search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.
    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்லும்.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை அம்மன் கோவில்களுக்கு வேன் மூலம் அழைத்து செல்லப்படுகிறார்கள். 

    பாரிமுனை-காளிகாம்பாள் கோவில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், புட்லூர் அங்காள பரமேஸ்வரி, திருமுல்லைவாயல் திருவுடையம்மன் மற்றும் பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். மதியம் கோவிலில் அன்னதானம் வழங்கப்படும். இந்த சுற்றுலா திட்டத்திற்கான கட்டணம் ரூ.1000.

    மற்றொரு அம்மன் சுற்றுலா திட்டமானது மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், முண்டககண்ணி அம்மன், கோல விழியம்மன், தி.நகர் ஆலயம்மன், முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி அம்மன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய கோவில்களில் அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கான கட்டணம் ரூ.800.

     

    திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்லும்.

    ஆடி அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன!

    மாற்றுத் திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் - மெட்ரோ ரெயில் பயணம் - விமானப் பயணம் அழைத்துச் சென்றோம்.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் வாங்கப்பட்ட புதிய வால்வோ பேருந்துகளில் முதல் பயணம் அவர்களுக்கான மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றேன்.

    இன்று துவக்கி வைத்த இந்தப் பயணத்தில்தான் எத்தனை புன்னகைகள்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    • ஆடி மாதத்தில் பக்தர்கள் வசதிக்காக அம்மன் தரிசன சுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
    • ஒரு சில நாட்களில் 4 நகரங்களுக்கான அம்மன் சுற்றுலா பயண திட்டம் வகுக்கப்படுகிறது.

    சென்னை:

    ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் செய்தல், சிறப்பு அபிஷேகம் போன்றவற்றை பக்தர்கள் செய்து நிறைவேற்றுவார்கள்.

    வருகிற 17-ந்தேதி ஆடி மாதம் பிறக்கிறது. அதனால் அம்மன் பக்தர்கள் இப்போதே தங்கள் பகுதியில் உள்ள கோவில்களில் விழா நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    ஆடி மாதத்தில் பக்தர்கள் வசதிக்காக அம்மன் தரிசன சுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் இருந்து அம்மன் தரிசன ஒரு நாள் சுற்றுலாவுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    காலையில் இருந்து இரவு வரை அந்த பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். ஒரு நாள் சுற்றுலாவிற்கான கட்டணம், பார்க்கும் இடங்கள் உள்ளிட்ட சுற்றுலா விவரங்கள் திட்டமிடப்படுகிறது.

    ஒரு சில நாட்களில் 4 நகரங்களுக்கான அம்மன் சுற்றுலா பயண திட்டம் வகுக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்ல கட்டணம், காலை மற்றும் மதிய உணவுடன் எவ்வளவு நிர்ணயம் செய்வது, எத்தனை மணிக்கு புறப்பட்டு செல்வது, முடிப்பது போன்றவை இறுதி செய்யப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலா மேலாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    ஆடி மாதம் முழுவதும் அம்மன் தரிசன சுற்றுலா நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்கான பஸ் வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    ×