search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதீப் கிஷன்"

    • லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகம் ஆகப்போகிறார்
    • ஜேசன் சஞ்சய் இயக்கும் இப்படத்திற்கு யார் கதாநாயகனாக நடிக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.

    பிரபல நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். தற்போது GOAT படத்தில் நடித்து மக்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் படிப்பை முடித்து உள்ளார். சினிமா தொடர்பான படிப்புகளும் அவர் படித்து உள்ளார். சினிமா இயக்குவதில் ஆர்வமாக உள்ளார்.

    இதை யொட்டி 'லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகம் ஆகப்போகிறார் என செய்தி சில மாதங்களுக்கு முன் லைகா நிறுவனம் அறிவித்து இருந்தது.

    லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து உள்ளது. மேலும் லைகா தயாரிப்பில் கத்தி படத்தில் விஜய் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் இப்படத்திற்கு யார் கதாநாயகனாக நடிக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. இவர் நடிக்க போகிறார் , அவர் நடிக்க போகிறார் என் வதந்திகள் பரவி வந்த நிலையில் இப்பொழுது அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

     

    ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் சுதீப் கிஷன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சுதீப் கிஷன் சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்திருக்கும் படத்திற்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது.
    • இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்திருக்கும் படத்திற்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தாயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மேலும் கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.




     


    படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் தற்பொழுது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் காளிதாஸ் ஜெயராம், தனுஷ், சுதீப் கிஷன் மற்றும் துஷரா மாவு மில்லில் மிகவும் கோபத்துடன் முறைத்துக்கொண்டு இருப்பது போல் இருக்கின்றனர். இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தற்பொழுது தொடங்கியுள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார்.
    • ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடலான ’அடங்காத அசுரன்’ பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார். ராயன் என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடலான 'அடங்காத அசுரன்' பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடல் மே 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இது கானா பாடலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பாடலிற்கு 'வாட்டர் பாக்கெட்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

    ஏ.ஆர் ரகுமான் இசையில் கானா பாட்டு எப்படி இருக்கும் என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தற்பொழுது படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சுதீப் கிஷன் , அபர்னா பாலமுரளியை தூக்கிக் கொண்டு இருக்கும் காட்சிகள் அப்போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இருவருக்கும் உள்ள காதல் பாடலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
    • இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ரெஜினா கசாண்ட்ரா. தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளன.


    ரெஜினா கசாண்ட்ரா

    இதையடுத்து நடிகை ரெஜினா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு நடிகர் சந்தீப் கிஷன் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், "பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா.. லவ் யூ.. எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன்." என்று தெரிவித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    ரெஜினா - சந்தீப் கிஷன்

    இந்த பதிவிற்கு 'இருவருக்கும் எப்போது கல்யாணம்' என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர். ரெஜினா கசாண்ட்ரா 'மாநகரம்' திரைப்படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ×