search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமுத்திரகனி"

    • சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகனாகவும் மற்றும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
    • தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

    சின்னதிரையில் இயக்குனராக அறிமுகமாகிய சமுத்திரக்கனி அதற்கடுத்து நாடோடிகள் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில், அப்பா, நாடோடிகள் 2 என பல படங்களை இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகனாகவும் மற்றும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. தற்பொழுது தெலுங்கு திரைத்துறையில் பிரபல நட்சத்திரங்களுக்கு வில்லன் கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் சமுத்திரகனியே நடித்து வருகிறார். அண்மையில் வெளியான இந்தியன் 2 படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    இந்நிலையில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது. இப்படத்தை தன்ராஜ் கொரனானி இயக்கியுள்ளார்.

    படத்தின் முதல் பாடலான குல சாமி போல என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ளார். படத்திற்கு அருண் சிலுவேரு இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
    • இதுவரை தங்கலான் திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வசூலை பெற்று வருகிறது. இதுவரை திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் சமுத்திரகனி படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் "தங்கலான் அசுர உழைப்பு தம்பி பா ரஞ்சித்????? சீயான் விக்ரம் தீபிடிக்குது சார் ?குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️" என பதிவிட்டுள்ளார்.

    படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக சமீபத்தில் விக்ரம் தெரிவித்து இருந்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன்.
    • படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற 9-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

    தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன். படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.

    சிம்ரன், பிரியா ஆனந்த் ,மனோபாலா சமுத்திரகனி, ஊர்வசி யோகி பாபு ,வனிதா விஜயகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற 9-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

    விழாவில் தியாகராஜன் ,பிரசாந்த், சமுத்திரகனி, சிம்ரன், வனிதா விஜயகுமார், பெசன்ட் ரவி, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் சமுத்திரகனி பேசியதாவது:-

    நான் தியாகராஜனின் தீவிர ரசிகன். நான் தியேட்டரில் ஆபரேட்டராக பணிபுரிந்து கொண்டிருந்த போதே மலையூர் மம்பட்டியான் படத்தை போட்டு பார்த்து ரசித்திருக்கிறேன்.

    அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு பயம் உண்டு. திடீரென நண்பர் ஒருவர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தியாகராஜன் உங்களிடம் பேச வேண்டுமாம் என்று கூறினார்.

    ஏன் எதற்கு என்று கேட்பதற்குள் தியாகராஜனிடம் போனை கொடுத்து விட்டார். அவர் எடுத்ததும் நான் தியாகராஜன் பேசுகிறேன் சார் என்று கூறினார். அதைக் கேட்டதும் நான் உடனடியாக நேரில் வரட்டுமா என்றேன்.

    பின்னர் விஷயத்தை கூறி படத்தில் நடிப்பதற்கு அழைத்தார். உடனடியாக சம்மதித்து படத்தில் நடித்தேன்.

    அன்று முதல் பிரசாந்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்து வருகிறது. இருவரும் ஐயா என்று தான் அழைத்துக் கொள்வோம்.

    படப்பிடிப்பில் ஒரு நாள் வனிதா விஜயகுமார் கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை சரமாரியாக திட்டினார். தாங்க முடியாமல் நான் தியாகராஜனிடம் வனிதா ஏன் என்னை இப்படி திட்டுகிறார்?என்று கூறினேன்.

    அவர் சிரித்துக் கொண்டே பதில் அளிக்கையில், நான் காட்சிக்காக கொஞ்சம் அவரை திட்டு என்றேன். அவர் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளால் எப்படியெல்லாம் பேச வேண்டுமோ அப்படி எல்லாம் பேசி முடித்து விட்டார் என்று கூறினார்.

    இவ்வாறு சமுத்திரக்கனி கூறியதும் தியாகராஜன் உள்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

    இதையடுத்து மேடையில் அமர்ந்திருந்த வனிதா விஜயகுமாரிடம் சமுத்திரக்கனியை திட்டும்போது யாரை மனதில் வைத்துக் கொண்டு திட்டினீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் அளித்த பதிலில், என் அப்பாவை மனதில் நினைத்துக் கொண்டேன். உடனடியாக என் மனதில் தோன்றியவற்றையெல்லாம் திட்டி தீர்த்து விட்டேன். என் தந்தையும் அந்த அளவுக்கு நடிப்போடு ஒன்றிப் போய் விடுவார். அவர்தான் என் முன்மாதிரி என்று கூறினார்.

    இந்த சம்பவத்தால் அந்தகன் பட விழா அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்தார்.
    • அதற்கு பின் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் சிவராஜ்குமார். கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அதற்கு பின் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    இந்நிலையில் சிவராஜ்குமார் தற்பொழுது தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்திற்கு ஜாவா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரவி அரசு இயக்க சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளனர். இதற்கு முன், நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடித்த 'ஈட்டி' மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ஐங்கரன்'ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு மூன்றாவதாக தமிழில் இந்தப் படத்தை இயக்குகிறார்.

    சிவராஜ்குமார் காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் சமுத்திரகனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது என தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்கின்றனர்.
    • அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் "யோலோ" திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று இனிதே நடைபெற்றது.

    வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக, இப்படம் உருவாகிறது.

    இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இப்படத்தின் பூஜையில் இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

    யோலோ என்றால் வாழ்க்கை ஒரு முறை தான் அதைச் சரியாக வாழுங்கள் என்பது தான். இதைப் படம் வந்தவுடன் புரிந்து கொள்வீர்கள் நன்றி.

     

    நாயகன் தேவ் பேசியதாவது...

    எங்களை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. இது தமிழில் எனக்கு மூன்றாவது படம், இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இயக்குநர் கதை சொன்ன போது, எனக்குப் பிடித்திருந்தது ஆனால் அவர் தயங்கினார், ஆனால் இரண்டு நாள் கழித்து நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்றார். நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையைக் கண்டிப்பாகக் காப்பாற்றுவேன், படம் பற்றி அடுத்த விழாவில் இன்னும் நிறையப் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி.

    இயக்குநர் அமீர் பேசியதாவது...

    ஒரு துவக்க விழா, இங்குள்ள பலருக்கு இது வழக்கமான விழா. ஆனால் சாமிற்கும் அவரது குழுவிற்கும் அவர்கள் வாழ்க்கையைத் துவக்கும் விழா. எனக்கு சேதுவைத் துவங்கிய நாள் தான் ஞாபகம் வருகிறது. 93ல் பாலாவின் அகிலன் பூஜை போட்ட அன்றே நின்று போய்விட்டது. தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களிடமும் அந்தக்கதை போய் வந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பின் அது சேதுவாக மாறியது. இங்கு தான் பூஜை போட்டோம், பூஜை அன்று தொழிலாளர்கள் பிரச்சனையில் நின்று போனது. 7 வருடம் கழித்து தான் முடிந்தது. அப்புறமும் படம் வரவில்லை. என்றாவது ஒரு நாள் படம் வரும் என நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். பாலா தன் ஒட்டுமொத்த உழைப்பையும் தந்து, ஒரு தலைமுறையினருக்கு வாழ்வை வாய்ப்பை தரும் படைப்பை உருவாக்கி வைத்திருந்தார். எங்கள் கிளையைப் பரப்ப சாம் வந்திருக்கிறான் என நம்புகிறேன். இந்தப்படம் பெரிய வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன் நன்றி.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகிய புதிய படம் "ஹிட் லிஸ்ட்".
    • இப்படம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி வெளியாகியது.

    இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகிய புதிய படம் "ஹிட் லிஸ்ட்". கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்ய கதிர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே பாசிட்டிவ் ரெஸ்பான்சை பெற்றது. அறிமுக நாயகனான விஜய் கனிஷ்காவின் நடிப்பு பெருமளவு பாராட்டுப்பெற்றது.

    ஒரு சைக்கோ கொலைக்காரன் வித்தியாசமான முறையில் கதாநாயகனின் குடும்பத்தை கொலை செய்கிறான். அதை எப்படி கதாநாயகன் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் ஒன் லைன்.

    படம் தற்பொழுது ஓடிடியில் வெளியாகவுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் அஹா தமிழ் வாங்கியுள்ளது. இந்த ஓடிடி தளத்தில் நாளை திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் பார்க்க தவர விட்ட ரசிகர்கள் ஓடிடியில் கண்டு களியுங்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரசாந்த் , அந்தகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரசாந்த் , அந்தகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம் சில ஆண்டுகளாகவே எந்த அப்டேட்டுகளும் இல்லாமல் இருந்தது. வெறும் பண்டிகை நாட்களுக்கான வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் மட்டும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். பலப்பேர் இப்படம் வெளியாகாது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இப்படம் கைவிடப்பட்டது எனவும் செய்திகள் பரவி வந்தது.

    இதெற்கெல்லாம் முற்றுப் புள்ளி  வைக்கும் வகையில் படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர். இப்படம் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான `அந்தாதூன்' படத்தின் ரீமேக் ஆகும்.

    மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    நடிகர் பிரசாந்த் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா.
    • ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா. ஏற்கனவே சமுத்திரகனி தம்பி ராமையா, ஆகியோர் இணைந்து சாட்டை, அப்பா, வினோதய சித்தம் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ராஜாகிளி என்ற புதிய படத்தில் இணிந்து நடித்துள்ளனர்.

    'மாநாடு', 'கங்காரு', 'மிகமிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், 'கும்கி' தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு கதை , வசனம், திரைக்கதை, பாடல்வரிகள் மற்றும் இசையமைப்பாளராக தம்பி ராமையா பணியாற்றியுள்ளார். மேலும் படத்திற்கு கேதர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று (ஜூன் 19) தம்பி ராமையாவின் பிறந்தநாளை முன்னிட்டு பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த மே 31 ஆம் தேதி துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் , உன்னி முகுந்தன் , மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கருடன்.
    • படம் வெளியாகிய நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 27 கோடி ரூபாயை கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த மே 31 ஆம் தேதி துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் , உன்னி முகுந்தன் , மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கருடன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றார் சூரி. அதைத் தொடர்ந்து கதாநாயகனாக கருடன் திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகிய நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 27 கோடி ரூபாயை கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படம் கிராமப்புற உள்ள மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தின் வெற்றியை முன்னிட்டு இன்று படத்தின் இசையமைப்பாளருக்கும், ஒளிப்பதிவாலருக்கும் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். தற்பொழுது மக்களுக்கு நன்றி தெரிவித்து சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சூரி.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார்.
    • வெற்றிமாறனின் தயாரிப்பிலும் கதையிலும் உருவாகியுள்ள கருடன் படம் கடந்த மே 31ஆம் தேதி வெளியானது.

    நடிகர் சூரி, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

    அந்த படத்தில் இருந்து நடிகர் சூரி, பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பெயர் பெற்றார். ஆனால் காமெடி கதாப்பாத்திரத்தில் மட்டும் நடித்துக் கொண்டு இருந்த சூரி கதாநாயகனாக ஆக நேரம் வந்தது.

    சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

    அந்த வகையில் விடுதலை 2, கொட்டுக்காளி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூரி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சூரியுடன் இணைந்து சசிகுமார் , சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறனின் தயாரிப்பிலும் கதையிலும் உருவாகியுள்ள இந்த படம் கடந்த மே 31ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. நகர்புறங்களை விட கிராம் புறத்தில் உள்ள ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். நாளுக்கு நாள் படத்தின் திரையரங்குகளில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    மேலும் இந்த படத்தில் நடிகர் சூரி முதன்முறையாக ஆக்சன் ஹீரோவாக களமிறங்கி பல்வேறு தரப்பினரடையே பாராட்டுகளை பெற்று வருகிறார்.

    இந்த படம் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவையும், அதிக வசூலையும் பெற்று வருகிறது. தற்போது கிடைத்த தகவலின் படி கருடன் திரைப்படமானது உலகம் முழுவதும் 26 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டதட்ட 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து கருடன் திரைப்படமும் வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் சூரி அடுத்து நடித்து வெளிவர இருக்கும் கொட்டுகாளி மற்றும் விடுதலை2 திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கருடன்
    • சமுத்திரக்கனி, மைம் கோபி, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிபிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கருடன், இப்படம் நாளை {மே30} வெளியாகவுள்ளது.

    சமுத்திரக்கனி, மைம் கோபி, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிபிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெற்றி மாறன் கதை எழுதியுள்ளார். படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இந்நிலையில் படத்தின் மேகிங் வீடியோவை தற்பொழுது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    இதில் படப்பிடிப்பு பணிகள், சூரி-யின் ஆக்ஷன் பயிற்சிகள், சண்டை காட்சிகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என ஒரு முன்னோட்டமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. விடுதலை திரைப்படம் போல் சூரிக்கு அடுத்த வெற்றி தரும் திரைப்படமாக கருடன்  அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • . இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூரி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சூரி, சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூரி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றார் சூரி. அதைத் தொடர்ந்து வெளியாகும் கருடன் திரைப்படமும் மிகப் பெரிய வெற்றி பெரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

    இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதி இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படமானது வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது படத்தின் முதல் பாடலான `ஒத்தபட வெறியாட்டம்' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சூரி மிகவும் கோவத்துடனும், வெறியுடனும் காணப்படுகிறார். சூரி எப்பேற்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×