என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சு வாரியர்"

    • 'துணிவு’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.


    ஜிப்ரான் - மஞ்சுவாரியர்

    இந்நிலையில், இப்படத்தின் அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை மஞ்சுவாரியர் 'துணிவு' திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "துணிவு படத்தின் ஒரு இன்ட்ரெஸ்டிங் பாடலின் ஒரு பகுதியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் அதை கேட்க காத்திருக்கிறோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.



    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'.
    • இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

     

    போனி கபூர் - அஜித் 

    போனி கபூர் - அஜித் 

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே அஜித் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.

     

    அஜித்தின் புதிய கெட்டப் 

    அஜித்தின் புதிய கெட்டப் 

    இந்நிலையில் அஜித்தின் தற்போதைய புதிய கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் படப்பிடிப்புக்கு முந்தைய புகைப்படத்தையும் தற்போது உள்ள புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'.
    • இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

    புதிய கெட்டப்பில் அஜித்

    புதிய கெட்டப்பில் அஜித்

     

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே அஜித் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.

    துணிவு படத்தின் புதிய புகைப்படங்கள் 

    துணிவு படத்தின் புதிய புகைப்படங்கள் 

     

    சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் துணிவு படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கையில் துப்பாக்கியுடன் அஜித் இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    அஜித் - மஞ்சுவாரியர்

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகை மஞ்சுவாரியர், அஜித்துடனான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து 'நீங்கள் நீங்களாகவே இருந்ததற்கு நன்றி அஜித் சார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    • கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தி தாக்கப்பட்டார்.
    • இந்த வழக்கு தொடர்பாக 39 சாட்சிகளிடம் முதல் கட்டமாக 27 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தி தாக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப், பல்சர் சுனீல் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 39 சாட்சிகளிடம் முதல் கட்டமாக 27 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 12 பேரிடம் விசாரணை நடைபெறாமல் இருந்தது.


    மஞ்சு வாரியர்

    மஞ்சு வாரியர்

    இந்நிலையில் 2-ம் கட்ட குறுக்கு விசாரணைக்கு 20 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் உள்பட 20 பேர் இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

    • நடிகை மஞ்சு வாரியர் ‘துணிவு’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இவரின் சமூக வலைதளப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    துணிவு

    போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பின் நடுவே நடிகை மஞ்சு வாரியர், அஜித்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது.


    அஜித் -மஞ்சுவாரியர்

    இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் புதிதாக பைக் ஒன்று வாங்கியுள்ளார். இவர் நடிகர் அஜித்திற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "தைரியத்திற்கான ஒரு சிறிய படி எப்போதும் சிறந்தது. ஒரு நல்ல ரைடர் ஆகுவதற்கு முன்பு நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் சாலையில் நான் தடுமாறுவதை நீங்கள் கண்டால் தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள். என்னை போன்றோருக்கு ஊக்கமளிப்பதற்கு நன்றி அஜித் சார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தி தாக்கப்பட்டார்.
    • இந்த வழக்கு தொடர்பாக 20 பேருக்கு குறுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பப்பட்டது.

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தி தாக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப், பல்சர் சுனீல் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 39 சாட்சிகளிடம் முதல் கட்டமாக 27 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 12 பேரிடம் விசாரணை நடைபெறாமல் இருந்தது.

    இதையடுத்து 2-ம் கட்ட குறுக்கு விசாரணைக்கு 20 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட்டது. இதில் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் உள்பட 20 பேர் இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் இரண்டாம் கட்ட விசாரணைக்காக கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். மஞ்சு வாரியர் உட்பட நான்கு பேரிடம் தற்போது விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கை இன்னும் ஆறு மாதத்திற்குள் முடித்துவிட கேரள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • NGL01220223: கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் காரில் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
    • சாட்சி விசாரணைக்காக நடிகை மஞ்சுவாரியர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் காரில் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கில் விசாரணை முடிவடையும் கட்டத்தில் இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    இதன் அடிப்படையில் மீண்டும் விசாரணையில் இறங்கிய போலீசார் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் மற்றும் நடிகை காவ்யா மாதவன் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். போலீசாரின் இந்த முடிவுக்கு நடிகர் திலீப் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் சுப்ரீம் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையை நீட்டித்து கொண்டே செல்வதற்காகவே சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க கூடாது என மனுவில் கூறியிருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை. மஞ்சு வாரியரிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து சாட்சி விசாரணைக்காக நடிகை மஞ்சுவாரியர் மீண்டும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜரானார். பாலசந்திரகுமார், போலீசிடம் அளித்த ஆடியோவில் இருப்பது நடிகர் திலீப்பின் குரல் தானா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

    • நடிகை மஞ்சு வாரியர் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் சமீபத்தில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


    அஜித் - மஞ்சுவாரியர்

    போனி கபூர் தயாரித்திருந்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு பைக் வாங்கிய நடிகை மஞ்சு வாரியர் 'என்னை போன்றோருக்கு ஊக்கமளிப்பதற்கு நன்றி அஜித் சார்' என்று பதிவிட்டிருந்தார்.


    மஞ்சு வாரியர்

    இந்நிலையில், தற்போது இவரின் சமூக வலைதளப்பதிவு வைரலாகி வருகிறது. அதில், சேலை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'சேலை என்பது வெறும் ஆடையல்ல. அது ஒரு மொழி' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.


    • இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு .
    • அவரது பின் தொடர்ச்சியாக நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார்.

    கோகுலம் கருத்தரங்க மையத்தில் நேற்று மாலை நடந்த அம்மா அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் மலையாள நடிகர் சங்கம் தேர்தல்  நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு . இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக திரைப்பிரபலங்கள் பல நாடுகளில் இருந்து வந்து கலந்துக் கொண்டனர்.

    மோகன்லால், மஞ்சு வாரியர், விஜய் பாபு, லால், இந்திரஜித், டொவினோ தாமஸ், கிரேஸ் ஆண்டனி, மதுபால் போன்றவர்கள் கலந்துக் கொண்டனர்,

    இம்முறை மோகன்லால் எதிர்ப்பின்றி அம்மா அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கடந்த எட்டு முறை அம்மா அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த நடிகர் பாபு தானாக முன்வந்து தனது பதவியை நிறைவு செய்ததுடன் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததை அடுத்து அவரது பின் தொடர்ச்சியாக நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகை குக்கு பரமேஸ்வரன் , உண்ணி சிவபால் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலில் நடிகர் சித்திக் , நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் . இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குக்கு பரமேஸ்வரன் மற்றும் உண்ணி சிவபால் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

     

    அத்துடன் கடந்த காலங்களில் நான்கு முறை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்தவர் நடிகை குக்கு பரமேஸ்வரன். துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை மஞ்சு பிள்ளை தோல்வி அடைந்தார் . அனூப் சந்திரன், ஜெயன் சேர்த்தலா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட பத்திரிக்கை தாக்கல் செய்து இருந்தாலும், நடிகர் மோகன்லால் தேர்தலில் போட்டியிட தயாரானவுடன் அவர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் உண்ணி முகுந்தன் இந்த அமைப்பின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடிகர் இடைவேளை பாபு கடந்த 2018 -ம் ஆண்டு முதல் தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி வகித்து வருகிறார். இம்முறை நடந்த தேர்தலில் நடிகர்கள் ஜெகதீஷ் மற்றும் ஜெயன் சேர்த்தலா ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் தொடர்ந்து  மூன்றாம் முறை வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விடுதலை பாகம் ஒன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டை வென்றது.
    • விடுதலை 2 படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு பல கட்டங்களாக நடைபெற்றது.

    இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தவர். பெயருக்கு ஏற்றார் போல இயக்கும் படம் அனைத்தும் வெற்றியே.

    தொடர்ந்து அவர் இயக்கிய எல்லா திரைப்படமும் வெற்றி பெற்றதன் காரணத்தினால் அவர் இயக்கும் திரைப்படத்திற்கு மக்களின் எதிர்பார்ப்பு எப்பொழுதும் உண்டு.

    இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். விடுதலை படத்தின் முதல் பாகமாக வெளியான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது.

    இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

    விடுதலை பாகம் ஒன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டை வென்றது. விடுதலை 2 படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு பல கட்டங்களாக நடைபெற்றது.

    இந்நிலையில் விடுதலை 2-ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி - மஞ்சு வாரியர் இருக்கும் புகைப்படமும், ரத்த களரியுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.

    படக்குழுவினர் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்

    "உயிர்ப்ப ஊரல்லர் மன்ற செயிர்ப்பவர்

    செம்மல் சிதைக்கலா தார்"

    என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது. அதற்கு விளக்கமானது பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார் என்பதாகும்.

    இந்த குறளுக்கும் விடுதலை படத்திற்கும் எம்மாதிரியான ஒப்பீட்டு இருக்குமென பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.
    • ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன்

    ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

    இதில் ரஜினியை தவிர அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா தகுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில வாரங்களுக்கு முன் முடிந்தது.

    தற்பொழுது படத்தை குறித்த அப்டேட்டை மஞ்சு வாரியர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், ரஜினிக்கு மனைவியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படம் முழுக்க முழுக்க ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகந்திற்கான திரைப்படமாக இது இருக்கும், சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடிப்பது மற்றும் ஜெய் பீம் எடுத்த இயக்குனருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது.

    படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் எனக்கு தெரியாது, இன்னும் நான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பணிகளை மேற்கொள்ளவில்லை. என்று கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×