search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் வழிபாடு"

    • தோப்புக் கரணம் போடுவது நல்ல உடற்பயிற்சி முறை.
    • இதைச் செய்வதால் உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்து மூளைக்கு பலமும், மன அமைதியும் ஏற்படும்.

    பிள்ளையாருக்கு முன் தோப்புக் கரணம் போடும் வழக்கம் வர காரணமாக இருந்தவர் மகா விஷ்ணுவே.

    ஒருசமயம் விஷ்ணு அசந்து தூங்கிய போது அவரை எழுப்பி விட சக்கரத்தைப் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார்.

    மருமகனான அவரிடம் சக்கரத்தை வாங்கிட அதட்டி, மிரட்டி கேட்க முடியாது.

    இதனால் அவரைச் சிரிக்க வைத்தால் சக்கரம் கீழே விழுந்துவிடும் எடுத்துக் கொள்ளலாம் என்று கருதிய விஷ்ணு இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு கீழும் மேலும் குதித்தார்.

    விநாயகர் சிரிக்க சக்கரம் கீழே விழுந்து விட்டது. விஷ்ணு அதை எடுத்துக் கொண்டு நகர்ந்தார்.

    தோப்புக் கரணம் போடுவது நல்ல உடற்பயிற்சி முறை.

    இதைச் செய்வதால் உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்து மூளைக்கு பலமும், மன அமைதியும் ஏற்படும்.

    ஆணவமும் மாயையும் அகன்றிட அனைவரும் தோப்புக்கரணம் (தோர்பி கரணம்) போடலாம்.

    உண்ணி அப்பம் பிரசாதம்

    தமிழ்நாட்டில் மோதகமே விநாயகருக்கு முக்கிய பிரசாதம்.

    ஆனால் கேரளாவில் கொட்டாரக்கரா என்ற இடத்தில் சன்னதி முன்பாகவே உண்ணி அப்பம் தயார் செய்யப்பட்டு படைத்து வினியோகிக்கப்படுகிறது.

    ஈஸ்வர மங்கலம் விநாயகர் கோவிலும் உண்ணி அப்பமே முக்கிய நிவேதனப் பொருள்.

    • சிவ வைணவ ஆலய சர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
    • விநாயக நவராத்திரி என விநாயகர் சதுர்த்தி முதல் கொண்டாடப்பட்டு வரும் விசேஷ வழிபாடுகள் இந்த சன்னதியில் நடைபெறும்.

    தருமமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னையில் கோசை மாநகர் என்ற பெயரில் விளங்கிய கோயம்பேடும், அரும்பாக்கம் எனப்படும் நகருக்கும் நடுவில் ஒரு சுந்தர கணபதி கோவில் உள்ளது.

    சுற்றிலும் அருகம்புல்லால் சூழப்பட்ட காடாக ஒரு காலத்தில் இருந்ததால் அருகம்புல் பாக்கமாகி காலப்போக்கில் அரும்பாக்கமாக மருவியது.

    இத்தலம் சத்திய விரதச் சேத்திரம் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டு சத்யம்-அறம், பாக்கமாகி அரும்பாக்கமாக ஆகிவிட்டது எனவும் கூறுவர்.

    பெண்கள் பலர் கூடி இங்கே ஒரு கணபதி உருவத்தை வழிபட்டு, காலப்போக்கில் பக்தர்கள் கூடி 1969 முதல் மிகச் சிறப்பான சக்தி உடைய, அழகு பொருந்திய விநாயகர் சிலையை ஸ்தாபித்து எல்லாவித விசேஷங்களையும் செய்து வருகின்றனர்.

    சிவ வைணவ ஆலய சர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    விநாயக நவராத்திரி என விநாயகர் சதுர்த்தி முதல் கொண்டாடப்பட்டு வரும் விசேஷ வழிபாடுகள் இந்த சன்னதியில் நடைபெறும்.

    அருகால் வழிபட்டு வர ஆனந்தம் அருளும் இவரை வழிபட்டு வரலாம். தொடர்புக்கு:- 044-24756514.

    • வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார்.
    • தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

    கண் திருஷ்டி விநாயகர் யந்திர வடிவம்

    திருஷ்டிகளை விரட்டுகிற இந்த யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

    மூல மந்திரம்:

    ஓம் ஸ்ரீம் கம் கணபதியே மம க்ரஹ திருஷ்டி தோனம் நிவர்ஜய நிவர்தய :

    முள்ளங்கி விரும்பி

    வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார்.

    தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

    எத்தனை அவதாரம் எடுத்தாய்

    வக்ர துண்ட விநாயகர் - உலகின் பிரளயம் தொடங்கி முடியும் போது இவர் தோன்றி அரி, ஹரன், அயன் இவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று

    • அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார்.
    • அதனால் இவ்விநாயகருக்கு “கூப்பிடு விநாயகர்” என்ற சிறப்புப் பெயர் உண்டானது.

    ஒருமுறை சுந்தர மூர்த்தி சுவாமிகள் தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் மிகுதியாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் ஈசன்.

    சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்துச் மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார்.

    திருமுருகன் பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார்.

    அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார்.

    அதனால் இவ்விநாயகருக்கு "கூப்பிடு விநாயகர்" என்ற சிறப்புப் பெயர் உண்டானது.

    • கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
    • பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.

    பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.

    கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

    ஆனால் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணைய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.

    புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும்.

    இதனைத் தான் "பிடித்து வைத்தால் பிள்ளையார்" என்று வேடிக்கைப் பழமொழியாக சொல்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோதகம் ஏந்திய கை அருளை குறிக்கிறது. எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார்.
    • தும்பிக்கை மறைத்தலை குறிக்கிறது. எனவே இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.

    விநாயகப் பெருமானுக்கு ஐந்து கரங்கள்.

    ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது. தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.

    ஆகவே கணேசமூர்த்தி படைத்தல், அழித்தல், காத்தல் ஆகியவற்றை செய்யும் மும்மூர்த்தியாகிறார்.

    மோதகம் ஏந்திய கை அருளை குறிக்கிறது.

    எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார். தும்பிக்கை மறைத்தலை குறிக்கிறது. எனவே இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.

    பிள்ளையார் சுழி

    உலகத்தில் முதன் முதலாக எழுத்தைக் கண்டு பிடித்து எழுதத் தொடங்கியவர் விநாயகர் தான் என்பது புராணம் கூறுவது.

    மகாபாரதத்தை வியாசர் எடுத்துரைத்த போது அதை அழியாமல் காக்கும் பொருட்டு விநாயகர் தன் தந்தங்களில் ஒன்றை ஒடித்து அதையே எழுத்தாணியாக்கி எழுதினார்.

    எழுத்தைக் கண்டு பிடித்த கணபதிக்கு நம் நன்றியைச் சொல்லும் விதமாக எதை எழுதத் தொடங்கினாலும் (உ) பிள்ளையார் சுழியைப் போடுகிறோம்.

    அதன்படி இவர் முழு முதற்கடவுள் என்கிறோம். முதல் எழுத்தாளரும் விநாயகர் பெருமானே.

    • விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • மும்பையில் இந்த விழா 10 நாட்கள் தடபுடலாக நடக்கும்.

    வேலூர் அருகே உள்ள சேன்பாக்கம் என்ற ஊரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் 11 சுயம்பு விநாயகர்கள் உள்ளனர்.

    இத்தனை சுயம்பு விநாயகரை வேறு எங்கும் பார்க்க முடியாது.

    விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பது ஏன்?

    விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    மும்பையில் இந்த விழா 10 நாட்கள் தடபுடலாக நடக்கும்.

    இந்த விழாவை 1895 ம் ஆண்டு நிலகர் தொடங்கி வைத்தார்.

    விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு மற்றும் குளங்களில் கரைப்பர்.

    விநாயகப் பெருமானின் தாயார் பார்வதியைப் போல கங்கையும் அவருக்கு அன்னை.

    எனவே தாய் கங்கையுடன் விநாயகர் ஐக்கியமாகி விடுகிறார் என்பதை சுட்டிக் காட்டவே விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதாக ஐதீகம்.

    • சந்தைக்குப் போன அவர் மூட்டையைப் பிரித்த போது உளுந்தாக மாறி இருக்க இங்கு வந்து பிள்ளையாரிடம் மன்னிப்பு கேட்டார்.
    • அன்று முதல் பொய்யாமொழி விநாயகர் ஆனார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகில் தீவனூர் என்ற கிராமம் உள்ளது.

    இங்குள்ள பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் அர்ச்சகர் தீபாராதனை செய்யும் போது விநாயகர் சிவலிங்கம் போன்றும் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள்.

    பக்தர் ஒருவர் ஒரு காலத்தில் மாடுகள் மீது மிளகு மூட்டைகளை வைத்தபடி உளுந்தூர்பேட்டை சந்தைக்கு போகும் போது, இங்கு தங்கி சமையல் செய்து உணவு சாப்பிட்டார்.

    கோவில் பூசாரி, விநாயகர் படையலுக்காக கொஞ்சம் மிளகு தரக் கேட்டார்.

    இவை மிளகல்ல உளுந்து என்றார்.

    சந்தைக்குப் போன அவர் மூட்டையைப் பிரித்த போது உளுந்தாக மாறி இருக்க இங்கு வந்து பிள்ளையாரிடம் மன்னிப்பு கேட்டார்.

    அன்று முதல் பொய்யாமொழி விநாயகர் ஆனார்.

    இத்தலத்தில் விழுது விடாத ஆலமரம் ஒன்று இருப்பது அதிசயமாகும்.

    சுயம்பு மூர்த்தியான இவரை தரிசிக்க, நினைத்தது நடக்கும் என்பது அங்குள்ள பக்தர்களின் கருத்து.

    • விநாயகர் எப்போதும் ஆதிமூலப் பொருள் ஆவார்.
    • அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.

    ஓம் என்ற பிரணவத்தில் இருந்து வேதங்கள் தோன்றின.

    அப்பிரணவமே எல்லாத் தேவதைகளுக்கும் பிறப்பிடம்.

    உலகத்தின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் பிரணவ மந்திரமே காரணமாகும்.

    பிரணவ சொரூபமாகத் திகழ்பவர் விநாயகர்.

    விநாயகரின் பெருமை எழுத்துக்கும் சொல்லுக்கும் அடங்காதது.

    நினைத்ததை எல்லாம் தரவல்லது.

    ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து நான்காம் நாள் அன்று வரும் சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்று நாம் கொண்டாடி வருகிறோம்.

    விநாயகர் எப்போதும் ஆதிமூலப் பொருள் ஆவார்.

    அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.

    சிவபெருமானிடத்தில் இருந்து முதன் முதலாகத் (ஆதி மூலமாக) தோன்றிய ஒலியே ஓங்காரமாகும்.

    ஆகையால் யாவரும் அவரை வழிபாடு செய்து இடர் களைந்து இன்புற்று வாழ்கின்றனர்.

    சிவபெருமானை வழிபடுவோரின் துன்பம் களையவே விநாயகரை சிவன் தோற்றுவித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • மாவிலை தோரணம் கட்டி வீட்டை மங்களகரமாக மாற்ற வேண்டும்.
    • பூஜை அறையின் நடுவில் மனைப்பலகை போட்டு அதில் விநாயகர் படம் வைத்து, அதில் அருகம்புல் மாலை சூட்ட வேண்டும்.

    பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து மெழுகி கோலமிட்டு அழகுப்படுத்த வேண்டும்.

    கோலம் போடும் போது புள்ளிக் கோலம், பின்னல் கோலம் இன்றி பூக்கோலம் போடுவது நல்லது.

    மாவிலை தோரணம் கட்டி வீட்டை மங்களகரமாக மாற்ற வேண்டும்.

    பூஜை அறையின் நடுவில் மனைப்பலகை போட்டு அதில் விநாயகர் படம் வைத்து, அதில் அருகம்புல் மாலை சூட்ட வேண்டும்.

    அருகில் 5 முக குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

    5 வகை பூக்கள், 5 வகை நறுமணப் பொருட்கள், 5 வகை பழங்கள் படைக்க வேண்டும்.

    அத்துடன் அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, மோதகம், அப்பம், சுண்டல், தாம்பூலம் ஆகியவற்றை வைத்து தீபம் காட்டி வழிபட வேண்டும்.

    இவ்வாறு வழிபட வரமும் கிடைக்கும். வளமும் பெருகும்.

    • விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்.
    • ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.

    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:-

    அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.

    பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சாற்றலாம்.

    கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.

    ரோகினி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.

    மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகு படுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.

    திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.

    புனர்பூசம்: சந்தன அலங்கா ரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.

    பூசம்: தங்கக் கிரீடத்தால் அழகு படுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.

    ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.

    மகம்: தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.

    பூரம்: கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சாற்றவும்.

    உத்திரம்: அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    ஹஸ்தம்: குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    சித்திரை: வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.

    சுவாதி: தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.

    விசாகம்: திருநீறு அலங்காரம் போதும்.

    அனுஷம்: கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.

    கேட்டை : தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்புல் மாலையும் சாற்றவும்.

    மூலம்: சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.

    பூராடம்: தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.

    உத்திராடம்: அருகம்புல் மாலையே போதும்.

    திருவோணம்: சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    அவிட்டம்: வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அலங்காரம் செய்வித்தால் போதும்.

    சதயம்: குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.

    பூரட்டாதி: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.

    உத்திரட்டாதி: ரோஜா மாலை அலங்காரமே போதும்.

    ரேவதி: மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணிவிக்கவும்.

    • வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.
    • விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை சந்திரனின் நான்காவது திதியை சதுர்த்தி என்றும், பவுர்ணமிக்குப் பிறகு குறைந்து வரும் சந்திரனின் நான்காவது திதியை சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைப்பது வழக்கம்.

    இதில் ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இதை மகா சங்கட ஹர சதுர்த்தி என்பார்கள். அதாவது விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

    ஒரு வருடத்தில் 12 சங்கடஹர சதுர்த்திகள் வரும். இவை அனைத்திலும் விரதம் இருந்து விநாயகரை வழிபட முடியாமல் போனாலும் மகா சங்கடஹர சதுர்த்தி அன்று மட்டும் விரதம் இருந்து விநாயகரை மனதார வழிபட்டால், வருடம் முழுவதும் வரும் 12 சங்கடஹர சதுர்த்திகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். நினைத்த காரியங்களை நடத்தி வைக்கும் அற்புத விரதம் இது ஆகும்.

    புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கத் தொடங்குபவர்கள் மகா சங்கடஹர சதுர்த்தியில் தங்களின் விரதத்தை துவங்கலாம். அதோடு மகா சங்கடஹர சதுர்த்தி அன்று ஒரு குறிப்பிட்ட முறையில் விநாயகரை வழிபட்டால் வீட்டில் எப்படிப்பட்ட கஷ்டம் இருந்தாலும் அது விலகி விடும்.

    இந்த ஆண்டு மகாசங்கடஹர சதுர்த்தி இன்று (வியாழக்கிழமை) வருகிறது. இன்றைய தினம் மாலை 6.14 மணிக்கு பிறகே சதுர்த்தி திதி தொடங்குகிறது. மறுநாள் பகல் 3.48 மணி வரை மட்டுமே சதுர்த்தி திதி உள்ளது. இதனால் இன்றே மகாசங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினையும், விநாயகர் வழிபாட்டினையும் மேற்கொள்ளலாம்.

    பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினை மாலையில் தான் மேற்கொள்ள வேண்டும். விநாயகரை வழிபட்ட பிறகு, சந்திரனை தரிசனம் செய்த பிறகு தான் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதி.


    இன்று அதிகாலையில் எழுந்து பூஜை அறையில் உள்ள விநாயகரை அலங்கரித்து, அருகம்புல் சாத்தி, விளக்கேற்றி விரதத்தை துவக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் பால்,பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

    அதுவும் முடியாதவர்கள் எளிமையான உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். மாலையில் வீட்டிலோ அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்றோ விநாயகர் வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

    விநாயகருக்கு விருப்பமான சுண்டல், கொழுக்கட்டை, மோதகம், பிள்ளையார் உருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். விநாயகருக்கு கொழுக்கட்டை செய்யும் போதே உங்களின் வேண்டுதல்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

    பூஜை முடிந்த பிறகு அதை வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கோ அல்லது கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு வருபவர்களுக்கோ பிரசாதமாக வழங்கலாம். மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு உரிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டகம், விநாயகர் அஷ்டோத்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

    ஒரு ரூபாய் நாணயத்தை வீட்டில் உள்ள விநாயகரின் பாதத்தில் வைத்து மனதார உங்களின் வேண்டுதல்களை சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அந்த நாணயத்தை விநாயகர் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

    அடுத்த ஆண்டு மகா சங்கடஹர சதுர்த்தி நாளுக்குள் வேண்டுதல்கள் முழுமையாக நிறைவேறி, பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டால், இதேபோல் அடுத்த ஆண்டும் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.

    இப்படி நீங்கள் வழிபட்டால் அடுத்த 11 நாட்களில் உங்களின் வேண்டுதல் நிறைவேறத் தொடங்குவதற்கான அறிகுறி தெரியத் தொடங்கும். மகா சங்கடஹர சதுர்த்தி தொடங்கி, ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விரதம் இருந்து விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.

    ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். சனி தோஷம், ராகு-கேது தோஷம், சனியால் ஏற்படும் பிரச்சனைகள், சர்ப தோஷத்தால் திருமணம் போன்றவற்றில் தடை உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.


    அதேபோல் சங்கடஹர சதுர்த்தி தோறும் விநாயகருக்கு மாலை வாங்கி சாற்றி, அந்த மாலையை வாங்கி வந்து வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைத்தால் வீடு வாங்க முடியாமல் தவிப்பவர்கள், வீட்டில் பல விதமான பிரச்சனைகளை அனுபவிப்பவர்கள், பலவிதமான தடை, தோல்விகளை சந்திப்பவர்கள் ஆகியோருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

    விநாயகருக்கு அணிவிக்கப்படும் அருகம்புல்லை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடுவதால் தீய சக்திகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

    ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகருக்கு விரதம் இருக்க முடியாதவர்கள் அல்லது மாதந்தோறும் வரும் சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபட்டு, பூஜை செய்ய முடியாதவர்கள் இன்று மகா சங்கடஹர சதுர்த்தி அன்று, விரதம் இருந்து வழிபட்டால், ஓராண்டு முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


    இந்த சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது. ஜாதக ரீதியாக சந்திர தோஷம் இருந்தால் கூட நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருக்க முடியாதவர்கள், சந்திரன் உதயமாகும் நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகி சந்திரன் தோன்றிய பிறகு விநாயகரை வழிபடுவது எல்லா விதமான தோஷங்களையும் போக்கும். வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.

    ×