search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவி தேஜா"

    • விபத்தில் சிக்கியது தொடர்பாக ரவி தேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • விபத்தில் சிக்கிய பிறகும், ரவி தேஜா தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ரவி தேஜா தனது 75 ஆவது படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தின் போது ரவி தேஜாவின் தசைப்பகுதி கிழிந்துள்ளது. இதற்காக அவர் ஆறு வார காலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    விபத்தில் சிக்கியது தொடர்பாக ரவி தேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். தற்போது நலமாக உணர்கிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்துகள் மற்றும் ஆதரவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    விபத்தில் சிக்கிய பிறகும், ரவி தேஜா தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது காயம் மேலும் அதிகரித்துள்ளது. ரவி தேஜா விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் விரைவில் நலம்பெற ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கு சினிமா துறையில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா.
    • தற்பொழுது அவரது 75-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    தெலுங்கு சினிமா துறையில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. மக்களால் மாஸ் மஹாராஜா என அழைக்கப்படும் நடிகராவார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ப்ளாக்ப்ஸ்டர் ஹிட்டானதே அதற்கு காரணம்.

    பல தெலுங்கு முன்னணி திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் நடித்து கொண்டு இருந்த ரவி தேஜா, 'நீ கோசம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதைத்தொடர்ந்து 'இட்லு ஸ்ரவானி சுப்பிரமண்யம்' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    கடைசியாக 'ஈகிள்' திரைப்படத்தில் ரவி தேஜா நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்பொழுது அவரது 75-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் ஒரு அதிரடி மாஸ் கமெர்ஷியல் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடிக்கிறார். இதற்கு முன் 2022 ஆம் ஆண்டு வெளியான 'தமாக்கா' திரைப்படத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. பீம்ஸ் செசிரோலியோ இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். படத்திற்கு திரைக்கதை எழுத்தாளரான பானு போகவரப்பு இப்படத்தை இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் வால்டர் வீரய்யா திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஆவார். படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றது. மேலும் முதல் நாள் படப்பிடிப்பையும் இன்று தொடங்கினர். படத்தை குறித்து மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.

    பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் ஆந்திரா தேர்தல் 2024 போட்டியிடுகிறார். பவன் கல்யாணுக்கு அமோக ஆதரவு கிடைத்துக் கொண்டு இருக்கும் நிலையில். மே 7 ஆம் தேதி அல்லு அர்ஜூன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவினை பதிவிட்டார் அதில் பவன் கல்யாண் காருவின் மீது எனக்கு எப்பொழுது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவர் எடுத்துக் கொண்ட பாதையை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு என்று பதிவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக் நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.

    அதை அறிந்துக் கொண்ட ரசிகர்கள் ஷில்பா ரவிந்திராவின் வீட்டை சூழ்ந்துக் கொண்டனர். அவரைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்களுக்கு கையசைத்தும் நன்றி தெரிவித்தும் அன்பை பகிர்ந்துக்கொண்டார் அல்லு அர்ஜூன். பின் அவரது நண்பரான ஷில்பா ரெட்டிக்கு வாக்கு அளிக்குமாருக் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'.
    • இப்படத்தில் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கிறார்.

    இயக்குனர் வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்தியா திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. இந்த படத்தில் பாலிவுட் நடிகைகள் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இணைந்து நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசைமைக்கிறார்.


    டைகர் நாகேஸ்வரராவ்

    அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். 1970-களில் ஸ்டூவர்ட்புரம் எனும் கிராமத்தில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வரராவ் என்னும் திருடனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தில் டைகர் நாகேஸ்வரராவ் எனும் கதாபாத்திரத்தில் ரவிதேஜா வித்யாசமான கெட்டப்பில் நடிக்கிறார்.


    டைகர் நாகேஸ்வரராவ் போஸ்டர்

    தற்போது இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'டைகர் நாகேஸ்வரராவ்' திரைப்படம் வருகிற அக்டோபர் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் ரவி தேஜா, டைகர் நாகேஸ்வரராவின் தோற்றத்தில் நீராவி ரயில் மீது நின்றிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடித்து வரும் படம் 'டைகர் நாகேஸ்வர ராவ்'.
    • இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.

    இயக்குனர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'டைகர் நாகேஸ்வர ராவ்'. இப்படத்தில் நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகி வருகிறது.


    ரவி தேஜா

    'டைகர் நாகேஸ்வர ராவ்' 1970-களில் ஸ்டூவர்ட் புரம் என்ற கிராமத்தில் வாழ்ந்த திருடன் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் உருவாவதால், கதையின் கதாநாயகனாக நடிக்கும் ரவி தேஜா, இந்த கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றத்தை மாற்றியிருக்கிறார்.

    இந்நிலையில், இந்தப் படத்தில் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் அனுபம் கேர் இணைந்திருக்கிறார். அழுத்தமான வேடத்தில் நடிக்கவிருக்கும் அனுபம் கேர், 'டைகர் நாகேஸ்வர ராவ்' படத்தின் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தயாரித்து வழங்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' எனும் படத்தில் நடித்திருந்தார்.

    அனுபம் கேர் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் நட்சத்திர பட்டாளத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இந்திய அளவில் அதிகரித்திருக்கிறது.

    ×