என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜூட் ஆண்டனி ஜோசப்"
- நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
- இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று ரசிகர்களை சந்தித்தார்.
நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடுகளிலும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று ரசிகர்களை சந்தித்தார்.
தக் லைஃப் படத்தை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கமல்ஹாசனின் தயாரிப்பில் தன்னுடைய எஸ்டிஆர்48 படத்தில் சிம்பு இணையவுள்ளதாகவும் பிரம்மாணடமாக எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் சிம்பு மலையாள இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் உடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டொவினோ தாமஸ் நடிப்பில் 2018 என்ற படத்தை இயக்கினார். இப்படம் குறைந்த பொருட் செலவில் எடுத்தாலும் உலகத்தரத்தில் எடுத்து இருப்பார்.
இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக சிம்பு நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து மோகன்லால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இவர்களுடன் மேலும் ஒரு பெரிய நடிகர் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஜூட் ஆண்டனி ஜோசப்.
- இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘2018’.
மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் '2018'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார்.
ஜூட் ஆண்டனி ஜோசப்
கடந்த 2014-ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஓம் சாந்தி ஒஷானா' படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த திரைப்படம் பார்வையாளர்களை முழு அளவில் திரையரங்கிற்கு அழைத்து வரும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தற்போது '2018' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி உள்ளார்.
- இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மலையாளத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நடித்து வரவேற்பை பெற்ற 'ஓம் சாந்தி ஓசானா', மற்றும் 'ஒரு முத்தஸி கதா', 'சாராஸ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப். இவர் தற்போது '2018' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி உள்ளார்.
ஜூட் ஆந்தனி ஜோசப்
இந்த படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் மம்முட்டி பேசியதாவது, ''டைரக்டர் ஜூட் ஆந்தனி தலையில் முடி இல்லா விட்டாலும் அவருக்கு அதிகமான மூளை இருக்கிறது. டிரைலர் சிறப்பாக உள்ளது" என்றார்.
மம்முட்டி
இதையடுத்து சமூக வலைதளத்தில் ஒரு மூத்த நடிகர், இயக்குனரை உருவக்கேலி செய்து பேசுவதா? என்று பல எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து நடிகர் மம்முட்டி மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இயக்குனர் ஜூட் ஆந்தனி பாராட்டும்போது பேசிய வார்த்தைகளால் சிலர் புண்பட்டு இருப்பதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப், நடிகர் மம்முட்டியை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் என் தலையில் முடி இல்லை என்று எனக்கோ என் குடும்பத்தாருக்கோ வருத்தம் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்