search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ சக்கரம்"

    • இந்து மதத்தின் சிறப்பை உலகம் அறிய செய்தவர் ஆதிசங்கரர்
    • சங்கரர் என்றால் (சம்+ கரன்) நல்லதையும், இன்பத்தையும் செய்பவர் என்று அர்த்தமாகும்.

    * இந்து மதத்தின் சிறப்பை உலகம் அறிய செய்தவர் ஆதிசங்கரர்

    * சங்கரர் என்றால் (சம்+ கரன்) நல்லதையும், இன்பத்தையும் செய்பவர் என்று அர்த்தமாகும்.

    * பத்ரிநாத், திருச்செந்தூர் உள்பட பல ஆலயங்களில் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகள் அர்ச்சகர்களாக இருந்து பூஜை செய்யும் முறையை ஆதிசங்கரர் உருவாக்கினார்.

    * ராமேசுவரம் கோவிலில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிராமணர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற முறையை கொண்டு வந்ததும் ஆதிசங்கரரே.

    * காசியில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த நவனாப் புதிய சிந்தனை பெற்ற ஆதிசங்கரர் 'மனீஷா பஞ்சகம்' என்ற 5 சுலோகங்களை இயற்றினார்.

    * ஒரு தடவை ஆதிசங்கரர் இமயமலையில் அடர்ந்த காட்டுக்குள் தியானம் செய்ய சென்றார். அப்போது அவர் கமண்டலத்தையும் தண்டத்தையும் தூக்கி வீசினார். அந்த தண்டம் மரமாகவும் கமண்டலம் நதியாகவும் மாறியது.

    * அம்பாளை 64 உபகாரங்களை அளித்து வழிபடுவார்கள். இந்த வழிபாட்டின் போது ஸ்ரீ சக்கர சிம்மாசனத்தில் அன்னை எழுந்தருளி இருப்பதாக பாவித்து பூஜிப்பது நல்லது.

    * யந்திரத்தின் நடுவில் பிந்துவில் அம்பிகையை எழுந்தருளச்செய்து,அவளது பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி ஒவ்வொரு கோணங்களிலும் எழுந்தருளி இருப்பதாக பாவித்து வழிபடுவதே ஸ்ரீ சக்கர பூஜையாகும்.

    * ஆதிசங்கரர் நிறுவியது போன்று தற்போது பல பல அம்பிகை தலங்களில் ஸ்ரீசக்கர வழிபாடு நடத்தப்படுகிறது. ஸ்ரீ சக்கரத்தினைச் சுற்றி மதில்களாகவும் கோட்டைகளாகவும் 44 வரிசைகளை பாவனையுடன் பூஜிக்க வேண்டும். இதுவே ஸ்ரீ சக்கர பூஜையின் முதன்மையான அம்சமாக சொல்லப்படுகிறது.

    * ஸ்ரீ சக்கர வழிபாடுக்கு " வித்யோபாகனை" என்ற பெயரும் உண்டு. ஆதிசங்கரர் வகுத்து கொடுத்துள்ள நெறிப்படி இந்த ஸ்ரீ சக்கர வழிபாடு நடத்தப்படுகிறது.

    * ஆதிசங்கரர் உருவாக்கிய ஸ்ரீ சக்கரத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், அவற்றில் கணித அறிவும், விஞ்ஞான உணர்வும் நிரம்பி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டனர்.

    * சக்கரங்கள் அனைத்துக்கும் ஸ்ரீ சக்கரமே ராஜாவாக கருதப்படுகிறது. எனவே ஸ்ரீ சக்கரத்தை " சக்ரராஜம்" என்று போற்றுகிறார்கள்.

    * யந்திரங்களில் நிறைய எழுத்துக்கள் காணப்படும். ஆனால் சக்கரத்தில் இருப்பது இல்லை.

    * தென்இந்தியாவில் ஸ்ரீ சக்கர வழிபாடுகள் பரசுராம கல்ப நூல் வழிப்படி நடத்தப்படுகிறது.

    * ஆதி சங்கரர் நிறுவியுள்ள ஸ்ரீ சக்கரங்களை முறைப்படி வழிபடுபவர்கள் யோகமும், குரு பலனும் கிடைத்து பரம ரகசியங்களை அறிந்து தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெறமுடியும்.

    • காஞ்சியில் புண்ணிய கோடி ஆலயத்தில் சங்கரரது சிற்பச்சிலை.
    • விஷ்ணு காஞ்சியில் அனந்தசரஸ் குளத்தின் தெற்கே நான்கு தூண் மண்டபத்தில் சங்கரரது சிற்பச் சிலை.

    காஞ்சியில் சங்கரர் வாழ்ந்ததை நினைவூட்டும் வகையில் காஞ்சியைச் சுற்றிலும் உள்ள கோவில்களிலும், காஞ்சி மாநகரின் உட்புறமுள்ள சிவ, விஷ்ணு ஆலயங்களிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் சங்கராச்சாரியார் உருவத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள், கல்வெட்டுகள், எழுத்துப் பொறிப்புகள், சிலா பிம்பங்கள் போன்ற எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

    1. காமாட்சி கோவிலின் கர்ப்ப கிரகத்திற்கு வடகிழக்கே சற்று உயரத்திலுள்ள மண்டபத்தில் சங்கரரது ஜீவகளையுள்ளது போல் ஒரு சிற்பம்.

    2. யாத்ரோத்சவ காமாட்சி, பங்காரு காமாட்சி அம்மன்களின் சிற்றாலயங்களிலும் செதுக்கு வேலைகொண்ட சங்கரரின் உருவங்கள்.

    3. குமர கோஷ்டத்தில் சங்கரரது சிற்பம்.

    4. காஞ்சியின் அண்மையில் சிவலிங்க மேட்டுக்கோவிலில் சங்கரர் சிற்பச் சிலை.

    5.காஞ்சியில் புண்ணிய கோடி ஆலயத்தில் சங்கரரது சிற்பச்சிலை.

    6.விஷ்ணு காஞ்சியில் அனந்தசரஸ் குளத்தின் தெற்கே நான்கு தூண் மண்டபத்தில் சங்கரரது சிற்பச் சிலை.

    7. காஞ்சி வைகுண்ட பெருமாள் ஆலயத்தில் சங்கரர் சிற்பச் சிலை.

    8. வைணவர்களின் தலை சிறந்த கோவில்களில் ஒன்று ஸ்ரீரங்கம் என்பது உலகறிந்த உண்மை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சங்கரர் சிற்பம் சந்திர புஷ்கரணி கரையில் உள்ளது.

    9. சென்னையருகில் திருவொற்றியூர் சங்கர மடத்தில் பூஜை செய்யும் புனித இடத்தில் உள்ள சுவர் ஒன்றில் தனது நான்கு பிரதான சிஷ்யர்களோடு சங்கராச்சாரியார் அமர்ந்திருக்கும் காட்சி.

    10. விஷ்ணு காஞ்சி வரதராஜர் கோவிலுக்குள் பெருந்தேவி அம்பாள் கர்ப்ப கிரகத்திற்குள் நுழையும் வழிக்கு அருகிலுள்ள பெரிய கற்றூண்களைத் தாங்கும் உத்திரத்தை ஆசனமாக கொண்ட உட்கார்ந்த நிலையிலுள்ள வியாசர் கற்சிலையும் அண்மையிலேயே சிறு கற்றூண்கள் தாங்கும் சிறிய உத்திரத்தின் மீது சங்கரர் கை கூப்பி நிற்கும் நிலையிலும் சிற்பம் உள்ளது.

    செவிலிமேடு, பாப்பான் சாவடி, பூவிருந்தமல்லி போன்ற ஊர்களின் ஆலயங்களில் சங்கரரை நினைவூட்டும் சான்றுகள் எண்ணற்றவை காணக்கிடக்கின்றன.

    • கயிலாயத்தில் ஆதிசங்கரர், சிவபெருமானை வணங்கி பொங்கிப் பொலியும் பூரண அருளோடு புறப்பட்டார்.
    • அப்போது சங்கரரிடம் ஐந்து ஸ்படிகலிங்கங்களை... உலக நன்மைக்காக இறைவன் அருளினார்.

    கயிலாயத்தில் ஆதிசங்கரர், சிவபெருமானை வணங்கி பொங்கிப் பொலியும் பூரண அருளோடு புறப்பட்டார்.

    அப்போது சங்கரரிடம் ஐந்து ஸ்படிகலிங்கங்களை... உலக நன்மைக்காக இறைவன் அருளினார்.

    சங்கரர் அந்த 5 லிங்கங்களில் முக்திலிங்கத்தையும் பதரிகாசிரமத்திலும், நேபாளத்தில் நீலகண்ட சேத்திரத்தில் வரலிங்கத்தையும்,

    மோட்சலிங்கத்தைச் சிதம்பரத்திலும், போகலிங்கத்தைச் சிருங்கேரியிலும், யோகலிங்கத்தைக் காஞ்சீபுரத்திலும் பிரஷ்டை செய்தார்.

    ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து கடமைகளையும் ஆதிசங்கரர் தமது நூல்களில் தொகுத்து அளித்துள்ளார்.

    விநாயகர், முருகன், சிவன், சக்தி, விஷ்ணு,சூரியன் ஆகிய 6 தெய்வங்களின் வழிபடும் முறையை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தியதால் ஆதிசங்கரருக்கு, "ஷண்மதஸ்தாபசாச்சாரியார்" என்ற பெயர் ஏற்பட்டது.

    விநாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை அனைத்து கடவுள்கள் மீதும் சங்கரர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அந்த பாடல்கள் அனைத்தும் எளிய முறையில், உயர்வான தத்துவங்களைக் கொண்டதாக உள்ளன.

    • தன் பரம குரு கௌட பாதர் இயற்றிய மாண்டூக்ய காரிகாவிற்கு ஒரு விளக்க நூல் இயற்றியுள்ளார்.
    • உபநிஷத்துக்களில் உருவில் சிறியதாக விருப்பினும் ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்துள்ளது இது.

    ஆதிசங்கரர் ஸ்தோத்திரங்கள் மற்றும் வேதாந்த நூல்கள் ஏராளமாக ஏழுதிஉள்ளார்.

    முக்கிய தசோபநிஷத்துக்களுடன் ச்வேதாச்வதரோபநிஷத், ந்ருஸிம்ஹ பூர்வ தாபனியோபநிஷத், ந்ருஸிம்ஹோத்தர தாபனியோபநிஷத் இவற்றிற்கும் விளக்க உரை எழுதியுள்ளார்.

    தன் பரம குரு கௌட பாதர் இயற்றிய மாண்டூக்ய காரிகாவிற்கு ஒரு விளக்க நூல் இயற்றியுள்ளார்.

    உபநிஷத்துக்களில் உருவில் சிறியதாக விருப்பினும் ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்துள்ளது இது.

    உபநிஷத்தின் முக்கிய பாகத்தில் 12 வாக்கியங்கள் தான் இடம் பெறுகின்றது இது. பிரணவத்தின் பொருளையும் சக்தியையு-ம் விளக்குகிறது.

    இவற்றைத் தவிர வியாஸரின் ப்ரஹ்ம சூத்திரத்திற்கு அரிய விளக்க உரை எழுதியுள்ளார்.

    மஹாபாரதத்தில் வரும் (1) ஸனத் ஸ§ஜாதீயம், (2) பகவத்கீதை (3) விஷ்ணு ஸஹஸ்ர நாமம் இம்மூன்று நூல்களுக்கும் சங்கரர் பாஷ்யம் எழுதியுள்ளார்.

    விவேக சூடாமணி, உபதேச ஸாஹஸ்ரீ, ஆத்ம போதம் போன்ற பிரகரணக்ரந்தங்களையும் இயற்றியுள்ளார்.

    வேதாந்த தத்துவத்தை விளக்க பல க்ரந்தங்களை இயற்றியுள்ளார். இவ்வாறு ஸ்ரீ சங்கரர் மக்கள் அக்ஞான இருளிலிருந்து ஞான ஒளிபெற பரம உபகாரம் செய்துள்ளார்.

    • ஆதி சங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளில் நான்கு பீடங்களை நிறுவினார்.
    • அதற்கு தனது தலைமைச் சீடர்களை பீடாதிபதிகளாக நியமித்தார்.

    ஆதி சங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளில் நான்கு பீடங்களை நிறுவி, அதற்கு தனது தலைமைச் சீடர்களை பீடாதிபதிகளாக நியமித்தார்.

    முதல் பீடாதிபதி திசை பீடம் மகாவாக்கியம் வேதம்

    பத்மபாதர் கிழக்கு கோவர்தன மடம் பிரக்ஞானம் பிரம்மம் ரிக் வேதம்

    சுரேஷ்வரர் தெற்கு சிருங்கேரி சாரதா மடம் அஹம் பிரம்மாஸ்மி யசுர் வேதம்

    அஸ்தாமலகர் மேற்கு துவாரகை காளிகா மடம் தத்துவமசி சாம வேதம்

    தோடகர் வடக்கு ஜோஷி மடம் அயமாத்மா பிரம்மம் அதர்வண வேதம்

    நிர்வாணாஷ்டகம்

    முதன்மைக் கட்டுரை: நிர்வாணாஷ்டகம்

    நிர்வாணாஷ்டகம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.

    இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம்ஆகியற்றை மறுத்து இறுதியில் பிரம்மமே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.

    ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.

    • கபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று.
    • இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.

    தொன்று தொட்டு நிலவி வந்த

    சிவனை வழிபடும் சைவம்,

    திருமாலை வழிபடும் வைணவம்,

    சக்தியை வழிபடும் சாக்தம்,

    விநாயகரை வழிபடும் கணாபத்தியம்,

    முருகனை வழிபடும் கௌமாரம்,

    சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக (ஷண்மதங்கள்) வகுத்தளித்தார்.

    அவர் கருத்துப்படி, குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.

    வாதங்கள்

    கபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.

    கர்ம மீமாம்ஸா எனப்படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர்.

    மந்தன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர். சங்கரருடன் வாதத்தில் தோல்வி அடைந்த மந்தன மிஸ்ரர், துறவறம் ஏற்று சுரேஷ்வரர் என்ற பெயருடன், சங்கரரின் சீடரானார்.

    • இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.
    • இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

    துறவறம்

    தமது எட்டாம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

    மனீஷா பஞ்சகம்

    தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற போது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.

    அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர்.

    அப்போது அச்சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா" எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுந்து பணிகிறார் என சங்கர விஜயம் கூறுகின்றது.

    உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார்.

    இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.

    இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

    • ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது.
    • பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம்.

    பொதுவாக ஆத்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது.

    இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது.

    இவரது தத்துவம் அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது.

    பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது.

    இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான்.

    நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் விளங்குகிறது.

    நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது.

    நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது, வலப்புறத்திலும், இடப்புறத்திலும் மேலும் கீழும் பரவியிருக்கிறது.

    இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்தை தவிர வேறெந்த பொருளும் கிடையாது.

    உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றியுள்ளன.

    ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் உடனடி பிரச்னைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது.

    அது தொலைவில் உள்ளது. தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார்.

    ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது.

    பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம்.

    • காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.
    • தமது 32ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்.

    சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி

    என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார்.

    காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.

    தமது 32ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்.

    காலம்

    கி.மு நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்துவந்த காலத்தினை பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.

    • அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.
    • மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது.

    ஆதிசங்கரர், ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.

    இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.

    இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.

    மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது.

    சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

    • செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    1. காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சீபுரம்தான் நினைவுக்கு வரும்.

    ஆனால் காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    2. மாங்காட்டில் காமாட்சி அம்மன் சிவனை நோக்கி தவம் இருக்கும் கோலத்தில் காட்சித் தருகிறாள்.

    3. அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள்.

    அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.

    4. மாங்காடுக்கு வடமொழியில் "ஆம்ராரண்யம்" என்று பெயர்.

    அம்ரம் என்றால் மாமரம். அரண்யம் என்றால் காடு. எனவே ஆம்ராரண்யம் என்று அழைக்கப்பட்டது.

    5. காமாட்சி வருவதற்கு முன்பே மாங்காடு புண்ணிய பூமியாக இருந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    6. மாங்காடு தலத்தில் பார்கவர், மார்க்கண்டேயர் ஆகிய மகரிஷிகள் தவம் இருந்து பலன் பெற்றுள்ளனர்.

    7. மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள்.

    அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.

    8. விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர்.

    மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியதுதான்.

    9. இவ்வாலயத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு ஸ்ரீசக்கரமே மூலஸ்தானமாக உள்ளது.

    10. இவ்வாலயத்தில் காமிக ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    11. மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    12. இத்திருக்கோவிலில் "எலுமிச்சம்பழம் கொண்ட ஆறு வார வழிபாடு" பக்தர்களால் பெரிதும் கடைப்பிடிக்கப் படுகிறது.

    13. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    14. பூந்தமல்லிக்கும், குன்றத்தூருக்கும் நடுவில் மாங்காடு உள்ளது.

    சென்னையில் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வர மாநகர பஸ் வசதி உள்ளது.

    15. மாங்காடுக்கு சூதவதனம், மாலை என்ற பெயர்களும் உண்டு.

    16. மாங்காடு காமாட்சிக்கு ஆதிகாமாட்சி, தபஸ் காமாட்சி என்றும் பெயர்கள் உண்டு.

    17. இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு சக்கரம், சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய 8 வகையான கந்தங்களைக் கொண்டது.

    18. மாங்காடு காமாட்சிக்கும் ஒற்றை மாமரத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனோ இத்தலத்தில் ஒற்றை மாமரம் இல்லை.

    19. மாங்காடு கோவிலில் அரசர்கள் காலத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.

    அந்த கல்வெட்டுகளில் 8 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

    20. கல்வெட்டுகளில் மாங்காட்டின் பெயர் "அழகிய சோழ நல்லூர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    21. சிவபெருமானின் உத்தரவை ஏற்று பார்வதி தேவி, கன்னிப் பெண்ணாக மாங்காட்டில் எழுந்தருளியதால் இத்தலத்தில் கன்னிப்பெண்கள் மனம் உருகி அம்பாளை வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    22. அன்னை காமாட்சியை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடி விடும்.

    23. இத்தலத்து தங்கரதம் 17.5 கிலோ எடை அளவு தங்கத்தால் செய்யப்பட்டதாகும்.

    இது தமிழகத்தில் உயரமான தங்க ரதங்களில் ஒன்றாகும்.

    24. மாங்காடு காமாட்சியை முன்பு பூஜை வைத்த ஏகாம்பரம் குருக்கள் பார்த்து இருப்பதாக செவி வழி செய்தி ஒன்றுள்ளது.

    25. கோவில் உள் பிரகாரத்தில் ஆதிசங்கரரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வணங்கும் முறைகள் உள்ளன.
    • மாங்காட்டில் அனுஷ்டிக்கப்படும் வழி முறைதான் “ஆறு வார வழிபாட்டு முறையாகும்”.

    உலகில் பிறந்துவிட்ட அனைவருக்கும் ஏதேனும் ஒரு விதத்தில் மனக்குறைகள் இருந்து கொண்டுதான் இருக்கும்.

    கவலைகளைப் போக்குவதற்கே அன்னை "காமாட்சி"யாக 'மாங்காடு பதி'யினிலே வடிவெடுத்திருக்கிறாள்.

    ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வணங்கும் முறைகள் உள்ளன.

    அதுபோல் மாங்காட்டில் அனுஷ்டிக்கப்படும் வழி முறைதான் "ஆறு வார வழிபாட்டு முறையாகும்".

    "ஆறுவார வழிபாடு" என்பது 'ஆறு முழுமையான வாரங்கள்' நமது கோரிக்கையை வைத்து அம்மனை வழிபடுவதாகும்.

    முதல் வாரம் செல்லும் போது வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய் போன்ற அர்ச்சனைப் பொருட்களுடன் மிக முக்கியமாக

    "இரண்டு" எலுமிச்சைப் பழங்களைக் கொண்டு சென்று,

    உங்கள் வேண்டுதலை அம்மனிடம் சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டு அர்ச்சனை செய்தல் வேண்டும்.

    ஸ்ரீ அர்தமேரு ஸ்ரீ சக்ரத்துடன் கூடிய ஸ்ரீ ஆதிகாமாட்சியை தொழுதுவிட்டு,

    ஸ்ரீதபஸ் காமாட்சியை வணங்குகையில் நாம் வருவது எத்தனையாவது வாரம் என்று சொன்னால் "ஒரு" எலுமிச்சையைத் தருவார்கள்.

    அதைக் கொண்டு வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபட்டு வருதல் வேண்டும்.

    இப்படி முதல் வார வழிபாடு முடிந்து அடுத்த வாரம் செல்கையில் வீட்டில் பூஜித்த எலுமிச்சையுடன் புதிதாக ஒன்றை வாங்கி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.

    இம்முறையும் ஸ்ரீ தபஸ் காமாட்சி சன்னதியில் ஒரு எலுமிச்சையைப் பெற்று வந்து இரண்டாவது வார வழிபாடு வீட்டிலேயே அனுஷ்டிக்க வேண்டும்.

    இது போன்றே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது வாரமும் ஆலயத்திற்குச் சென்று ஸ்ரீ காமாட்சியைத் தொழுது

    எலுமிச்சை பழையது புதியது இரண்டையும் கொடுத்து சன்னதியில் தரும் எலுமிச்சையைக் கொண்டு வந்து வீட்டில் பூஜிக்க வேண்டும்.

    ஆறாவது வார வழிபாட்டை வீட்டில் முடித்தவுடன் ஏழாவது முறையாக ஆலயத்திற்குச் சென்று ஆறுவார வழிபாட்டினை முறையாக முடிக்க வேண்டும்.

    நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். முதல் வாரம் எந்தக் கிழமையில் செல்கின்றீர்களோ அதே கிழமையில் அடுத்த வாரம் செல்லும் போதுதான் முதல் வார வழிபாடு பூர்த்தியாகிறது.

    மூன்றாவது முறை செல்லும் போது இரண்டாவது வார வழிபாடு பூர்த்தியாகிறது.

    அதே போன்று அதே கிழமைகளில் ஏழாவது முறை செல்லும் போதுதான் ஆறு வார வழிபாடு பூர்த்தியாகின்றது.

    அப்படி பூர்த்தியாகும் நாளன்று அர்ச்சனைப் பொருட்களுடன், நன்கு காய்ச்சிய பாலுடன் ஏலக்காய், கற்கண்டு, பச்சைக் கற்பூரம்,தேன் போன்றவற்றை

    வீட்டிலேயே கலந்து உங்கள் வசதிப்படி எந்த அளவு முடியுமோ அவ்வளவு எடுத்து வந்து அம்மனுக்கு நிவேதனம் செய்து பிரகாரத்தில் உள்ள பக்தர்களுக்கு விநியோகித்து ஆறுவார வழிபாட்டினை முடிக்க வேண்டும்.

    சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் நிவேதனப் பாலை வழங்கலாம்.

    இது பால் பிரியளான அம்மனுக்கே கொடுத்தது போலகும். இம்முறை எலுமிச்சையை வாங்குதல் கூடாது.

    இப்படி தொழுதால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும் என்பது உறுதி.

    முடிந்தால் முதல் வாரம் செல்லும் கிழமைகளிலேயே மற்ற ஆறு வாரங்களும் சென்று வந்தால் நலம்.

    ஆனால் பெண்களுக்கு இது அவ்வளவாகப் பொருந்தாது.

    அப்போது மாற்றுக் கிழமைகளில் சென்று வரலாம். தவறில்லை.

    ஆறுவார வழிபாட்டின் போது இந்நூலிலுள்ள ஆறுவாரப் பாடல்கள் மற்றும் துதிப் பாடல்களைப் பாடித் துதித்தால் வெற்றி நிச்சயம்.

    ஏனெனில் இவை பலகாலம் அம்மன் சன்னதியில் பாடப்பெற்று அம்மனால் ரசிக்கப்பட்டவையாகும்.

    மேலும் வீட்டில் எலுமிச்சையை வைத்துப் பூஜிக்கும் போது ஸ்ரீ அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்துடன் கூடிய காமாட்சி அம்மன் படத்தின் முன் வைத்து அர்ச்சித்துப் பூஜிக்க வேண்டும்.

    ×