search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women’s College"

    • ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
    • சட்டசபையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் பேசியதாவது:-

    முருகனின் அறுபடை வீடுகளையும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தரிசனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலா துறையும், போக்குவரத்து துறையும் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஆன்மீக சுற்றுலா வெளிநாட்டவர்களுக்கும், வெளிமாநிலத்தவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் புதுமையாக இருக்கும்.

    இதுபோல் ராமேசுவரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோவில் போன்ற மிகச்சிறப்பு மிக்க கோவில்களுக்கு ஒவ்வொரு ஊரிலிருந்தும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.

    சுற்றுலா துறையின் மூலம் தமிழ்நாட்டின் வருவாயை அதிகரிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்து மாநிலத்திற்குள்ளும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிலும் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 53 தமிழ்நாடு ஓட்டல்களை முறையாக பராமரித்து தரம் உயர்த்தி நவீனப்படுத்த வேண்டும்.

    அனைத்து சுற்றுலா தலங்களிலும் தகவல் மையம் அமைக்க வேண்டும். அதிக பயணிகள் வரும் இடங்களை கண்டறிந்து, அரசு அவற்றிற்கு சுற்றுலா மையம் என்ற அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அந்த இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    ஒரு சுற்றுலா தலத்திலிருந்து மற்றொரு சுற்றுலா தலத்திற்கு நேரடி பஸ் வசதி இருக்க வேண்டும். மலை, கடல் போன்ற ஆபத்தான பகுதிகளில் உயிர் காக்கும் மருத்துவ வசதி உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும். இதன் மூலம் வருவாயை அதிகரிக்கலாம். சுற்றுலா துறையும் மேம்படும். நமது கலாச்சாரம், பண்பாடு, தமிழ் மொழியும் வளர்ச்சி அடையும்.

    ராஜபாளையம் தொகுதியில் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில், சாஸ்தா கோவில் அணைப்பகுதியையும், சஞ்சீவி மலையையும் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். மேலும் அய்யனார் கோவிலுக்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும்.

    ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கில் இருந்து கோதை நாச்சியார்புரம் வழியாக தென்காசி ரோடு வரையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கீழக்கரை தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் 35-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
    • முன்னதாக கல்லூரியின் 3-ம் ஆண்டு உளவியல் துறை மாணவிபாத்திமா நவுரா வரவேற்றார்.

    கீழக்கரை

    கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 35-வது விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி தலைமை வகித்து கல்லூரி கொடியை ஏற்றினார்.

    ராமநாதபுரம் மாவட்ட கடற்படை நலன் மற்றும் ஆரோக்கிய சங்கத்தின் தலைவர் சேட்னா விக்ராந்த் ஷெப்னி தேசியக்கொடியையும், சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியின் முன்னாள் முதல்வர் ரோஷி பெர்னான்டோ, தாசிம்பீவி கல்லூரியின் முன்னாள் மாணவி ஜெய்னம்பு பாத்திமா ஆகியோர் ஒலிம்பிக் கொடியையும் ஏற்றினர்.

    கல்லூரி முதல்வர் சுமையா முன்னிலை வகித்தார். இதில் மாணவிகளின் அணிவகுப்பு நடந்து. ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து 100, 200, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள், சாகசங்கள், உடற்பயிற்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முன்னதாக கல்லூரியின் 3-ம் ஆண்டு உளவியல் துறை மாணவிபாத்திமா நவுரா வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி, ஆரோக்கிய சங்கத்தின் தலைவர் சேட்னா விக்ராந்த் ஷெப்னி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    முடிவில் மாணவி நூரூர் ருஸ்லா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுமையா, சீதக்காதி அறக்கட்டளையின் துணை பொது மேலாளர் சேக் தாவூத் கான் ஆலோசனையின் பேரில் பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×