search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் சீனவாசன்"

    • தி.மு.க. அரசை கண்டித்து மதுரையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
    • செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார்.

    தி.மு.க. அரசை கண்டித்து மதுரை பழங்காந்தத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர், " விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக அமைச்சர்களிடம் பணம் பெற்றுதான் மது ஒழிப்பு மாநாட்டையே நடத்தினார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்தார்.

    இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த விசிக தலைவர் திருமாவளவன், " திண்டுக்கல் சீனிவாசனின் குற்றச்சாட்டு நகைப்புக்கு உரியது. அது ஒரு அபாண்டமான அவதூறு" என்றார்.

    • திமுக செலவில் விசிக மாநாட்டை நடத்திய பெருமை திருமாவளவனை சேரும்.
    • ஒரே கல்லிக் இரண்டு மாங்காய் என்ற பழமொழி திருமாவளவனுக்கே பொருந்தும்.

    தி.மு.க. அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர், " விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக அமைச்சர்களிடம் பணம் பெற்றுதான் மது ஒழிப்பு மாநாட்டையே நடத்தினார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேலும் கூறியதாவது:-

    திமுக செலவில் விசிக மாநாட்டை நடத்திய பெருமை திருமாவளவனை சேரும்.

    மாநாட்டிற்கான அனைத்து செலவுகளையும் அமைச்சர்கள் பங்கெடுக்க சொல்லி திமுக போட்ட மைதானம், திமுக போட்ட மேடை, திமுக போட்ட சேர்கள் என திமுக செய்த செலவில் விசிக தோழர்களை உட்கார வைத்த பெருமை திருமாவளவனுக்கு சேரும்.

    ஒரே கல்லிக் இரண்டு மாங்காய் என்ற பழமொழி திருமாவளவனுக்கே பொருந்தும்.

    திமுக அரசுக்கு எதிராக எந்த தீர்மானமும் போட வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு எதிராக எல்லா தீர்மானமும் போடுங்கள் என்று முதல்வர் முதலமைச்சர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொண்டர்களால் கோவிலாக மதிக்கப்படும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    • அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வதுண்டு. அதன்படி இந்த செயலில் ஈடுபட்ட நபர் மறுநாளே விபத்தில் சிக்கியதாக செய்தி வந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளை நீக்குவதும், பின்னர் சேர்ப்பதும் போன்ற அறிக்கையை தினந்தோறும் வெளியிட்டு வருகிறார். ஆனால் அதைப்பற்றி அ.தி.மு.க. தொண்டர்களுக்கோ, நிர்வாகிகளுக்கோ கவலை இல்லை. அவருக்கு கொடுத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

    தொண்டர்களால் கோவிலாக மதிக்கப்படும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வதுண்டு. அதன்படி இந்த செயலில் ஈடுபட்ட நபர் மறுநாளே விபத்தில் சிக்கியதாக செய்தி வந்தது.

    இதன்மூலம் அ.தி.மு.க.வுக்கு யார்? தீங்கு செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் ஆன்மா தண்டனை வழங்கும். தி.மு.க. ஆட்சியில் சாமானிய மக்கள் மின்சாரத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள்.

    இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வால் தோல்வி அடைந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின்பு சுதாரித்துக்கொண்ட சீனிவாசன், நான் மாற்றி கூறி விட்டேன். அவர் நீட் தேர்வால் உயிரிழக்கவில்லை என்று சமாளித்து பதில் அளித்தார்.

    ×