என் மலர்
நீங்கள் தேடியது "ராம் கோபால் வர்மா"
- ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா.
- இவர் தற்போது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படத்தை இயக்கியுள்ளார்.
ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா, சூர்யாவின் ரத்த சரித்திரா படத்தையும் இயக்கி இருந்தார். ஆனால், சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என கவர்ச்சிகரமான படங்களை இயக்கி வருகிறார். அவரது இயக்கத்தில் விரைவில் லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் வெளியாக இருக்கிறது.

சர்ச்சைக்கு பேர்போன இயக்குனர் ராம் கோபால் நடிகை ஒருவரின் காலை பிடித்து மசாஜ் செய்து கொண்டே பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்கிறேன் என புரமோஷனை ஆரம்பித்த அவரது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படம் சில காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது.
ராம் கோபால் வர்மா, டேஞ்சரஸ் படத்திற்காக விதவிதமாக விளம்பரப்படுத்தி வருகிறார். படத்தின் நடிகையுடன் ராம் கோபால் வர்மா வினோதமான செயல்களைச் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன.

அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி நடிப்பில் கவர்ச்சியாக உருவாகி உள்ள டேஞ்சரஸ் திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். தெலுங்கு பிக்பாஸ் பிரபலமான ஆஷு ரெட்டியின் கால்களை பிடித்து மசாஜ் செய்யும் வீடியோவை ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார். அதில், நடிகையின் உடலில் ஆபத்தான குறியீடு எங்கே என்பதை கேட்பது போல கேமராவைப் பார்க்கிறார். பிறகு நடிகையின் பாதத்தை கடிப்பது போன்று அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது. இந்த ஆபாசமான செய்கை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தனது படத்தை விளம்பரப்படுத்த இப்படி ஒரு செயலைச் செய்ததால் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
- பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா.
- இவர் தன் பேச்சால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா, சூர்யாவின் ரத்த சரித்திரா படத்தையும் இயக்கி இருந்தார். சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என கவர்ச்சிகரமான படங்களை இயக்கி வரும் ராம் கோபால் வர்மா தன் பேச்சால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இவர் இனிமேல் இந்தி படங்கள் வெற்றி பெறாது என்ற கண்ணோட்டத்தை 'பதான்' மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராம் கோபால் வர்மா
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், " பாலிவுட் படங்கள் இனி ஓடாது என்ற கண்ணோட்டத்தை 'பதான்' திரைப்படம் மாற்றியமைத்தது. 'காந்தாரா', 'ஆர்.ஆர்.ஆர்', 'கேஜிஎப்' படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துக்கொண்டிருந்த நேரம் அது.
பொருட்களுக்கு லேபிள் இடும் பழக்கம் மக்களிடம் இருக்கிறது. ஒருவேளை ராஜமவுலி ஒடிசாவிலோ, குஜராத்திலோ பிறந்ததிருந்தால் அவர் இந்த மாதிரியான படங்களைத் தான் இயக்கியிருப்பார். நான் தற்போது அரசியல் த்ரில்லர் படம் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறேன். விரைவில் இந்தி படம் ஒன்றை இயக்குவேன்" என்று கூறினார்.
- பல்வேறு ஊடக விமர்சகர்கள் "அனிமல்" திரைப்படத்தை கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்தனர்
- விமர்சகர்கள், அனிமல் இயக்குனரிடம் திரைப்பட வகுப்பு பயில வேண்டும் என்றார் ஆர்ஜிவி
கடந்த டிசம்பர் 1 அன்று பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான இந்தி திரைப்படம் "அனிமல்" உலகமெங்கும் வெளியானது. திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெள்ளித்திரையில் வசூலில் சாதனை புரிந்து வருகிறது.
ஆனால், "அனிமல்" திரைப்படத்தை எழுத்து, சமூக, காட்சி உள்ளிட்ட அனைத்துவிதமான ஊடகங்களிலும் பல பிரபல விமர்சகர்கள் கடுமையாக தாக்கி கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். கதை மற்றும் காட்சி அமைப்புகளில் இளைஞர்களை ஈர்ப்பதற்காக ஏராளமாக வன்முறை சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், தரமான திரைப்படமல்ல என்றும் குறை கூறி இயக்குனரை விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், "அனிமல்" திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது.
வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக போகும் புதிய திரைப்படங்கள் "அனிமல்" வசூலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்தாலும், அதற்குள் இப்படம் மேலும் பல கோடிகள் வசூலில் குவிக்கும் என திரைப்பட வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இப்பின்னணியில் "ஆர்ஜிவி" என அழைக்கப்படும் பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா (Ram Gopal Varma), திரைப்பட விமர்சகர்களை கடுமையாக தாக்கி கருத்து கூறியுள்ளார்.
விமர்சகர்களுக்கு 5 அறிவுரைகளாக ஆர்ஜிவி தெரிவித்திருப்பதாவது:
- இயக்குனரை காட்டிலும் படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்கள் மீது விமர்சகர்கள் முதல்முறையாக கோபமடைந்திருக்கிறார்கள்.
- படு மோசம் என வர்ணிக்கப்பட்ட திரைப்படம் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக மாறியுள்ளது. இதன் மூலம் விமர்சகர்களின் திரைப்பட விமர்சனம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது உறுதியாகி விட்டது.
- ரசிகர்களுக்கு விருப்பமானது எது என விமர்சகர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை என்பதும் உறுதியாகி விட்டது.
- அனைத்து விமர்சகர்களும் கை கூப்பி திரைப்படங்களை வர்ணிப்பது எப்படி என சந்தீப் ரெட்டி வங்காவிடம் கேட்டு கற்று கொள்ள வேண்டும்.
- விமர்சகர்கள் "அனிமல்" திரைப்படத்தை பல முறை பார்த்து தங்கள் அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பெண் எம்.பி. ரஜ்சீத் ரஞ்சன் (Ranjeet Ranjan) மாநிலங்களவையில், "இளைஞர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வன்முறை காட்சிகளும் ஆணாதிக்க கதையமைப்பும் அதிகம் உள்ள இத்திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் எவ்வாறு அளிக்கப்பட்டது?" என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்பட போஸ்டர்களை கிழித்து எரிந்து தீ வைத்து கொளுத்தினர்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சியினை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
ஐதராபாத் பிலிம் நகரில் பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் ராம் கோபால் வர்மா அரசியல் கட்சி தலைவர்கள் குறித்த 'வியூகம்' என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை கிண்டல் செய்யும் காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்பட போஸ்டர்களை கிழித்து எரிந்து தீ வைத்து கொளுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சியினரை அங்கிருந்து விரட்டி அடித்தனர். மேலும் கட்சியினர் பிலிம் நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

வியூகம் போஸ்டர்
இதுகுறித்து தெலுங்கானா திரைப்பட இயக்குனர் ஒருவர் கூறுகையில் சினிமாவை பொழுதுப்போக்காக பார்க்க வேண்டும். சென்சார் போர்டு சர்டிபிகேட் வழங்கி அனுமதி அளித்த பிறகும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுக்க இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றார்.
- பல ஹாரர் கதைக்களத்துடைய படங்களை இயக்கியுள்ளார்.
- இந்திய நடன இயக்குனரான ஷியாமக் தாவரை சந்தித்த தருணத்தை பகிர்ந்தார்.
இந்தி சினிமாவில் சர்ச்சைக்குறிய இயக்குனர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா, அவர் பல ஹாரர் கதைக்களத்துடைய படங்களை இயக்கியுள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த ராட் ராத்ரி, பூத், ஃபூங்க் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
என்னதான் இயக்குனர் ஹாரர் திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் அவர் வாழ்க்கையில் இம்மாதிரி அமானுஷ்ய சம்பவங்களை எதிர் கொண்டிருப்பாரா என்ற கேள்வி இருக்கும். அப்படி ஒரு சம்பவத்தை ஆர்.ஜி.வி சமீபத்திய ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அந்த நேர்காணலில் இந்திய நடன இயக்குனரான ஷியாமக் தாவரை சந்தித்த தருணத்தை பகிர்ந்தார். அவர்கள் இருவரும் விமான பயணத்தின் போது சந்தித்ததாகவும், தனக்கு பின்னாடி இருக்கையில் தாவர் அமர்ந்திருந்தார். இதனால் ஆர்.ஜி.வி அவருடன் பேசலாம் என பின் இருக்கைக்கு சென்று பேசியுள்ளார். அப்போது தாவர் ஆர்ஜிவி ஐ பார்த்து `உங்க அப்பா இறந்துட்டாரா?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இந்த சந்திப்பிற்கு 15 நாட்கள் முன் ஆர்ஜிவி இன் தந்தை இறந்ததால் இவர் ஆமா என்று பதிலளித்துள்ளார். பின் சிறிய அமைதிக்கு பின் தவார் " உங்க அப்பா இப்போ நம்ம கூட தான் இருக்காரு" என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட ஆர்ஜிவி- க்கு பெரும் அதிர்ச்சி பின் "எனக்கு இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல" என்று கூறியுள்ளார்.
அதற்கு தாவர் " அவருக்கும் இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல அவர் உன்னைய பற்றி ரொம்ப கவலை படுறாரு" என்று ஆர்ஜிவியின் தந்தை கூறியதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி, பயம், கோபம் என பல எமோஷன்களை மேற்கொண்ட ஆர்ஜிவி அந்த இருக்கையில் இருந்து எழுந்து பழைய இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார். இவ்வாறு இந்த வித்தியாசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இயக்குனர் ஆர்ஜிவி.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏழு வருடத்திற்கு முன் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
- கடந்த 2022-ம் ஆண்டு ராம் கோபால் வர்மாவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தது.
காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு நீதிமன்றம் 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் கைது செய்வதற்கான ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பித்தும் அந்தேரியில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மூன்று மாதத்திற்குள் மனுதாரருக்கு ரூ. 3.72 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு தொடர்பாக ராம் கோபால் வர்மா கூறுகையில் "அந்தேரி நீதிமன்றத்தில் எனக்கு எதிராக உள்ள இந்த வழக்கு, கடந்த ஏழு வருடத்திற்கு முன்னதாக போடப்பட்டது. இது 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் தொடர்பான எனது முன்னாள் தொழிலாளர் தொடர்பானது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய வழக்கறிஞர் நீதிமன்றம் ஆஜரானார்.
இது 2.38 லட்சம் ரூபாயை கொடுப்பது பற்றியது அல்ல. எனக்கு எதிராக புனையப்பட்ட வழக்கை நான் மறுப்பது தொடர்பானது. தற்போதைக்கு இதைத்தான் என்னால் கூற முடியும்" என தெரிவித்துள்ளார்.
ராம் கோபால் வர்மா மீது வழக்கு தொடர்ந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக ஹார்டு டிஸ்க் வழங்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தது. 2018 பிப்ரவரி முதல் மார்ச் 2018 வரை 2.38 லட்சம் ரூபாய்க்கு ராம் கோபால் வர்மா நிறுவனத்திற்கு ஹார்டு டிஸ்க் வழங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி குறிப்பிட்டு வழங்கப்பட்ட காசோலை போதிய பணம் இல்லாம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராம் கோபால் வர்மான நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டு, 2-வது செக் வாங்கப்பட்டு, வங்கியில் செலுத்தப்பட்டது. அப்போது செக் வழங்கியவர் பணம் விடுக்கப்படுவதை தடுத்ததால் மீண்டும் காசோலை திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் வழக்கு தொடர்ந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினியை ஸ்டாராக பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.
- ரஜினியை அவரின் ரசிகர்கள் கிட்டத்தட்ட கடவுளாகவே பார்க்கிறார்கள்.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பு திறமையை விமர்சித்து இயக்குநர் ராம்கோபால் வர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ராம் கோபால் வர்மா கொடுத்த பேட்டியில், "ஒரு நடிகருக்கும், ஸ்டாருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. ரஜினியை ஸ்டாராக பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.
Slow Motion மட்டும் இல்லையென்றால் ரஜினியால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியுமா என தெரியவில்லை. பாதி படம் முழுக்க எதுவும் செய்யாமல் ரஜினி ஸ்லோ மோஷனில் நடப்பதை பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். ரஜினியை அவரின் ரசிகர்கள் கிட்டத்தட்ட கடவுளாகவே பார்க்கிறார்கள். அதனால் அவரால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
- பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது இயக்கியுள்ள படம் 'பொண்ணு'.
- இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள திரைப்படம் 'லடுக்கி'. இப்படம் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது. கதாநாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழில் 'பொண்ணு' என்கிற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரபல மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் பேசிய ராம் கோபால் வர்மா, "இந்தப்படம் எனக்கு மிகவும் சவாலான, மனதிற்கு பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே புரூஸ்லி என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப்போனது. இறுதியாக இந்தப்படம் எடுக்க நினைத்த போது புரூஸ்லீயின் உருவம் என் மனதில் வந்து போனது.

அவர் மிக ஒல்லியான உருவம் கொண்டவர். ஆனால் திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது. அதே நேரம் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்கு தோன்றியது. பலரை தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விபட்டு சந்தித்தேன். அவரின் திறமைகள் பார்த்து வியந்தேன். அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சீனாவில் உள்ள ஒரு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பிறகு இந்தப்படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன்.
கொரோனா காரணங்களால் இந்தப்படம் தாமதமாகிவிட்டது. அனைத்து மொழிகளிலும் இந்தப்படத்தை ஒரே நேரத்தில் அனைத்து மொழியிலும் வெளியிட வேண்டும் என திட்டமிட்டோம். ஹைதராபாத்தில் புரூஸ்லியின் 'எண்டர் தி டிராகன்' திரைப்படம் பார்க்க என்னிடம் பணம் இல்லை. ஆனால் இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் அதே தியேட்டரில் வெளியாகவுள்ளது மகிழ்ச்சி. இது எனது கனவு இப்போது நனவாகியிருப்பது சந்தோஷம்" என்று தெரிவித்துள்ளார்.