search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகரம்"

    • பிரஸ்தானம் மற்றும் ஸ்னேக கீதம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார் சந்தீப் கிஷன்.
    • கடந்த ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    பிரஸ்தானம் மற்றும் ஸ்னேக கீதம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார் சந்தீப் கிஷன். அதைதொடர்ந்து பல வெற்றி படங்களில் தெலுங்கு மொழியில் நடித்து. 2013 ஆம் ஆண்டு மதன்குமார் இயக்கத்தில் வெளியான யாருடா மகேஷ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    அதற்கு பின் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு பரீட்சையமான நடிகரானார். அதைத்தொடர்ந்து மாயவன், நெஞ்சில் துணிவிருந்தால், மைக்கல் போன்ற படங்களில் நடித்தார்.

    கடந்த ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அதைதொடர்ந்து தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நேற்று சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு மாயாஒன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது அதைதொடர்ந்து இன்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் சிவி குமார் இயக்கி மற்றும் தயாரித்து 2017 ஆம் ஆண்டு வெளியான மாயவன் படத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கத்து.

    இப்படம் சைஃபை கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ராமபிரமம் சுன்கரா சார்பாக ஏ.கே எண்டர்டெயின்மண்ட்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. நெயில் நித்தின் முகேஷ் வில்லனாக நடித்து இருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கட்சி பணி செய்யாதவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை
    • மேயர் மகேஷ் எச்சரிக்கை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகின சேரி மாவட்ட தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நாகர்கோவில் மாநகர, மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. மாநகர அவைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாநகர துணை செயலாளர்கள் துணை மேயர் மேரி பிரின்சி லதா, வேல்முருகன், ராஜன், மாநகர செயலாளர் ஆனந்த், பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர்களான மண்டல தலைவர் ஜவகர், ஷேக்மீரான், துரை மற்றும் சி.டி.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகர செயலாளர் ஆனந்த் சிறப்புரை ஆற்றி னார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொறுப்பாளர் மேயர் மகேஷ் கூறியதாவது:-

    ஒவ்வொரு வட்டத்திற்கும் 6 நிர்வாகிகள் நியமிக்கபட் டுள்ளனர். எனவே இந்த குழு மக்கள் மத்தியில் தீவி ரமாக பணியாற்றினால் கட்சி மேலும் வலுப்பெறும்.

    ஒவ்வொரு பகுதி வட்ட செயலாளரும் அவர்கள் வார்டுகளில் குடிநீர் நல்லி பழுது, தண்ணீர் பிரச்சினை போன்றவற்றை என்னிடம் தெரிவிக்கலாம். தற்போது மாற்று கட்சி கவுன்சிலர்கள் அழைத்து நான் சென்று பார்வையிடுகிறேன். இதனை தி.மு.க. வட்ட செயலாளர் கள் பயன்படுத்தினால், மக்களிடம் நற்பெயர் பெற்று கவுன்சிலராக வெற்றி பெற முடியும். கட்சி பணி ஆற்றாத யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், கலைஞர் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்வது உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×