search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபா ஆதித்தனார் பிறந்தநாள்"

    • சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சென்னை:

    'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    சிலை முன்பு அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

     

    சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

     

    தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம்கதிர், பாரோஸ் ஓட்டல், மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.

    சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சி.பா.ஆதித்தனார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    அவர்களுடன் எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகரராஜா, வேளச்சேரி எம்.எல்.ஏ. அசன் மவுலானா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர் எஸ்.வி.சேகர், தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன், ஓய்வு பெற்ற போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் மோகன்ராஜ்,

    தி.மு.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் தமிழ்மணி, அன்பு, பாபு, சத்தியா, புருஷோத், பரத், உமரி சங்கர், சதீஷ்,

    அ.தி.மு.க. சார்பில் சிம்லா முத்து சோழன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நிர்வாகிகள் கண்ணன், தங்கமுத்து, பாஸ்கர், வில்லியம்ஸ், சுபாஷ், ராஜலிங்கம், சீனிவாசன், சாமுவேல், சுடலைமணி, ராஜன், ராஜேஷ், சங்கர பாண்டியன், தாஸ், சண்முகசுந்தரம், ராபர்ட், சுப்பிரமணி, ராஜ்குமார், சதீஷ், பாக்யராஜ், பாலமுருகன், நடராஜன்.

    ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் வந்திய தேவன், மாவட்ட செயலா ளர்கள் ஜீவன், கழக குமார், ராஜேந்திரன், சுப்பிரமணி, மகேந்திரன், நிர்வாகிகள் தென்றல் நிசார், நாசர், பாஸ்கர், இளவழகன், துரை குணசேகர், கவிஞர் மணி வேந்தன், கோவில்பட்டி ராமச்சந்திரன், அண்ணா துரை, சேகரன், ஜானகிராமன், தனசேகர், தியாகராஜன், சகாயஅரசி,

    காங்கிரஸ் நிர்வாகி அகமது அலி உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உண்மையின் பக்கம் நின்று, மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளைப் பாமர மக்களிடமும் கொண்டு செல்லும் இதழியல் பணிக்கு வேர் சி.பா.ஆதித்தனார்.
    • உலகமெங்கும் பரவலாக உள்ள கோடான கோடி தமிழ் மக்களுக்கு பத்திரிகை படிப்பதற்கு ஆர்வத்தை ஊட்டியவரான சி.பா.ஆதித்தனாரை உலகம் இருக்கின்ற வரையில் யாரும் மறக்க இயலாது.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் இதழியலின் முன்னோடியான சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று. உண்மையின் பக்கம் நின்று, மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளைப் பாமர மக்களிடமும் கொண்டு செல்லும் இதழியல் பணிக்கு வேர் அவர். பொய்கள் சூழ் உலகில் இதழியலுக்கு அறமே அச்சாணி.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழுக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றி, தொலைநோக்கு சிந்தனைகளால் அச்சு ஊடக உலகில் பல்வேறு வளர்ச்சிகளை ஏற்படுத்திய தமிழ் இதழியல் முன்னோடியும் தினத்தந்தி நிறுவனருமான 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளில் அவரின் புகழை போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.வி. ஹண்டே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மதிப்பிற்குரிய சி.பா.ஆதித்தனாரும், நானும் தமிழ்நாடு மேலவையில் 1964-67ல் ஒன்றாக அமர்ந்திருந்தோம்.

    1965-ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற லட்சியத்திற்காக போராடியவர் சி.பா.ஆதித்தனார். இதற்காக அவரை எம்.பக்தவச்சலத்தின் ஆட்சியில் 9.10.1965 அன்று கைது செய்தார். இந்த தவறான, மன்னிக்க முடியாத செயலால் தான் 1967-ல் நடைபெற்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

    உலகமெங்கும் பரவலாக உள்ள கோடான கோடி தமிழ் மக்களுக்கு பத்திரிகை படிப்பதற்கு ஆர்வத்தை ஊட்டியவரான சி.பா.ஆதித்தனாரை உலகம் இருக்கின்ற வரையில் யாரும் மறக்க இயலாது.

    சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை கொண்டாடுவது நாம் தமிழை போற்றுவதற்கு சமமாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×