search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினோத்"

    • விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்ட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்துள்ளார்
    • விஜய் இறுதியாக 69-வது படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

    கடந்த ஆண்டு லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்ட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும். கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்தில், சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் மிகவும் வைரலாகியது அதைத்தொடர்ந்து விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாம் பாடலான சின்ன சின்ன கண்கள் பாடலும் வெளியாகியது. படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    சமீபத்தில் கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்று 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கினார்.

    இதனிடையே அரசியலில் குதித்த விஜய் இறுதியாக 69-வது படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

    இதனால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதி படுத்தும் வகையில் எச். வினோத் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் சென்னையில் ஆபிஸ் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். இசையை அனிருத் மேற் கொள்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இதுக்குறித்த அதிகாரப் பூர்வ தகவல் விரைவில் வெளியாகப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை இயக்கியதில் ஹெச்.வினோத் ஒருவர்
    • இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த ’பிங்க்’படத்தை தமிழில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார் வினோத்.

    நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை இயக்கியதில் ஹெச்.வினோத் ஒருவர். வினோத் 2014 ல் வெளியான சதுரங்க வேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சதுரங்க வேட்டை திரைப்படம் மக்களால் கொண்டாடப்பட்டது. 2014-ல் வெளியான திரைப்படங்களில் 'சதுரங்க வேட்டை' ஒரு புது விதமான கதை பாணியுடன் வெளிவந்தது. சூதாட்டம், மக்களை எப்படி நூதன முறையில் ஏமாற்றுகிறார்கள் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

    இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. பின் 2017-ல் கார்த்தியை வைத்து 'தீரன் அதிகாரம் ஒன்று'படத்தை இயக்கினார். கார்த்தியின் திரையுலக பயணத்தில் பேர் சொல்லும் படமாக இது அமைந்தது. கார்த்தி ஒரு போலீஸ் அதிகாரியாக திறம்பட நடித்திருப்பார்.

    இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த 'பிங்க்'படத்தை தமிழில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார் வினோத்.

    2022-ஆம் ஆண்டு அஜித்-தை வைத்து வலிமை படத்தை இயக்கினார். 2023-ல் மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கினார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் போன்ற பலர் நடித்திருந்தனர். போனி கபூர் இப்படத்தை தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்தார். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் அள்ளியது. அஜித் ரசிகர்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது. இந்நிலையில் வினோத் அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் பங்குபெற்ற நேர்காணலில் "என்னோட முதல் படத்த தவிர நான் யாரிடமும் முழு கதையை சொன்னது கிடையாது, விஜய் சாருக்கு கதை சொல்லும்போது மட்டும்தான் முழு கதைய படிச்சு காட்டினேன்"என்று அவர் கூறியுள்ளார். இதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதற்கான வேலையை ராஜ்கமல் நிறுவனம் கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது.
    • படம் குறித்து புதிய தகவல் கமல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எச்.வினோத், நடிகர் கமல்ஹாசனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'கேஎச் 233' என்று பெயரிடப்பட்டு உள்ளது. 

    திரைக்கதை மற்றும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த படம் கைவிடப்படுகிறது எனவும், தயாரிப்பாளர்களால் அதைப்பற்றிய எந்த அறிவிப்பும் பகிரப்படவில்லை எனவும் தகவல் பரவி வந்தது.

     இந்நிலையில் இன்று இதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் கமல் - வினோத் இணையும் #KH233கைவிடப்படவில்லை எனவும் வேறு ஒருநேரத்தில் இந்த படம் நிச்சயம் எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கான வேலையை ராஜ்கமல் நிறுவனம் கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது. திரைக்கதை மற்றும் 'கால்ஷீட்'பிரச்சினை காரணமாக இந்தபடம் கைவிடப்படுகிறது என்ற தகவல் பரவி வந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து புதிய தகவல் கமல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     

    • நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரும் தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராகவும் பதவி வகித்து வந்தவர் வினோத்.
    • இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.



    இந்நிலையில் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரும் தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராகவும் பதவி வகித்து வந்த 29 வயதாகும் வினோத் என்பவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து சென்னை திருவான்மியூரில் உள்ள மறைந்த வினோத்தின் இல்லத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வினோத்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    ×