என் மலர்
நீங்கள் தேடியது "புதிய பஸ் நிலையங்கள்"
- திருப்பூரில் ரூ.26 கோடியிலும், ஓசூரில் ரூ.30 கோடியிலும் புதிய பஸ் நிலையங்கள் அமைய உள்ளது.
- புதிய பஸ் நிலையங்கள் கட்டுவதற்கு மொத்தம் ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பஸ் நிலையங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி திருப்பூரில் ரூ.26 கோடியிலும், ஓசூரில் ரூ.30 கோடியிலும் புதிய பஸ் நிலையங்கள் அமைய உள்ளது.
அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி, வடலூர், கூடலூர் ஆகிய 8 நகராட்சிகளிலும் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
இதற்காக மொத்தம் ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.