என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்ஜே சூர்யா"
- இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.
- அனைத்து நன்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பலகோடி நன்றிகள்.
மே 1 தினமான இன்று உழைப்பாளர் தினத்துக்கும், நடிகர் அஜித் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மே 1 உழைப்பாளர் தின வாழ்த்துகள் மற்றும் இந்த உழைப்புக்கு வாழ்க்கை கொடுத்த சிறந்த உழைப்பாளி அஜித்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் ஆண்டு சிறப்பாக அமையட்டும்.
வாலி திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. அதற்காக, அப்பா, அம்மா, அஜித், என் அன்பும் ஆருயிருமான எனது அனைத்து நன்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பலகோடி நன்றிகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ராயன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
- இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்.
தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது திரைப்படம் ராயன். இந்த படத்தை அவரே இயக்கி, நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூரியா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் போஸ்டர் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த படம் தொடர்பாக புதிய அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இந்த படத்தின் முதல் பாடல் நாளை (மே 9) வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.

ராயன் படத்தின் முதல் பாடல் "அடங்காத அசுரன்" நாளை வெளியாக இருக்கும் நிலையில், இந்த பாடல் குறித்த புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இதை வெளியிட்ட எஸ்.ஜே. சூர்யா, "ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் அடங்காத அசுரன் நிச்சயம் பெப்பியான பாடலாக இருக்கும். தனுஷ் - ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் முதல் பாடல் தீயாக இருக்கும், நாளை சந்திக்கிறேன்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டன.
- ராகவா லாரன்சின் இந்த சேவையை பாராட்டும் பலரும் அவரது அறக்கட்டளை இணைந்து வருகின்றனர்.
நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் 'மாற்றம்' என்ற அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவரது இந்த பணியில் KPY பாலாவும் இணைந்துள்ளார். இருவரும் சேர்ந்து ஏழ்மை நிலையில் வாடும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
சமீபத்தில் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டன. ராகவா லாரன்சின் இந்த சேவையை பாராட்டும் பலரும் அவரது அறக்கட்டளையில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா மாற்றத்தில் இணைந்துள்ளார். இதுதொடர்பாக ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கூறியுள்ளதாவது:-
எனது சொந்தப் பணத்தில் மாற்றம் அறக்கட்டளை மூலம் 10 டிராக்டர்களை விவசாயிகளுக்கு வழங்கியது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இன்று (நேற்று) எஸ்.ஜே.சூர்யா அண்ணன் தன் சொந்தப் பணத்தில் இன்னொரு டிராக்டரைச் சேர்த்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்ரிக்கு 11வது டிராக்டரைக் கொடுத்தோம். அவருடைய ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எஸ்.ஜே.சூர்யா மற்றும் அவரது குடும்பத்திற்காக நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். எனக்கு எப்போதும் போல் உங்கள் அன்பும் ஆசியும் தேவை என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் கடந்த வாரம் துவங்கியது.
- இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது.
கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் கடந்த வாரம் துவங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
சர்தார் 2 திரைப்படத்தில் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல் ஐ சி (லவ் இன்ஷூரன்ஸ் கார்பரேஷன்) படத்தை இயக்கியுள்ளார்விக்னேஷ் சிவன்.
- அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஃபீல் குட் மற்றும் காமெடி படங்களை எடுப்பதில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். நானும் ரவுடி பட வெற்றிக்குப் பிறகு இவரின் புகழ் உச்சத்திற்கு சென்றது.
பின், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். 2022ம் ஆண்டு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார். இப்படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து இருந்தனர்.
இந்நிலையில் அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கி நடித்து மக்கள் மனதை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல் ஐ சி (லவ் இன்ஷூரன்ஸ் கார்பரேஷன்) படத்தை இயக்கியுள்ளார்.
கிருத்தி செட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
படத்தை குறித்து புதிய அப்டேட் வந்துள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூலை 25 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி 'நானும் ரவுடி' பட வெற்றிக்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்ற விக்னேஷ் சிவன், 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இதையடுத்து, தற்போது எல் ஐ கே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடித்து உள்ளனர்.
எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை இன்று அதிகாலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Happy Birthday @pradeeponelife? #LoveInsuranceKompany ♥️
— Seven Screen Studio (@7screenstudio) July 24, 2024
@VigneshShivN @IamKrithiShetty@iam_SJSuryah @anirudhofficial@iYogiBabu @Gourayy @sathyaDP @PradeepERagav@PraveenRaja_Off @Rowdy_Pictures @proyuvraaj pic.twitter.com/je1mDeFXQl
- படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
- படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
'போடா போடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி 'நானும் ரவுடி' பட வெற்றிக்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்றவர் விக்னேஷ் சிவன். இதைத் தொடர்ந்து அவர் 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களை இயக்கினார்.
இவர், தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்து உள்ளனர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், படக்குழு சார்பில் டைட்டில் லுக் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து எல்ஐகே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
- மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார் சுராஜ் வெஞ்சரமூடு.
- முகமத் முஸ்தஃபா இயக்கத்தில் `முரா' மலையாள திரைப்படம் உருவாகி கடந்த 8 ஆம் தேதி வெளியானது .
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் தற்பொழுது சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இதுவே இவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும்.
இந்நிலையில் சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாள இயக்குனரான முகமத் முஸ்தஃபா இயக்கத்தில் `முரா' மலையாள திரைப்படம் உருவாகி கடந்த 8 ஆம் தேதி வெளியானது .
இப்படம் ஒரு கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஹ்ரிது ஹரூன் , மாலா பார்வதி, கனி கஸ்தூரி, கண்ணன் நாயர், ஜோபின் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரியா ஷிபுவின் HR பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் படக்குழுவை வாழ்த்தி நடிகர் எஸ்.ஜே சூர்யா அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " இது மாதிரியான ஒரு ஆக்ஷன் திரைப்படத்திற்கு மக்கள் எமோஷனலாக ஃபீல் செய்வதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. படத்தை குறித்து வரும் பல நல்ல விமர்சனங்களை பற்றி கேட்டேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், இயக்குனர் முஸ்தஃபா மற்றும் நடித்த இளம் நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
இப்படத்தின் இயக்குனரான முஸ்தஃபா இதற்கு முன் அன்னா பென் நடிப்பில் வெளியான தேசிய விருதைப்பெற்ற கப்பேலா திரைப்படத்தை இயக்கியவராவார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எஸ் ஜே சூர்யா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார்.
- ஷங்கர் தற்பொழுது இயக்கியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
எஸ் ஜே சூர்யா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார். இவர் தற்பொழுது வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். கடந்த மாதம் நானி நடிப்பில் வெளியான சரிபோதா சனிவாரம் திரைப்படத்தில் தயால் என்ற சைக்கோ காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார்.
ஷங்கர் தற்பொழுது இயக்கியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழகத்தில் இன்று நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினர். இப்பட்டத்தினை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பட்டத்தை வழங்கினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.
- பொங்கலை முன்னிட்டு இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கலை முன்னிட்டு இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. அதனால் தற்போது இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் எஸ் ஜே சூர்யா படத்தை குறித்த சுவாரசிய தகவலை கூறினார். அதில் அவர் " இத்திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். படன் எடுத்த செலவு மட்டுமே 400- 500 கோடி ரூபாய் இருக்கும். அது இல்லாமல் அப்பணத்தில் வட்டி இருக்கிறது. அதையெல்லாம் கணக்கு போட்டால் எங்கேயோ சென்றுவிடும். படத்தில் ஜரகண்டி என்ற பாடல் படத்தில் இருக்கிறது. நேற்று தான் அந்த பாடலை நான் திரையில் கண்டேன். அந்த ஒரு பாடலின் விஷ்வல் போது மக்கள் கொடுக்கும் டிக்கெட் காசு அதற்கு ஈடாகிவிடும். அப்படி ஒரு பிரம்மாண்டம், அந்த பாடலுக்காகவே இன்னொரு முறை நீங்கள் பார்ப்பீர்கள். பிரபு தேவாவின் கோரியோ. ராம் சரணின் நடனம். கியார அத்வானியின் அழகு என அனைத்திலும் அப்பாடல் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இது தவிர்த்து படம் முழுவதும் போன்ஸ் தான் " என்று மிகவும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
- 'மாநாடு' திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
'மாநாடு' திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா எக்ஸ் தளத்தில் கூறி இருந்தார்.

இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில், 2021-ம் ஆண்டு நடிகர் சிம்பு, படத்திற்காக டப்பிங் பணிகளில் ஈடுபட்டது தொடர்பாக வந்தான்... சுட்டான்.. செத்தான்.. REPEATU என்ற தலைப்பில் வெளியிட்ட வீடியோவை Tag செய்து மீண்டும் மாநாடு விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி எக்ஸ் தளத்தில், மகிழ்ச்சியான செய்தி... சிம்புவின் பிறந்த நாளைக் கொண்டாட மீண்டும் வருகிறது 'மாநாடு' என்றும் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகுவதாக கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே, ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.