என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு"
- உதிரிபாகங்கள் அனுப்பாமல் அலைக்கழித்த நிறுவன உரிமையாளருக்கு நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு விடுத்துள்ளது.
- ஒரு வாரத்தில் மீண்டும் அனுப்புவதாக தெரிவித்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் தினகரன் (வயது34). இவர் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்திற்கு தேவையான சில உதிரி பாகங்களை 2021-ம் ஆண்டு செப்.22-ந்தேதி பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் ஆர்டர் செய்தார். அதற்கான தொகை ரூ.35 ஆயிரத்தையும் செலுத்தினார். ஆனால் ஆர்டர் பெற்ற நிறுவனம் அனுப்புவதாக சொன்ன தேதியில் பொருட்கள் வந்து சேரவில்லை.
இதுகுறித்து கேட்ட போது முகவரி மாறி சென்று விட்டதாக கூறினர். ஒரு வாரத்தில் மீண்டும் அனுப்புவதாக தெரிவித்தனர். அதன் பின் நிறுவனமும், டிரான்ஸ்போர்ட் நிறுவனமும் மாறி மாறி அலைக்கழித்தனர். உரிய நேரத்தில் உதிரி பாகங்கள் கிடைக்காததால் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட தினகரன் ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2022-ம் ஆண்டு ஜூலை.15-ந்தேதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு பொருளுக்குரிய தொகை ரூ.35 ஆயிரத்துடன், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க நீதிபதி பாலசுப்பிரமணியன் மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் குட்வின் சாலமன்ராஜ், நமச்சிவாயம் உத்தரவிட்டனர்.
- செல்போன் 5 மாதத்திலேயே பழுதானதால் இழப்பீடு வழங்ககோரி கடந்த 2017-ம் ஆண்டு தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வாடிக்கையாளர் மனு அளித்தார்.
- தேனி நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகள் ரூ.2.50 இழப்பீடு வழங்க செல்வோன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள அரண்மனைப்புதூரை சேர்ந்த காமராஜ் மனைவி மீனா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதி தேனி பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு செல்போன் கடையில் ரூ.22,500க்கு செல்போன் வாங்கினார். முன்னணி நிறுவன தயாரிப்பான அந்த செல்ேபானுக்கு ஓராண்டு உத்தரவாதம் வழங்கப்பட்டது.
ஆனால் 5 மாதங்களில் செல்ேபான் பழுதானது. இதனையடுத்து அதனை பழுது நீக்கிதரும்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அணுகினார். அந்த செல்போன் தண்ணீரில் விழுந்து பழுதாகி இருப்பதாகவும், உத்தரவாத அடிப்படையில் அதனை பழுதுநீக்கி தரமுடியாது என்றும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வாடிக்கையாளரான மீனா செல்போன் தண்ணீரில் விழவில்லை என கூறியதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இதனைதொடர்ந்து தனது செல்போனை மாற்றித்தரக்கோரியும், சேவை குறைபாடு மற்றும் முறையற்ற வணிகத்தால் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்ககோரி கடந்த 2017-ம் ஆண்டு தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மீனா மனு அளித்தார்.
இந்த மனுவின் அடிப்படையில் நிறுவனத்தின் கிளை மேலாளர், சென்னை நிர்வாக மேலாளர், செல்போன் தயாரிப்பு நிர்வாகி ஆகியோரிடம் தேனி நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சுந்தர், உறுப்பினர்கள் அசீனா, ரவி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.
முடிவில் செல்போன் நிறுவன விற்பனை கிளை மேலாளர், நிர்வாக மேலாளர், தயாரிப்பு நிறுவன நிர்வாகி ஆகியோர் கூட்டாக மீனாவுக்கு அவர் ஏற்கனவே வாங்கியிருந்த செல்போனை போன்று புதிய செல்போன் அல்லது அதற்குரிய தொகை ரூ.22500 வழங்கவேண்டும். முறையற்ற வர்த்தகம் மற்றும் சேவை குறைப்பாட்டிற்கு இழப்பீடாக ரூ.50ஆயிரம், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் ஆகியவற்றை தீர்ப்பு நகல் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு செலவிற்காக ரூ.8ஆயிரம் வழங்கவேண்டும் எனவும் நுகர்வோர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்