என் மலர்
நீங்கள் தேடியது "நாகசைதன்யா"
- நடிகர் நாக சைதன்யா தற்போது ‘கஸ்டடி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- சமீபகாலமாகவே இவர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசு பரவி வருகிறது.
தென்இந்திய சினிமாவின் பிரபல நடிகரான நாகசைதன்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கஸ்டடி' திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாகவே நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.

நாகசைதன்யா - சோபிதா துலிபாலா
இவர்கள் இருவரும் அண்மையில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாகசைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்படட்டதாகவும் அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் ஒரு இடத்தில் இருவரும் நின்றிருந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தது. ஆனால் அதில் உண்மையில்லை என்று ரசிகர்கள் சிலர் சொல்லி வந்தனர்.
இந்நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் சுரேந்தர் மோகன் என்பவர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். சுரேந்தர் மோகன் என்பவர் லண்டனில் பிரபலமான ஓட்டல் ஒன்றில் சமையல் கலைஞராக இருக்கிறார். அவருடைய ஓட்டலுக்கு நாகசைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் உணவு சாப்பிட வந்திருக்கிறார்கள். அவர்களைக் கண்டதும் சுரேந்தர் மோகன், நாக சைதன்யாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நீக்கப்பட்ட புகைப்படம்
அப்படி எடுத்தபோது பின்னால் சோபிதா துலிபாலா அமர்ந்து இருப்பது பதிவிவாகியிருக்கிறது. அவர் முகத்தை மறைக்க முயன்றாலும் முடியவில்லை. இந்த புகைப்படத்தை சுரேந்தர் மோகன் பெருமிதத்துடன் தனது இணையப் பக்கத்தில் பதிவிட்டார். இதன் பிறகு நடந்ததுதான் சுவாரஸ்யம். நாகசைதன்யா தரப்பில் இருந்து இந்த புகைப்படத்தை நீக்கச்சொல்லியதன் பேரில், சுரேந்தர் மோகன் அதை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகை சமந்தா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
- இவர் தனது முன்னாள் கணவர் நாகசைதன்யா காதல் குறித்து விமர்சித்துள்ளாதக செய்தி வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். கணவருடன் சமந்தா ஐதராபாத்தில் குடியேறி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். திருமண முறிவுக்கான காரணத்தை இதுவரை இருவரும் வெளியிடவில்லை.

நாகசைதன்யா -சமந்தா
சமந்தா -நாகசைதன்யா இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். சமீபகாலமாகவே நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அண்மையில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாகசைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்படட்டதாகவும் அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

சோபிதா துலிபாலா -நாகசைதன்யா
இந்நிலையில், நடிகை சமந்தா, "யார் யாருடன் உறவில் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது" என நாகசைதன்யா -சோபிதா துலிபாலா உறவு குறித்து கூறியதாக தனியார் பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா 'தான் இவ்வாறு கூறவில்லை' என்று மறுத்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவிற்கு ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.
I never said this!! https://t.co/z3k2sTDqu7
— Samantha (@Samanthaprabhu2) April 4, 2023
- வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.
- இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

கஸ்டடி
'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

கஸ்டடி போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'Head up High' பாடல் வருகிற 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
Get ur dancing shoes ready!! It's time for the first single #HeadUpHigh from #Custody releasing on 10th April @ilaiyaraaja @thisisysr @chay_akkineni @SS_Screens @ramjowrites @lyricistkaruna @AlwaysJani #aVPhunt pic.twitter.com/AXxVtBsEen
— venkat prabhu (@vp_offl) April 7, 2023
- வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.
- இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

கஸ்டடி
'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

கஸ்டடி
இப்படத்தின் முதல் பாடலான 'Head up High' பாடல் வருகிற 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் கஸ்டடி படத்தின் புரோமோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Our director @vp_offl arrested by A.Shiva aka @chay_akkineni! But Why??
— Srinivasaa Silver Screen (@SS_Screens) April 8, 2023
Catch the interesting & fun-filled #Custody Promo
▶️ https://t.co/JPG3crbe7r
First single #HeadUpHigh releasing on April 10th @ 6:31PM?@realsarathkumar @thearvindswami @IamKrithiShetty @ilaiyaraaja…
- வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.
- இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.
'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

கஸ்டடி
இப்படத்தின் முதல் பாடலான 'Head up High' பாடல் கடந்த 10-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் கஸ்டடி படத்தின் முதல் பாடலான 'Head up High'லிரிக்கல் பாடல் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலக்கி வருகின்றனர்.
The Police Anthem inspiration injected into the audience ?#HeadUpHigh hits 4M+ Real time Views
— Srinivasaa Silver Screen (@SS_Screens) April 13, 2023
? @ilaiyaraaja x @thisisysr ?
▶️https://t.co/jLuxt41qsE
▶️https://t.co/hocfCAzV8c#Custody #CustodyOnMay12
?@arun_kaundinya @thisisysr @AsalKolaar
✍️ @ramjowrites… pic.twitter.com/sb0icqk5hz
- வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கஸ்டடி'.
- இப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

கஸ்டடி
'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது மற்றும் இப்படத்தின் முதல் பாடலான 'Head up High' பாடல் வெளியாகி வைரலானது.

கஸ்டடி
இந்நிலையில் கஸ்டடி படத்தின் இரண்டாம் பாடலான டைம்லெஸ் லவ் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா மற்றும் கபில் கபிலன் குரலில் மதன் கார்க்கி வரிகளில் வெளியான இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் மூலம் முதல் முறையாக இளையராஜாவுடன் மதன் கார்க்கி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ‘தண்டேல்’ என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார்.
- மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
'பிரேமம்' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. படத்தில் இவரது மலர் டீச்சர் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து தனுசுடன் மாரி-2 மற்றும் தியா, என்.ஜி.கே ஆகிய தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த சாய்பல்லவி இந்தி மொழியில் தயாராகி வரும் ராமாயணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாகசைதன்யாவுடன் 'தண்டேல்' என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார். இந்நிலையில் சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அர்ஜூனனின் மகன் அபிமன்யூவை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக அபிமன்யூவை பற்றி நிறைய படித்துள்ளேன். அவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
- கேட்காமலே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமாக வெளியிடுவது தவறு என்றும் கண்டித்தனர்.
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாவுக்கும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவுக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் நாகசைதன்யா சோபிதா துலிபாலா ஜாதகத்தை பரிசீலித்ததாகவும் பொருத்தம் சரியில்லை என்றும் இருவரும் 2027-ல் பிரிந்து விடுவார்கள் என்றும் அவர்களின் பிரிவுக்கு ஒரு பெண் காரணமாக இருப்பார் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த தகவல் வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடர் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. தெலுங்கு சினிமா சங்கங்கள் சார்பில் மகளிர் ஆணையத்தில் ஜோதிடர் மீது புகார் செய்யப்பட்டது. கேட்காமலே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமாக வெளியிடுவது தவறு என்றும் கண்டித்தனர்.
இதையடுத்து தெலுங்கு மகளிர் ஆணையம் ஜோதிடருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வருகிற 22-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர்.
- கடந்த வருடம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். கணவருடன் சமந்தா ஐதராபாத்தில் குடியேறி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். கடந்த வருடம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். திருமண முறிவுக்கான காரணத்தை இதுவரை இருவரும் வெளியிடவில்லை.

சமந்தா - நாகசைதன்யா
தற்போது இருவரும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யாவும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக தகவல் பரவியது. சோபிதாவை தனது வீட்டுக்கு நாகசைதன்யா அழைத்து சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு பட உலகினர் பேசி வந்தனர்.

சமந்தா - நாகசைதன்யா
இந்நிலையில் நடிகை சமந்தாவும் 2-வது திருமணத்துக்கு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தி நடிகர் ஒருவரை சமந்தா காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது. ஆனாலும் சமந்தா தரப்பில் இதனை மறுத்துள்ளனர்.