search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிகாட்டு நிகழ்ச்சி"

    • உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    • மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களு டன் வந்து கலந்து கொண்டு பயன டையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர் களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பாக தமிழக அரசால் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற சிறப்பு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற வுள்ளது.

    மேற்படி சிறப்பு விழிப் புணர்வு மற்றும் வழிகாட்டு தல் நிகழ்ச்சிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் தலை மையில் நடைபெறவுள்ளது.

    மேற்படி நிகழ்ச்சியில், மாணவர்களின் உயர்கல்வி தொடர்பான ஆலோசனை கள் மற்றும் வழிகாட்டுதல் களை பல்வேறு துறை சார்ந்த அலுவவர்கள் வழங்க வுள்ளார்கள். மேலும், பொறி யியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பது தொடர் பாகவும் கல்விக்கடன், கல்வி உதவித் தொகை பெறுவது தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். உயர்கல்வி பயிலுவதற்கு தேவையான சாதிச்சான்று, வருமானச் சான்று உட்பட இணைய வழிச்சான்றுகள் அங்கேயே அமைக்கப் பட்டுள்ள இரு சேவை மையம் மூலமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களு டன் வந்து கலந்து கொண்டு பயன டையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எந்தெந்த துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளது என விளக்கம்
    • பெற்றோர், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளித்தாளாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் ஷபானா பேகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    உயர் கல்வி வழிகாட்டுனர் ஆர்.அஸ்வின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பது குறித்தும் விளக்கி பேசினார்.

    11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்த கட்டம் செல்ல எந்தெந்த துறையில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளது என்றும், மேலும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்கி முயற்சி செய்து, வெற்றி பெற வேண்டும் என கூறினார்.

    முடிவில் பள்ளி முதல்வர் பரிதா நன்றி கூறினார்.

    ×