என் மலர்
நீங்கள் தேடியது "பிகில்"
- அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில்.
- இப்படத்தில் இடம் பெற்ற சிங்கப்பெண்ணே பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் வெளியான படம் பிகில். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்திருந்தார்.

பிகில்
நயன்தாரா கதாநாயகியாகவும், கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2019ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

பிகில்
இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஷாஷா திருப்பதி இணைந்து பாடிய சிங்கப்பெண்ணே பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்நிலையில் இப்பாடல் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
- பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
- பிகில் படக்கதை திருட்டு தொடர்பான வழக்கில் இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் அர்ச்சனா பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
நடிகர் விஜய் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான படம் பிகில். இதனை இயக்குநர் அட்லீ இயக்கி இருந்தார். இந்தப் படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
பிகில் படத்தின் கதையை தன்னுடையது என்றும், தனது கதையை பயன்படுத்தியதற்காக 10 லட்ச ரூபாய் வழங்க இயக்குனர் அட்லீ, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜய் நடித்த பிகில் படக்கதை திருட்டு தொடர்பான வழக்கில் இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் அர்ச்சனா பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தனது கதை என அம்ஜத் மீரான் 2019-ல் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- சிகிச்சை பலனின்றி ஜெயசீலன் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை', 'பிகில்', 'விக்ரம் வேதா' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்தவர் ஜெயசீலன்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தில் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ரவுடிகளை விஜய் பாடம் நடத்தி விரட்டி அடிக்கும் காட்சியில் "ட்விங்கிளு ட்விங்கிளு சூப்பர் ஸ்டாரு.. அவ்வையார்.. வாத்தியார்" என தப்புத் தப்பாக ரைம்ஸ் பாடி காமெடி செய்யும் அடியாளாக நடித்து இருந்தார்.

இந்த நிலையில், மஞ்சள் காமாலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஜெயசீலன் (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் திருமணம் செய்துகொள்ளாமல் வசித்த வந்த ஜெயசீலன், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி ஜெயசீலன் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்