search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பவுன்"

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • 2 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (45). இவர் ஒரு மில்லில் வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாதே ஸ்வரன் தனது மனைவி யுடன் கோபிசெட்டி பாளை யத்திற்கு ஒரு விசேஷத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

    அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்க ப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போத பீரோ திறந்து அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகையும் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மாதேஸ்வ ரன் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சிங்காரவேல் (வயது 37). இவர் ஆட்டோ ஓட்டிந்தபோதுசாலையில் செயின் கிடப்பதை பார்த்தார்.சுமார் 2 பவுன் அளவிலான தங்க செயின் என்பதை உறுதி செய்தார்.
    • தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதியிடம் ஒப்படைத்தார்.

    கள்ளக்குறிச்சி, மார்ச்.14-

    தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சிங்காரவேல் (வயது 37). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று கொட்டையூர் கிராமத்தில் இருந்து ஆட்டோவில் உளுந்து விதை ஏற்றிக்கொண்டு தியாகதுருகத்தில் உள்ள உதவி வேளாண்மை அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்து தியாகதுருகம் நோக்கி திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே வந்த போது சாலையில் செயின் கிடப்பதை பார்த்தார். உடனே ஆட்டோவை நிறுத்திவிட்டு கீழே இறங்கி செயினை எடுத்து பார்த்தபோது சுமார் 2 பவுன் அளவிலான தங்க செயின் என்பதை உறுதிசெய்தார்.

    மேலும் அக்கம், பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்து பார்த்ததில் செயின் யாருடையது என தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் சிங்காரவேல் செயினை தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதியிடம் ஒப்படைத்தார். செயினை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சிங்காரவேலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெகுவாக பாராட்டி சன்மானம் வழங்கினர். அப்போது தனிப்பிரிவு போலீசார் ஆறுமுகம் உடன் இருந்தார். மேலும் இந்த செயின் யாருடையது என்பது குறித்து தியாகதுருகம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தக்கலை போலீசில் புகார்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள மிருந்தவிளை பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி ஐடா (வயது 48).

    இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜ், இறந்து விட்டார். நேற்று ஐடா, தனது மகனுடன் வீட்டில் இருந்தார்.

    இரவில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, யாரோ மர்ம நபர் பின்பக்க கதவு வழியாக வீட்டுக்குள்ளே புகுந்து உள்ளார். அவர் ஐடாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐடா கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர், 2பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஒடிவிட்டான்.

    இதுகுறித்து தக்கலை போலீசில், ஐடா புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • பயணிகள் எடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
    • ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 5 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய த்துக்கு வந்தது.

    இதைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் ரெயிலில் இருந்து இறங்கி சென்றனர். அதன்பிறகு ரெயில் புறப்பட்டு கன்னியா குமரி சென்றது.

    இந்த நிலையில் பயணிகள் இறங்கி சென்ற முதலாவது பிளாட்பாரத்தில் 2 பவுன் தங்க நகை கிடந்தது. இதைப் பார்த்த சக பயணிகள் உடனே நகையை மீட்டு அக்கம் பக்கத்தில் உள்ள வர்களிடம் விசாரித்தனர். ஆனால் நகைக்கு யாரும் உரியை கோர வில்லை.

    இதனையடுத்து நகையை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    நகையை தவற விட்ட வர்கள் நகையின் அடையா ளங்களை தெரிவித்து பெற்றுச் செல்லுமாறு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    ×