என் மலர்
நீங்கள் தேடியது "இந்து கோவில் சேதம்"
- கோவில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் இடம் பெற்று இருந்தது.
- காலிஸ்தான் தீவிரவாதம் வளர்ந்து வருவதை காட்டும் வகையில் உள்ளது.
ஒட்டாவா:
கனடாவில் சமீபகாலமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் வான்கூவரில் உள்ள ஒரு குருத்வாரா மீது அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
குருத்வாரா சுவர்களில் பிரதமர் மோடியை அச்சுறுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக வான்கூவர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கனடாவில் இந்து கோவில் மீது நடந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சர்ரே என்ற பகுதியில் லட்சுமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்கள். கோவிலும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் இடம் பெற்று இருந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அங்குள்ள இந்திய சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு எம்.பி. சந்திரஆர்ய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட கண்டன பதிவில் கூறி இருப்பதாவது:-
பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்து கோவில் மீதான தாக்குதல் இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த செயலை கடுமையாக கண்டிக்கிறேன். இது காலிஸ்தான் தீவிரவாதம் வளர்ந்து வருவதை காட்டும் வகையில் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- PUBக்கு சென்றதும் பின் அங்கிருந்து வெளிவந்ததும் பதிவாகி உள்ளது.
- இந்த சம்பவத்துக்கு இந்து கனேடிய அறக்கட்டளையும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை அந்நாட்டு போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆரய்ந்ததில் 2 நபர்கள் முதலில் அப்பகுதியில் இருந்த PUBக்கு சென்றதும் பின் அங்கிருந்து வெளிவந்து கோவிலின் முகப்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
அந்த நபர்கள் Hoodie அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை கனடா போலீஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால், கனடாவில் இந்து வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கனடா காவல்துறை தெரிவித்தது. மேலும் இந்த சம்பவத்துக்கு இந்து கனேடிய அறக்கட்டளையும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
- கோவில் சேதப்படுத்தப்பட்ட செயலுக்கு டொரோண்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒட்டாவா:
கனடாவில் உள்ள பிராம்ப்டனில் கவுரிசங்கர் மந்திர் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான இந்து கோவில் உள்ளது.
இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் இந்த கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த செயலுக்கு டொரோண்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக துணை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு இந்த செயலானது கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வெறுக்கத்தக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்யப்பட்ட இந்த செயல் இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் கனடா அதிகாரிகளிடம் எங்களின் கவலைகளை தெரிவித்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது.
காளிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கனடா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பிராம்ப்டனில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இதுவரை 3 முறை கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மிசிகாகாவில் உள்ள ராமர் கோவில் இந்தியாவுக்கு எதிரானவர்களால் சிதைக்கப்பட்டதை இந்திய தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது.
- கடந்த ஜனவரி மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் மிசிகாகா மாகாணத்தில் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுவரில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை மர்ம நபர்கள் எழுதி இருந்தனர்.
இச்சம்பவத்துக்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் டுவிட்டரில் கூறும்போது, மிசிகாகாவில் உள்ள ராமர் கோவில் இந்தியாவுக்கு எதிரானவர்களால் சிதைக்கப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.