search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போயஸ் கார்டன்"

    • அதிமுகவில் தற்போது குறிபிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கிறார்கள்
    • திமுக குடும்பத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் தான் அரசியலுக்கு வருவார்கள்

    சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    நான் நடப்பதை எல்லாம் பொறுமையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எம்.ஜி. ஆர் என்னுடன் பல அரசியல் விவகாரங்களை பேசியிருக்கிறார். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது.

    அதிமுகவில் ஒரு சாதாரண ஏழைகூட எம்எல்ஏ ஆகலாம், எம்பி ஆகாலாம் இது நமது கட்சிக்கு உள்ள முறைகள். ஆனால் திமுகவில் எல்லோரும் உழைக்கணும், எல்லோரும் வேலை செய்யணும் ஆனால் திமுக குடும்பத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் தான் அரசியலுக்கு வருவார்கள். மற்றவர்கள் தேர்தலுக்கு வேலை செய்துவிட்டு சத்தம் போடாமல் இருக்கணும். ஆனால் நம் தலைவர்கள் அப்படி இல்லை. அவர்களையே நானும் பின்பற்றி வருகிறேன். எனக்கு குறிப்பிட்ட சாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் கிடையாது. ஜெயலலிதா ஜாதி பார்த்து பழகியவர் அல்ல.

    ஆனால் அதிமுகவில் தற்போது குறிபிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கிறார்கள். நான் ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன். அதிமுக தற்போது 3வது இடத்துக்கும், 4வது இடத்துக்கும் சென்றுள்ளது. தானும் கெட்டு கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர்.

    அதிமுகவில் தனது பிரவேசம் தொடங்கிவிட்டது. இனி கட்சி அழிந்துவிடும் என்று கூற முடியாது என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.

    • வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.
    • சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் புதிய இல்லத்தில் கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

    சென்னை:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். பின்னர் அவர் தி.நகரில் வசித்து வந்தார். இதனிடையே போயஸ் தோட்டம் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.

    இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிதாக வீடு ஒன்றை கட்டி இன்று அதிகாலை கிரகபிரவேசம் செய்துள்ளார்.


    சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் புதிய இல்லத்தில் கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

    • ஜெயலலிதா வீட்டை விற்பனை செய்வதற்கு ஓசை இல்லாமல் முயற்சிகள் நடக்கிறதாம்.
    • ஜெயலலிதா வீட்டை வாங்க சசிகலா விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

    சென்னை:

    ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை விற்பனை செய்ய தீபாவும், தீபக்கும் முடிவு செய்து இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதை தீபா, தீபக் இருவரும் உடனே மறுத்தனர். ஆனால் உண்மையில் ஜெயலலிதா வீட்டை விற்பனை செய்வதற்கு ஓசை இல்லாமல் முயற்சிகள் நடக்கிறதாம்.

    தமிழகத்தில் உள்ள கோடீசுவரர்கள் சிலர் அந்த வீட்டை வாங்க முதலில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அரசியல் சர்ச்சை, சட்ட சிக்கல் போன்றவற்றுக்கு பயந்து எல்லா பணக்காரர்களும் இப்போது விலகி விட்டனர். இதனால் ஜெயலலிதா வீட்டை வாங்க சசிகலா விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

    டிரஸ்ட் ஒன்றை தொடங்கி அதன் வழியாக ஜெயலலிதா வீட்டை வாங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். அந்த டிரஸ்ட்டில் சசிகலா, தீபா, தீபக் ஆகியோர் முக்கிய பொறுப்பில் இருப்பார்களாம். இந்த திட்டம் வெற்றி பெற்று நிறைவேறினால், சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறி விடுவார்.

    ×