search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்சன்"

    • சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர் மலேசியா தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த பலரையும் போலீசார் அடுத்தடுத்து விசாரித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு சென்னை போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி வழக்கறிஞர் மோனிஷாவிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மொட்டை கிருஷ்ணனும் இயக்குநர் நெல்சனின் மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் என்பதால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    மொட்டை கிருஷ்ணனுடன் இயக்குநர் நெல்சன் மனைவி தொடர்ந்து செல்போனில் பேசிவந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி மொட்டை கிருஷ்ணன் குறித்து திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் அடையாறில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    • இயக்குநர் நெல்சன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
    • இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் நெல்சன். இவர் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் போன்ற படங்கள் வசூலை வாரிக் குவித்தன.

    இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டுள்ளார்.

    நிகழ்ச்சியின் ஓய்வு நேரத்தில் திருமாவளவன் வருகை குறித்து அறிந்து கொண்ட இயக்குநர் நெல்சன் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்துள்ளார்.

    இயக்குநர் நெல்சன் மற்றும் திருமாவளவன் சந்திப்பு குறித்த தகவலை விடுதை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இத்துடன் இருவர் சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

    ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வெளியான ஜெயிலர் படம் வசூலில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குநர் நெல்சன் தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், சிம்பு மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

    இசைவெளியீட்டு விழாவில் சிம்பு "கமல்ஹாசன் சார் தான் என்னோட ஸ்கிரீன் குரு, அவரோட தக் லைஃப் படத்துல் வேலை செய்றது ரொம்ப அதிர்ஷடமா நான் பாக்குறேன், நான் இந்தியன் 1 ஓட மிகப் பெரிய ரசிகன், இந்திய 2, இந்தியன் 3 அப்பறம் கேம் சேஞ்சர் படம் பன்ற ஷங்கர் சாருக்கு ஹாட்ஸ் ஆஃப்" என்று கூறினார்.

    பின் ரசிகர்களிடம் "மக்கள் எல்லாரும் என்னைய வெயிட் குறச்சிட்டாரு , டிரான்ஸ்ஃபார்ம் ஆயிட்டாரு எல்லாம் சொல்றாங்க ஆனா அதுக்கும் மேல இது ஆன்மிகம் சார்ந்த விஷயம், நம்ம கூட இருக்கறவங்க எல்லாரும் ஒரு நாள் நம்மல விட்டுட்டு போயிடுவாங்க, நம்ம முடி கூட கொஞ்ச நாளுல கொட்டிடும், ஆனா எப்பொழுதும் நம்ம கூட இருக்க ஒரே விஷயம் நம்ம உடம்புதான் அத நம்ம நல்லா பாத்துகணும்" என்று கூறினார்.

    பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு பேசியதாது, 'தக் லைப்' படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து, 'எஸ்.டி.ஆர்.48' படமும் தொடங்கும். உலகிலேயே அதிக கஷ்டப்படும் ஆள் யார்னா அது உண்மையை வெளிப்படையாக பேசுகிறவர்கள்தான்.

    நானும் அதில் ஒருவன். மக்களவை தேர்தல் சமயத்தில் நான் படப்பிடிப்பில் இருந்தேன். சூட்டிங் கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால், ஓட்டுப் போட வராதது எனக்கு வருத்தம்தான். பின் தயாரிப்பாளர் சங்கம் எனக்கு ரெட் கார்டெல்லாம் தரவில்லை, அது எனக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் ஒரு சிறிய பிரச்சனை அதை நாங்கள் இப்பொழுது சரி ஆக்கிவிட்டோம்', என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
    • 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற்றது.

    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற்றது.

    இவ்விழாவில் தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், நடிகர் சிம்பு மற்றும் பலர் பங்கேற்றனர்.

     

    'இந்தியன் 2' படத்தில், பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் என மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் படத்தின் பாடலான கம் பேக் இந்தியன் என்ற பாடலை அனிருத் லைவாக பாடினார்.

    அனிருத் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை பாராட்டி பேசினார் " ஷங்கர் சார் ஸ்டைல சொல்லனும்னா சிக்ஸ்க்கு அப்பறம் செவென் டா.... ரஹ்மான் சார்க்கு அப்பறம் எவன் டா" என்று கூறினார்.

    சிம்பு விழாவில் " சிம்பு லேட்டா வந்துடாரு அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க, ஆனா நான் மணி சாரோட தக் லைஃப் படத்தோட ஷூட்டிங்ல இருந்துதான் வரேன்" என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார்.
    • படத்திற்கு ”Bloody Beggar” என தலைப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளிவில் 600 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு ஃபிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.

    அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் தகவலை இன்று வெளியிட்டார். நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    படத்திற்கு "Bloody Beggar" என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் ரிவீலிங்க் வீடியோவை நகைச்சுவை பாணியில் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, கவின், சிவபாலன் ஆகியோர் நடித்து வெளியிட்டுள்ளனர். வீடியோ காட்சிகள் தற்பொழுடு வைரலாகி வருகிறது.

     

    கவின் தற்பொழுது நடித்து இருக்கும் ஸ்டார் படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார் கவின்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்துகொண்டார்.
    • இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாக வெளியாகியது.

    பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. சமீபத்தில், இவர் இயக்கிய படம் ஜெயிலர்.

    இதில், ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

    அதிரடி சண்டை படமாக தயாரான இப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது. இந்நிலையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாக வெளியாகியது.

    சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் லியோ படத்தை எடுத்திருந்தால் யாரை நடிக்க வைத்திருப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

    நான் லியோ படத்தை இயக்கி இருந்தால் விஜய்யுடன் ஷாருக்கான், மம்மூட்டி மற்றும் மகேஷ் பாபுவை நடிக்க வைத்திருப்பேன். மேலும், கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் ஆலியாபட்டை தேர்ந்தெடுத்திருப்பேன். இவ்வாறு கூறினார். பின் யாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிரது என்ற கேள்விக்கு மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க ஆசைபடுகிறேன் என்ரு பதிலளித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.


    'ஜெயிலர்' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.


    அதுமட்டுமல்லாமல், 'ஜெயிலர்' படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார். சமீபத்தில் இயக்குனர் நெல்சன் 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக செய்தி பரவி வந்தது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பாகத்தில் சிலை கடத்தல்காரர்களிடம் ரஜினி மோதும் காட்சிகளும் அவர்களை அழிக்கும் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளதாகவும் இதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் நெல்சன் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் சில நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் நயன்தாரா இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விடுதலை- 1’.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். சமீபத்தில் விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனை சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார்.


    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் 'விடுதலை' படத்தின் அனுபவம் குறித்து கூறியிருந்தார். அதில், 'விடுதலை- 1' இயக்க ரூ.4.5 கோடி தான் கொடுக்கப்பட்டது என்றும் ஆனால், படத்தை எடுத்து முடித்த பிறகு பட்ஜெட் ரூ.65 கோடியை தாண்டியதாகவும் கூறியிருந்தார். இந்த நேர்காணலில் வெற்றிமாறனுடன் இயக்குனர்கள் நெல்சன், கார்த்திக் சுப்பராஜ், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
    • இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    'ஜெயிலர்' திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹுக்கும்' பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோவை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
    • இப்படம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும்  ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



    இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து ஹிட்டடித்துள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து ஹிட்டடித்துள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி 50 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதனை ரசிகர்கள் திரையரங்குகளில் கேக் வெட்டி கொண்டாடினர்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சமூக வலைதளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.


    இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் 50-வது நாளை ரசிகர்கள் திரையரங்குகளில் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், படம் பார்க்க வந்தவர்களுக்கு குலுக்கல் முறையில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை ரஜினி ரசிகர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

    ×