search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மதிவேந்தன்"

    • காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன்.
    • வனத்தையும் பாதுகாக்க வேண்டும். வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். மக்களும் முக்கியம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் வனத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வனத்துறையில் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. யானைகளை கண்காணிக்க, பாதுகாக்க வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பலர் இருக்கிறார்கள். இதற்காக கூடுதல் நிதியும் முதல்-அமைச்சர் ஒதுக்கி இருக்கிறார்.

    இதற்காக தனியாக குழு அமைக்க முடியாது. காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். அரசாணை விரைவில் வெளியிடப்படும். அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

    மாஞ்சோலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆகையால் அதைப் பற்றி பேச முடியாது. வனத்துறை சார்பில் நீதிமன்றத்தில் நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    மணிமுத்தாறு பகுதியில் அமைய இருந்த பல்லுயிர் பூங்கா நெல்லை மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் பேசி இது தொடர்பாக பதில் அளிக்கிறேன். இடம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருக்கலாம். அதனால் மாற்றப்பட்டு இருக்கலாம்.

    மாஞ்சோலை சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசீலனை செய்து வருகிறோம்.

    வனத்தையும் பாதுகாக்க வேண்டும். வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். மக்களும் முக்கியம். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    வனப்பகுதியில் குற்றங்களை குறைக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டத்தை பிரித்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் தனி மாவட்ட வன அலுவலர் நியமிக்கும் பணி பரிசீலனையில் உள்ளது. விரைவில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யானைகள் உயிரிழப்பை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது உயிரை பாதுகாக்கும் வகையில் 7 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக - கேரளா எல்லையான வாளையாரில் யானைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் மதிவேந்தன் இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * யானைகள் உயிரிழப்பை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    * யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது உயிரை பாதுகாக்கும் வகையில் 7 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    * யானைகளை காக்க உலகிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட திட்டம் என்று அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்து உள்ளார்.
    • அமைச்சரின் உடல் நிலையை டாக்டர்கள் காண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கோவை:

    தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன் (வயது 40). இவர் குடல் இறக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று கோவைக்கு வந்த அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்து உள்ளார். அவரது உடல் நிலையை டாக்டர்கள் காண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    அமைச்சர் மதிவேந்தன் ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் உள்ள அறை எண் 103-ல் தங்கி உள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனை முடிவில் குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுமா அல்லது சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்படுமா என்பது தெரிய வரும்.

    • கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் புனரமைக்கப்பட்ட உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    • முதல் முறையாக தமிழக அரசு முன்வந்து பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்த உள்ளது.

    கோவை

    கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டலில் புனரமைக்க ப்பட்ட உணவகத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் புனரமைக்கப்பட்ட உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சுற்றுலா துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஓட்டல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் புதுபிக்கப்பட்டு வருகிறது.

    முதல் கட்டமாக சென்னை தீவுத்திடல் தமிழ்நாடு ஓட்டல் உணவகம், கோவை, கன்னியாகுமரி, நெல்லை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள உணவகங்கள் புதுபிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தமிழ்நாடு ஓட்டல் உணவகங்களில் புதிய உணவு வகைகளையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த காலகட்டத்தில் தனியார் விடுதிகளுடன் போட்டியிடும் வகையில், அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல்கள் புதுபிக்கப்படுவதால் அதிக வருவாயை ஈர்க்க முடியும்.

    தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் முதல் முறையாக சுற்றுலா தளம் மேம்பாட்டு திட்டம் அறிமுகபடுத்தியுள்ளோம்,

    இதன் முலம் 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து, அங்கு பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். குறிப்பாக கொள்ளிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி, பூண்டி உள்ளிட்ட ஏரிகள், பூம்புகார் ஆகியவற்றையும் புதுபிக்க உள்ளோம்.

    மேலும் இதுவரை தனியார் சார்பில் பலூன் திருவிழா நடத்தப்பட்டது. முதல் முறையாக தமிழக அரசு முன்வந்து பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்த உள்ளது. அதில் மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை இன்று ஆய்வு செய்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×