search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக எம்எல்ஏக்கள்"

    • திமுக எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் என்று கூறி இருந்தனர்.
    • நஷ்ட ஈடாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இருவரும் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

    கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புள்ளதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது எதிர்க்கட்சிகள் மற்றும் பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு மூல காரணமானவர்கள் என்று சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் குற்றம்சாட்டி இருந்தனர்.

    கள்ளச்சாராயம் குடித்து பலியோனோரின் குடும்பத்தை வைத்து அன்புமணி ராமதாஸ் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் என்று குற்றம்சாட்டியிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் என்று கூறி இருந்தனர்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    நஷ்ட ஈடாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இருவரும் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் சார்பில் வக்கீல் வில்சன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    • கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
    • சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை.

    சென்னை:

    கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புள்ளதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், சட்டசபை வளாகத்திற்கு வெளியே தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    * உண்மைக்கு மாறானவற்றை கூறும் ராமதாஸ், அன்புமணி ராமதாசுக்கு கண்டனம்.

    * கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

    * கள்ளச்சாராயம் குடித்து பலியோனோரின் குடும்பத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

    * இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அங்கு சென்றும் மலிவான அரசியல் செய்கிறார் அன்புமணி.

    * எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்து விலக தயார். அதேபோல் அவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவார்களா?

    * சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை. வீட்டில் தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் கண்ணுக்குட்டி தி.மு.க பிரமுகராகிவிடுவாரா?

    * ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
    • முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சட்டசபை துணைத் தலைவர் பிச்சாண்டி மற்றும் அரசு தலைமைக் கொறடா செழியன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர்களின் ஒரு மாத ஊதியமான ரூ.35,70,000, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 91,34,500 என மொத்தம் 1,27,04,500 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்கள்.

    • ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கென்று தேர்தல் அலுவலகமும் திறந்துள்ளனர்.
    • அமைச்சர்களிடம் சமுதாயம் சார்ந்த ஓட்டுகள் எவ்வளவு உள்ளது என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் மத சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக தி.மு.க.வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, ஏ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சக்கர பாணி, மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கயல்விழி செல்வராஜ் ஆகிய 11 அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் 31 பேர்களை தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற செய்து தி.மு.க. மேலிடம் பணியாற்றி வருகிறது.

    ஈரோடு தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கான வார்டுகளை பிரித்து தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

    ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கென்று தேர்தல் அலுவலகமும் திறந்துள்ளனர். அமைச்சர்களிடம் சமுதாயம் சார்ந்த ஓட்டுகள் எவ்வளவு உள்ளது என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அந்த பட்டியலுக்கு ஏற்ப கட்சி நிர்வாகிகளை அனுப்பி ஓட்டு கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அங்கு சென்றுள்ள அமைச்சர்கள் முதற்கட்டமாக உள்ளூர் கட்சிக்காரர்கள்-கூட்டணி கட்சிக்காரர்களிடம் ஆலோசனை நடத்தி அதற்கேற்ப ஏரியாவை பிரித்து கட்சி நிர்வாகிகளை பணியாற்ற நியமித்துள்ளனர்.

    இவர்களிடம் வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியலும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலை வைத்து வீடு வீடாக வாக்காளர் பட்டியலை கட்சி நிர்வாகிகள் சரி பார்த்து வருகிறார்கள்.

    யாரும் வீடு மாறி இருக்கிறார்களா? அல்லது அதே முகவரியில் வசிக்கிறார்களா? என்பதை உறுதிபடுத்தி வருகின்றனர். இதை வைத்துதான் ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளுக்கு எவ்வளவு ஓட்டு என்று கணிக்கப்படும்.

    இந்த பணிகளை வேகப்படுத்துவதற்காக மேலும் பல அமைச்சர்கள் ஈரோடு தொகுதிக்கு வந்துள்ளனர். அதுமட்டுமின்றி தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் ஈரோடு தொகுதிக்கு செல்ல வேண்டும் என்று தலைமையில் இருந்து உத்தரவு வந்ததால் அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர்.

    இவர்கள் அமைச்சர்கள் சொல்லும் கட்டளையை நிறைவேற்றும் செயல் வீரர்களாக பணியாற்றி வருகிறார்கள். எம்.எல்.ஏ.க்களுடன் அவரது ஆதரவாளர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

    இதேபோல் கூட்டணி கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இதனால் லாட்ஜ், அனைத்தும் நிரம்பி விட்டது. அங்கு இடம் கிடைக்காதவர்கள் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். தனி வீட்டையும் வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.

    ஈரோட்டில் இடம் கிடைக்காதவர்கள் அருகில் உள்ள பவானிக்கு சென்று தங்கி அங்கிருந்து ஈரோட்டுக்கு வந்து செல்கின்றனர்.

    ×