search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தகம் வழங்கும் விழா"

    • சென்னையில் இளம் எழுத்தாளர்கள் 15 பேர் எழுதிய புத்தகங்கள் ஒரே மேடையில் வெளியிடப்பட்டது.
    • இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலும் ரைட்டத்தான் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இளம் எழுத்தாளர்கள் 15 பேர் எழுதிய புத்தகங்கள் ஒரே மேடையில் வெளியிடப்பட்டது. இளம் வயது எழுத்தாளர்களை உருவாக்கும் நோக்கில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும், இளம் எழுத்தாளர்களை வளர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவும், இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலும் ரைட்டத்தான் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

    உலகெங்கிலும் உள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ரைட்டத்தான் (Writathon) என்ற படைப்பு எழுத்துப் போட்டியை லேர்னர்ஸ் சர்க்கிள் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் 8 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம்.

     

    இந்த போட்டி, அனைத்து வகைகளிலும் கவிதை, சிறுகதை மற்றும் குறுநாவல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க இளம் எழுத்தாளர்களை அழைக்கிறது. ரூ. 20,000 மதிப்புள்ள ரொக்கப் பரிசுகளுடனும், 10+ பங்கேற்பாளர்கள் உள்ள பள்ளிகளுக்கான மதிப்புமிக்க பள்ளி ஊக்கப் பரிசுடனும், வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்த ரைட்டத்தான் போட்டி ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

    • உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடந்தது
    • 150 நூலக புத்தகத்தை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கினார்

    போளூர்:

    உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஜமுனாமரத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பண்டிரேவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் ரங்கநாதன் மாணவர்களுடைய வாசிப்பு திறனை அதிகரிக்க 150 நூலக புத்தகத்தை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கினார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் மன்னர்சாமி, பள்ளி கல்வி குழு தலைவர் கீதா, ஊர் தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.
    • சௌராஷ்ட்ரா இளைஞர் சேவா சங்கம் சார்பில் நடைபெற்றது

    திருச்சி:

    திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம், திருச்சி ஸ்ரீமந் நடன கோபால நாயகி ஸ்வாமிகள் சேவை அமைப்பு, திருச்சி சௌராஷ்ட்ரா இளைஞர் சேவா சங்கம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா, சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, சௌராஷ்ட்ரா வரலாற்று நூலகம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி பெரிய சௌராஷ்டிரா தெருவில் நடந்தது .மகேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஹரிநாத் வரவேற்றார் . தஞ்சை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் விமூர்த்தானந்தர்மகராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த விழாவில் தஞ்சை சௌராஷ்டிரா பெடரேசன் நிறுவனர் சுரேந்திரன், வக்கீல் சுதர்சன், சசிகுமார், ரமேஷ்பாபு, அம்சராம், வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளர் யுவராஜ்,திருச்சி ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் சேவை அமைப்பு வினோத் கண்ணா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .முடிவில் பொருளாளர் அம்சாரம் நன்றி கூறினார்.

    ×