்துச் செல்ல முயன்றார்கள். இதை உணர்ந்த காமதேனு பார்வதி பரமேஸ்வரனை தியானித்து அடைக்கலம் வேண்டி சரணடைந்தது. அதற்கு இரங்கி பார்வதி பரமேஸ்வரரும் அஞ்சாதே என்று கூறி ஒரு நந்தவனத்தில் அடைக்கலம் கொடுத்தார்கள்.

    இதற்கிடையில் தேவர்கள் தங்கள் காமதேனுவை காணாமல் தேடி அலைந்தார்கள். முடிவில் பார்வதி பரமேஸ்வரனிடம் முறையிட எண்ணி தவம் இருந்தனர். இது கண்ட பார்வதி தேவியும், காமதேனுவைப் பார்த்து உன்னை அழைத்துச் செல்ல தேவர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூற அப்பொழுது காமதேனு அசுரர்கள் பிடித்து இழுத்த போது ஏற்பட்ட பயம் காரணமாக பார்வதி தேவியின் முன்தான் சாணம் போட்டதை இழிசெயலாக கருதி வருத்தப்பட்டது.

    அதற்கு பார்வதிதேவி, நீ செய்த இச்செயல் வருந்தத்தக்கதல்ல. இது நான் இந்த பூமியில் அவதாரம் எடுப்பதற்காகவே நடந்தது என்றாள்.

    காமதேனுவும் மகிழ்ந்து தேவியிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தது. தாயே ஈஸ்வரி பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல உன் அவதாரத்தோடு என் பெயரும், இந்த நந்தவனமும் புனிதமாக விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

    தேவியும் ஆகட்டும் என அருள்பாலித்து மேலும் காமதேனுவிடம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் எப்படி உருமாறி அவதாரமெடுத்து வந்தாலும் மக்கள் அடையாளம் கண்டு என்னை போற்றி வழிபடுகிறார்களோ, அதுபோல் உன் அம்சமாக வழிவரும் பசுக்களால் போடப்படும் சாணமும், கோமியமும் புனிதப் பொருளாக கருதப்படும்.

    தேவர்களும், மானுடர்களும் அவைகளை துஷ்ட நிவாரணியாக பூஜாதிகாரியங்களுக்குப் பயன்படுத்துவார்கள். உன் அம்சமாக பூமியில் விளங்கும் பசுக்களை கோமாதா என அனைவரும் வணங்குவார்கள் என்று ஆசீர்வதித்தாள்.

    காமதேனுவும் அன்னையின் அன்பான அருள்வாக்கினால் பயம் தெளிந்து மகிழ்ச்சியுடன் வணங்கி விடைபெற்றுச் சென்றது. காமதேனுவை தேவர்களிடம் கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியாகச் சொன்னாள்.

    இந்த காடே அந்த நந்தவனம். அம்பிகையின் அவதாரமான இந்த பெண் இங்கு கிடந்த புனிதமான சாணியில் வழுக்கி விழுந்து நமக்கெல்லாம் அடையாளம் காட்டி நாம் பூஜிக்கும் அம்மனாக அவதரித்துள்ளாள் என்றாள்.

    மேலும் இந்த பெண் பிறவியில் பிரியவிரதன் மகளாகப் பிறந்து அம்பிகையின் குழந்தையாக ஆட்கொள்ளப்பட்டாள் என்றும் மருத்துவ மூதாட்டி கூறினாள். அப்படியா அது என்ன கதை என்று அனைவரும் கேட்டனர். அதற்கும் மூதாட்டி விளக்கம் அளித்தனர். அப்பெண்ணின் கணவன் பிரியவிரதன் யோகமார்க்கமே சிறந்ததென்று இல்லறம் ஏற்காமல் வாழ்ந்து வந்தான். இது கண்ட பிரியவிரதனின் தந்தை மகனிடம் நீ இல்லறம் ஏற்காவிடில் உனக்கு பிதுர்க்கடன் செய்ய கூட புத்திரபேறு இல்லாமல் போய்விடுமே என்றான்.

    ஆனால் மகனோ திருமணத்தை மறுக்கவே பிரிய விரதனின் மனம் மாறியது. அவனுக்கு திருமணமானது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் புத்திர பாக்கியம் இல்லை.

    இதனால் கவலையடைந்த பிரியவிரதனும் அவன் மனைவி மாலதியும், புத்திர காமேஷ்டி யாகம் செய்து ஈஸ்வரியை தியானிக்க, தாயும் அருள் கனிந்தாள். மாலதி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியானாள்.

    அவளுக்கு பேறுகாலத்தின் போது தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்த சிசு, வானத்தை பார்த்த விழிகளுடன் மல்லாந்து இருந்து அது வெறித்துப் பார்த்தபடி உயிரற்றுக் கிடந்தது. இது கண்டு பெற்றோர் துடித்தார்கள்.

    அழுது புலம்பி அந்த ஆதிபராசக்தியிடம் முறையிட்டார்கள். குழந்தையை அம்மன் காலடியில் போட்டான் பிரியவிரதன். திருமணம் வேண்டாம் என்றிருந்த என் மனதை மாற்றி என்னை சம்சாரசாகரத்தில் வீழ்த்தி பாசவலைக்குள் போட்டாயே நான் என்ன பாவம் செய்தேன்? இந்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. என் உயிரையும் எடுத்துக்கொள் என புரண்டு அழுதான்.

    கருணை உள்ளம் கொண்ட சக்திதேவி மனம் இரங்கி ஜோதி ரூபவதியாக காட்சியளித்தாள். பிரிய விரதா மனம் கலங்காதே. இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் இல்லறம். இக்குழந்தை என்னுடைய அம்சமாக உனக்கு வந்து பிறந்துள்ளது. என் அருளால் இது உயிர்பெறும். உனக்கு நீ விரும்பியது போல் ஆண் குழந்தை பிறக்கும்.

    அதுவரை இப்பெண் குழந்தையை அன்போடு வளர்த்துவா. குறிப்பிட்ட காலத்தில் அவள் என்னோடு ஐக்கியமாவாள். பிறகு காமதேனுவின் வேண்டுகோளுக்கேற்ப மறுபடியும் என் அம்சமாக தர்மத்தை காக்க இப்பூமியில் அவதரிப்பாள் என கூறி அருள்புரிந்தாள்.

    அதன்படி மாலதியின் குழந்தையாக அவதரித்து இன்று மண்ணில் துஷ்டனை சம்ஹாரம் செய்து தர்மத்தை காக்கும் பொருட்டு காமதேனுவின் மாட்டுச்சாணத்தில் வழுக்கி விழுந்து தெய்வமானாள்.

    இவள் அன்னை பராசக்தியின் அவதாரம். மக்கள் குறை தீர்க்கும் அருள் உடையவளாகவும், பிணி தீர்க்கும் மருந்தாகவும் வையகம் போற்றும் மாபெரும் வடிவாகவும், வடிவாம்பிகையாகவும், நீதி வழங்கும் துலாபாரமாகவும் விளங்குவாள் என கூறினாள்.

    இது கேட்டு அங்கு கூடி இருந்தவர்கள் ஆறுதல் அடைந்தார்கள். அப்பெண்ணின் கணவனும் சற்று மனதை தேற்றிக் கொண்டு, அவள் தெய்வப்பிறவி உலகை ரட்சிக்க வந்தவள் என்று எண்ணி மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

    விதிக்குட்பட்டதுதான் மனிதப்பிறவி தெய்வமே மனிதன் அவதாரம் எடுத்தாலும் விதிவசத்திற்குற்பட்டு மனித அவஸ்தை பட்டுத்தான் தீர வேண்டும். அதன்படி இப்பொழுது அக்கிரமத்தையும், அதர்மத்தையும் செய்து வந்த இந்த கொடிய அரக்கனை வேரறுத்து சம்ஹாரம் செய்தாள்.

    இவள் பராசக்தியே. இப்பெண் தெய்வத்தை மாதர்குலமே போற்றிக் கொண்டாடும். நாம் அனைவரும் இந்த மாபெரும் சக்தியைத் துதித்து வணங்குவோம் என அனைவரும் கைதொழுதனர். அம்மனுக்குரிய மஞ்சள் பட்டாடை அணிவித்து சமாதானப்படுத்தினார்கள்.

    அனைவருக்கும் அருள்புரியும் பொருட்டு பராசக்தி தேவி, தியானம், ஜெபம், நிஷ்டை சமாதி முதலிய நான்கு நிலைகளில் ஒன்றான சமாதி நிலையில் வைத்து மண்மேடையாக்கினார்கள். அதன் மேல் அம்மன் உருவத்தை மண்ணால் செய்து வைத்துவிட்டு வந்தார்கள்.

    ஆனால் மக்கள் அந்த பக்கம் செல்லவில்லை. சமாதி என்று நினைத்து பயந்தார்கள். இவ்வாறிருக்க ஒரு நள்ளிரவில் சாமக்கோடாங்கி ஒருவன் பூஜை நடத்த மயானத்திற்கு சென்றான். அப்பொழுது அந்த அம்மன் சமாதியான இல்லத்தில் ஓர் அரிய காட்சியைக் கண்டான். மெய்சிலிர்த்தான்.

    தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், காளி பைரவியும் அங்கு வழிபாடு செய்வதை பார்த்து அந்த அம்மனின் மகாசக்தியை ஊர் மக்களுக்கு சொன்னான். பிறகு ஊர்க்காரர்கள் அனைவரும் அங்கு சென்று வழிபட ஆரம்பித்தார்கள். நாளடைவில் அது மாசாணி தலமாக மாறி புகழ்பெற்றது.

    ×