search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊக்க மருந்து சோதனை"

    • இடைநீக்கம் செய்ய தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    • பஜ்ரங் புனியாவுக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் பஜ்ரங் புனியா, ஊக்கமருந்து தடை விதியை மீறியதற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு இடைநீக்கம் செய்யப்பட்டு, பிறகு ஒழுங்குமுறை குழுவால் திரும்பப் பெறப்பட்டது.

    ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் மீண்டும் அவரை இடைநீக்கம் செய்ய தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அவருக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.
    • இந்திய மல்யுத்த சம்மேறனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷணுக்கு எதிராக போராடியவர்.

    மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மீது தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் பஜ்ரங் புனியா.

    இவர், இந்திய மல்யுத்த சம்மேறனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷணுக்கு எதிராக சாக்ஷி மாலிக், வினேஷ் ஆகியோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்.

    • தடகளத்தில் அதிகபட்சமாக 49 பேர் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளனர்.
    • சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா உள்பட 13 கிரிக்கெட் வீரர்கள் சிகிச்சை பயன்பாடு விலக்கு கேட்டு இருப்பதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடம் ஊக்க மருந்து சோதனை மேற்கொண்டு வருகிறது.

    கடந்த 2022 ஏப்ரல் மாதம் முதல் 2023 மார்ச் வரை இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளில் 142 பேர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 4342 விளையாட்டு வீரர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. போட்டியில் பங்கேற்ற 2596 பேரிடமும், போட்டிக்கு வெளியே 1746 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது.

    தடகளத்தில் அதிகபட்சமாக 49 பேர் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக பளுதூக்குதலில் 22 பேரும் மல்யுத்தத்தில் 17 பேரும், சிக்கியுள்ளனர். சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா உள்பட 13 கிரிக்கெட் வீரர்கள் சிகிச்சை பயன்பாடு விலக்கு கேட்டு இருப்பதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

    • சஞ்சிதா சானுவை சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.
    • குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை இழக்க நேரிடும்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி பளு தூக்கும் வீராங்கனைகளில் ஒருவர் சஞ்சிதா சானு. இவர் காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்றுள்ளார். இந்த நிலையில் சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார். குஜராத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபரில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியின்போது அவரது சிறுநீர் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், சஞ்சிதா சானு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.

    இனி தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியின் ஊக்கமருந்து தடுப்புக் குழுவின் முன்பு சஞ்சிதா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்கு ஆண்டுகள் அவர் போட்டிகளில்பங்கேற்க முடியாதபடி சஸ்பெண்ட் செய்யப்படலாம். அத்துடன், அவர் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தையும் இழக்க நேரிடும்.

    மூத்த வீராங்கனை ஊக்கமருந்து வலையில் சிக்கியிருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் சஹ்தேவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    ×