search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உல்லாச வாழ்க்கை"

    • கைதான கொள்ளையன் பரபரப்பு வாக்குமூலம்
    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பார்வதிபுரம் கிறிஸ்டோபர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி செல்வி (வயது 60). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்வியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து செல்வி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவணக் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நகை பறிப்பு நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையில் ஈடுபட்டது கேர ளாவை சேர்ந்த வாலிபர்கள் என்பது தெரிய வந்தது. இதை யடுத்து தனிப்படை போலீசார் கேரளா விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் செல்வியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது திருவனந்தபுரம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (19) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நந்தகுமாரிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசா ரணை நடத்தியபோது ஜாலி யான வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு நகை களை திருடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார்.

    இந்த கொள்ளை வழக்கில் அவரது நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நந்தகுமார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நந்தகுமார் மீது ஏற்கனவே கேரளாவில் 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் வரன் தேடி ஆன்லைனில் பதிவிட்டு இருந்ததை ரவிச்சந்திரன் பார்த்தார்.
    • பெண் பல் டாக்டரிடம் இருந்து வாங்கிய பணத்தில் இரண்டு சொகுசு கார்கள் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கரூர்:

    கோவை பேரூர் சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு மனைவியிடம் விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் திருமண தகவல் மையம் மூலம் 2-வது திருமணம் செய்ய பெண் தேடி வந்தார்.

    அப்போது நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் வரன் தேடி ஆன்லைனில் பதிவிட்டு இருந்ததை ரவிச்சந்திரன் பார்த்தார்.

    பின்னர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவரிடம் தனது பெயர் ரவிச்சந்திரன் என்றும் மொத்த வியாபாரம் செய்து வருவதாகவும் அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தனக்கு சொந்தமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளது. சென்னையில் 60 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, பெங்களூருவில் பங்களா என சகட்டு மேனிக்கு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.

    அவரது பந்தாவான தோற்றம், சொகுசு கார்கள் போன்றவை அந்த கைம்பெண்ணை நம்ப வைத்தது. பின்னர் உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஆசைவார்த்தை கூறினார்.

    அவரது பேச்சில் உருகிய அந்தப் பெண் திருமணத்திற்கு சம்மதித்து செல்போன்களில் அடிக்கடி பேசி வந்தனர்.

    பின்னர் ஒரு நாள் அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டு தனக்கு திருமண தடை தோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டி இருப்பதால் பணம் தேவைப்படுகிறது என கேட்டார்.

    அந்த பெண்ணும் வருங்கால புருஷன் தானே கேட்கிறார் என்று தன்னிடம் இருந்த 167 சவரன் நகைகளை கொடுத்தார். பின்னர் அந்த பெண்ணுடன் தொடர்பை துண்டித்தார். பின்னர் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண் பேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை வலைவீசி தேடி வந்தனர். அப்போது அவரது செல்போன் டவரை வைத்து தேடியதில் கரூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

    போலீசார் அவரை சுற்றி வளைத்தபோது ஒரு பெண்ணும் அவருடன் இருந்தார். விசாரணையில் கரூரை சேர்ந்த அந்த பெண் பல் டாக்டராக இருப்பது தெரியவந்தது.

    திருச்செங்கோட்டை சேர்ந்த பெண்ணின் நகையை பறித்துக்கொண்டு கரூரில் உள்ள பல் டாக்டருக்கு வலைவீசி பேசியுள்ளார்.

    வழக்கம்போல் திருமண ஆசை காட்டி அவரையும் மயங்க செய்தார். அதைத்தொடர்ந்து அந்த பெண் டாக்டரை ஏமாற்றி கணவன் மனைவி போல ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். எப்போதும் வீட்டில் நிரந்தரமாக ரவிச்சந்திரன் தங்குவதில்லை.

    அவ்வப்போது அந்த பெண் டாக்டரை பார்க்கச் செல்லும் அவர், தனது மோசடி அம்பலமாகிவிடும் என கருதி லாட்ஜ் மற்றும் விடுதிகளிலேயே தங்கி வந்துள்ளார்.

    மேலும் கரூர் பெண் பல் டாக்டரிடம் இருந்து வாங்கிய பணத்தில் இரண்டு சொகுசு கார்கள் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு பெண்களை குறி வைத்து அவர்களிடம் பணம் நகைகளைப் பெற்றுக் கொண்டு வேறு பெண்களுடன் இருந்ததும் அம்பலமாகி உள்ளது.

    ரவிச்சந்திரனின் வலையில் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மேலும் சில பெண்கள் விழுந்து நகை பணத்தை தொலைத்து இருக்கிறார்கள்.

    ஆனால் குடும்ப கவுரவம் கருதி அவர்கள் போலீசில் புகார் அளிக்காமல் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் கரூர் மற்றும் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 65 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளை
    • வீட்டில் போலீசார் சோதனை செய்த போது கொள்ளையடித்து பதுக்கி வைத்திருந்த 55 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள ஈத்தவிளையை சேர்ந்தவர் சோமன் (வயது 54), வியா பாரி.

    இவர் கேரளாவிற்கு வாழைக்காய் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 3-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சோமன் கோவிலுக்கு சென்றார்.

    இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 65 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளை யடித்துச் சென்றனர். இது குறித்து கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் சோமன் புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனிப்படையும் அமைக்க ப்பட்டது. இந்தநிலையில் தக்கலை போலீஸ் இன்ஸ் பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் மேக்காமண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஈத்தவிளை வாழைக்காய் வியாபாரி வீட்டில் கொள்ளை அடித்தது அவர் தான் என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் ஸ்டீபன் என்பதும் நெல்லியாரக்கோணம் பகுதியைச் சேர்ந்த இவன் தற்போது கீழகல்குறிச்சி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது.

    இவன் தமிழகம் மட்டு மின்றி கேரளாவிலும் கைவரிசை காட்டி உள்ளான். மேலும் கொள்ளையடித்த பணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஸ்டார் ஒட்ட ல்களில் மது அருந்தி பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்திருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

    கைதான ஸ்டீபன் இரவு நேரத்தில் திருடுவது கிடையாது. பகல் நேரத்தில் பூட்டி கிடக்கும் வீடுகளில் கைவரிசை காட்டுவது தான் அவனது பழக்கமாகும். இவன் மீது சிவகங்கை, திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி மற்றும் கேரள மாநிலம் பத்தனம்திட்டை, சங்கனாச்சேரி உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் 40 திருட்டு வழக்குகள் உள்ளன.

    திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்டீபன், குண்டர் சட்டத்தில் சிறை சென்றுள்ளான். அதன்பிறகும் அவன் திருட்டை கைவிடவில்லை.கடந்த 3 மாதங்களாக குமரி மாவட்டத்தில் குளச்சல், இரணியல், கொன்றிக்கோடு பகுதிகளில் 6 வீடுகளில் இவன் கைவரிசை காட்டி உள்ளான்.

    அவனது வீட்டில் போலீசார் சோதனை செய்த போது கொள்ளையடித்து பதுக்கி வைத்திருந்த 55 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

    ×