search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றால அருவி"

    • அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
    • ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் நேற்று மாலையில் பெய்த கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், இன்று காலையில் மழை அளவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து முதற்கட்டமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும், பழைய குற்றால அருவியில் நேற்று திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக அந்த பகுதியில் கற்கள் மற்றும் மணல்கள் காணப்பட்டதால் அதனை அப்புறப்படுத்திய பின் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    • ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைய தொடங்கி உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து குற்றால சீசன் களைகட்டும்.

    ஆனால் தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் போதுமான அளவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கி உள்ளது.

    கடந்த 3 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கமானது படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளதால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.

    மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைய தொடங்கி உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும்.

    • பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.
    • இன்று காலையில் குற்றாலம் ஐந்தருவியல் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக முக்கிய சுற்றுலாதளமான குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்நிலையில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குற்றாலத்தில் பிரதான அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று குறைய தொடங்கியுள்ளது.

    இன்று காலையில் குற்றாலம் ஐந்தருவியல் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • குற்றாலத்தின் முக்கிய அறிவிகளான ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • பழைய குற்றால அருவியில் போதுமான அளவு தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தின் முக்கிய அறிவிகளான ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் குளிப்பதற்கு தடை விதித்திருந்தது. இதனால் நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவியில் குளிக்க வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இருப்பினும் பழைய குற்றால அருவியில் போதுமான அளவு தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்தனர். இரவில் மழை இல்லாததால் ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் தண்ணீர் சீற்றம் குறைந்ததை அடுத்து இன்று காலை முதல் மீண்டும் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். வெளியூர் சுற்றுலா பயணிகள் குளிக்கும் அளவிற்கு பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழுவதால் அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டு வருகிறது.

    • அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் திடீர் தடை விதித்தது.
    • சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் குற்றால அருவிகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.

    தென்காசி:

    தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதல் தென்காசி மாவட்டம் முழுவதும் அவ்வப்போது மிதமான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

    குறிப்பாக நேற்று நள்ளிரவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி,பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று அதிகாலை முதல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் திடீர் தடை விதித்தது. சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் குற்றால அருவிகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.

    இருப்பினும் தடை உத்தரவால் இன்று அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்கள் அருவிகளை தூரத்திலிருந்து ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.

    மேலும் பள்ளிகளுக்கு தற்பொழுது தொடர் விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதாலும் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகளும் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    ×