என் மலர்
நீங்கள் தேடியது "யாஷிகா ஆனந்த்"
- 'கவலை வேண்டாம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.
- 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் யாஷிகா பிரபலமானார்.
2016-ஆம் ஆண்டு வெளியான 'கவலை வேண்டாம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின்னர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

யாஷிகா ஆனந்த்
அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்ததன் மூலம், படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. இதனிடையே எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்த்
சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி பல ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்தும் உள்ளார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது புதிய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
Good evening ❤️?✨? #twitterfam #loveu pic.twitter.com/fTyiTmrElV
— Yashika Anand (@iamyashikaanand) March 21, 2023
- நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
- இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்குமூலத்தில் தெரியவந்தது.

தொடர்ந்து படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று முன்தினம் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் இவர் ஆஜராகாததால் வரும் 25-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
- இவருக்கு சமீபத்தில் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்குமூலத்தில் தெரியவந்தது.

தொடர்ந்து படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மார்ச் 21-ஆம் தேதி செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் இவர் ஆஜராகாததால் 25-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இவர் தற்போது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
- இயக்குனர் ஜெனித்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சைத்ரா'.
- இப்படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஜெனித்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சைத்ரா'. மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கும் இப்படத்திற்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 24 மணிநேரத்தில் நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

'சைத்ரா' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
- இந்த வழக்கின் விசாரணைக்காக யாஷிகா ஆனந்த் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்.
நடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

யாஷிகா ஆனந்த்
இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்குமூலத்தில் தெரியவந்தது.

யாஷிகா ஆனந்த்
தொடர்ந்து படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா ஆனந்த்
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக யாஷிகா ஆனந்த் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும் வருகிற ஜூலை 27ம் தேதி ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- நடிகர் ரிச்சர்ட் ரிஷி 'ருத்ரதாண்டவம்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
- தற்போது மோகன் ஜி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'பகாசூரன்' போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ருத்ர தாண்டவம்'. ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்த இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடித்தார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

யாஷிகா -ரிச்சர்ட் ரிஷி
இதைத்தொடர்ந்து, மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி சில தினங்களுக்கு முன்பு நடிகை யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ரிச்சர்ட் ரிஷியும் யாஷிகாவும் காதலித்து வருவதாக சலசலத்து வந்தனர்.

ரிச்சர்ட் ரிஷி -யாஷிகா
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு நடிகர் ரிச்சர்ட் ரிஷி விளக்களித்துள்ளார். இது குறித்து அவர், "நானும் யாஷிகாவும் நடிக்கும் படத்தின் புகைப்படங்களைத்தான் இணையத்தில் ஷேர் செய்தேன். இப்படத்தை கன்னட இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்குகிறார். படத்தின் புரோமோஷனுக்காக தான் அந்த புகைப்படங்களை பகிர்ந்தேன், மற்றப்படி எனக்கும் யாஷிகாவிற்கும் நடுவில் காதலும் இல்லை கல்யாணமும் இல்லை" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- தற்பொழுது செல்வம் மாதப்பன் இயக்கத்தில் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இத்திரைப்படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிரற்கு அறிமுகமாகினார் யாஷிகா ஆனந்த். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.
பின் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமீபத்தில் வெளிவந்த டபுள் டக்கர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து தற்பொழுது செல்வம் மாதப்பன் இயக்கத்தில் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரஜின், ஜார்ஜ் மர்யன், முத்து குமார், பாலாஜி, லொல்லுசபா மனோகர் மற்றும் பல இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. தாய்மை மற்றும் பெண்மையை மையமாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சத்யராஜ் மற்றும் வசந்த்ரவி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'வெப்பன்'.
- ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வசந்த் ரவி அடுத்து அசோக் செல்வனுடன் இணைந்து பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகர் சத்யராஜ் மற்றும் வசந்த்ரவி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'வெப்பன்'. இந்த படத்தில் தான்யா ஹோப், யாஷிகா ஆனந்த், ராஜிவ் மேனன், ராஜீவ் பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வசந்த் ரவி அடுத்து அசோக் செல்வனுடன் இணைந்து பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, 'வெப்பன்' படத்தில் நடித்துள்ளார்.
குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'வெப்பன்' திரைப்படம் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன் படத்தின் டீசர் வெலியிடப்பட்டு மக்கள் கவனத்தை பெற்றது.
படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. சத்யராஜ் இப்படத்தில் யாருமே அழிக்க முடியாத ஒரு சூப்பர் ஹியுமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சத்யராஜை அனைவரும் கேங்ஸ்டர், கோஸ்ட் என்று பலரும் பல வித பெயர்களை வைத்து அழைக்கின்ரனர். அவரை அழிக்கும் மிஷனில் வசந்த் ரவி ஈடுப்படுகிறார். கிராபிக் காட்சிகள் மிரட்டலாக டிரைலரில் செய்தி இருக்கிறார்கள். இதனால் படத்தின் மீது மக்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமாகும் ’வெப்பன்’
- மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமான 'வெப்பன்' மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
நடிகர் வசந்த் ரவி, "தமிழில் சூப்பர் ஹூ்யூமன் கதைகளை எடுத்து செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை இயக்குநர் குகன் விரும்பி செய்திருக்கிறார். சின்ன வயதில் இருந்தே நிறைய காமிக்ஸ் கதைகளை அவர் படித்து வளர்ந்ததால் சினிமாவில் அதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முதல்படியாக 'வெப்பன்' படத்தை எடுத்திருக்கிறார். இந்த மாதிரியான படங்களுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும். அதை செய்து கொடுத்த மில்லியன் ஸ்டுடியோவுக்கு நன்றி. படத்தின் டிரெய்லரை நெல்சன் சாரிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டினேன். 'டிரெய்லர் ரொம்ப நல்லாருக்கு. இதுபோன்ற ஃபேண்டஸி ஆக்ஷன் படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு என்றார். 'ராக்கி' படத்தில் பாரதிராஜா சாருடன் நடித்தேன். பின்பு, 'ஜெயிலர்' படத்தில் ரஜினி சாருடன். அவர்களிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதேபோலதான், சத்யராஜ் சாரிடமும் நிறையக் கற்றுக் கொண்டேன். மனதில் இருக்கும் எதையும் வெளிப்படையாக சொல்லி விடுவார். அவருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஹாலிவுட் படங்களைப் போல இந்தப் படத்தைப் பாருங்கள். இது ப்ரீகுவல்தான். குகன் இந்த கதைக்கு ஒரு யுனிவர்ஸே வைத்துள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

நடிகர் சத்யராஜ், "திரையில காட்டுவதை விட, தரையில வீரத்தைக் காட்டுவதுதான் சூப்பர் ஹீரோ. இந்த மாதிரி படத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படும். படத்தின் கதையை நம்பி மட்டுமே இவ்வளவு பட்ஜெட் தயாரிப்பாளர் மன்சூர் செய்துள்ளார். இந்தப் படத்தின் இரண்டு ஹீரோக்களாக நான் நினைப்பது தயாரிப்பாளர் மன்சூரையும் இயக்குநர் குகனும்தான். தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் ரொம்ப ஸ்டிராங்க். கட்டப்பா போல இந்தப் படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் காலத்தால் அழியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்!". என கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அவர் கடைசியாக படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்திருந்தார்.
- யாஷிகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
நடிகை, மாடல், தொலைக்காட்சி பிரபலம் என பன்முகங்களை கொண்டவர் யாஷிகா ஆனந்த். தனது 14 வயதிலேயே மாடலிங் செய்ய தொடங்கி விட்டார். 2016-ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மைனர் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி, கடமையை செய், பகீரா என பல படங்களில் நடித்தார். எனினும் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த பெரிய படத்திலும் அவர் நடிக்கவில்லை.
அவர் கடைசியாக படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, சல்ஃபர் உள்ளிட்ட படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக அவர் கிளாமர் போட்டோக்களை அதிகமாக பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் யாஷிகாவின் படு கிளாமரான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
- டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.
- எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.
டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் பூஜை தீபாவளி பண்டிகை தினமான நேற்று (அக்டோபர் 31) சென்னையில் நடைபெற்றது.
முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே 'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்தப் படத்தை துவங்கியுள்ளார்.
எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகி யாஷிகா ஆனந்த் மற்றும் நாயகன் ராம் பிரசாத் இருவரும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை டேவிட் பாஸ்கர் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக விபின் ஆர் பணியாற்றுகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற இருக்கிறது. விரைவில் இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- யாஷிகா ஆனந்துக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள்.
- ஆந்திராவை சேர்ந்த இவர், தனியார் டி.வி.யில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
'இருட்டு அறையில் முரட்டுகுத்து', 'நோட்டா', 'ஜாம்பி' உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியவர், யாஷிகா ஆனந்த்.
ஆந்திராவை சேர்ந்த இவர், தனியார் டி.வி.யில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் யாஷிகா ஆனந்துக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் களமிறக்கி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதுவரை மாடர்ன் உடையில் மஜாவான படங்களை வெளியிட்டு வந்த அவர், தற்போது ரசிகர்கள் கிறக்கம் கொள்ளும் வகையில் சேலையில் கவர்ச்சி விருந்து படைத்துள்ளார். அந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ரசிகர்கள் அவரது அழகை புகழ்ந்து கமெண்டுகளை அள்ளி வீச, யாஷிகா ஆனந்த் உள்ளம் குளிர்ந்து போயுள்ளாராம்.
2021-ம் ஆண்டில் கார் விபத்தில் சிக்கிய யாஷிகா, தொடர் சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது மீண்டும் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். அந்தவகையில் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, சல்பர், சிறுத்தை சிவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.