என் மலர்
நீங்கள் தேடியது "அர்ஜூன் எரிகைசி"
- தமிழக வீரர்களாக குகேஷ் ஏழாவது இடத்திலும் பிரக்ஞானந்தா எட்டாம் இடத்திலும் உள்ளனர்.
- அர்ஜூன் மற்றும் அரவிந்த் இருவரும் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
சர்வதேச செஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக 3 இந்திய வீரர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி நான்காம் இடத்திலும், தமிழக வீரர்களாக குகேஷ் ஏழாவது இடத்திலும் பிரக்ஞானந்தா எட்டாம் இடத்திலும் உள்ளனர்.
பிரக்ஞானந்தா தனது மதிப்பீட்டை 10 புள்ளிகள் அதிகரித்து முதல் முறையாக உலகின் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
தற்போது முதல் 11 இடங்களில் 4 இந்தியர்களும், 22 இடங்களில் 5 இந்தியர்களும், 29 இடங்களில் 6 இந்தியர்களும், 37 இடங்களில் 7 இந்தியர்களும், 46 இடங்களில் 8 பேரும் உள்ளனர்.
அர்ஜூன் மற்றும் அரவிந்த் இருவரும் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
- அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங் லியை தோற்கடித்தார்
- இறுதி போட்டியின் தொடக்க சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் கார்ல்சென் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன் லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங் லியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு அரை இறுதியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல் செனை (நார்வே) ஜெர்மனியின் வின்சென்ட் நெய்மரை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் இன்று கார்ல்சென்-அர்ஜூன் எரிகைசி மோதினர்.
இறுதி போட்டியின் தொடக்க சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் கார்ல்சென் வெற்றி பெற்றார். 3-வது ஆட்டம் டிரா ஆனது. இதன் மூலம் கார்ல்சென் 2.5-0.5 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளார்.
இறுதி போட்டியை டை பிரேக்கருக்கு கொண்டு செல்ல இந்திய வீரர் அர்ஜூன் இறுதி போட்டியின் 2-வது சுற்றில் ( 4 ஆட்டம்) வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.