search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியாஸ் விலை"

    • மாதத்திற்கு இரண்டு முறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
    • தற்போது வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

    இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.70.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சென்னையில் நேற்று வரை 1,911 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.1,840.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த மாதமும் வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டுள்ளனரா?
    • அவர் பதவிக்கு வருவதற்கு முன்னதாக பெட்ரோல் ரூ.50. டீசல் ரூ.40 எனக் கூறினார். குறைத்துள்ளனரா?.

    மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதனையொட்டி நள்ளிரவு முதல் பிரதமர் மோடி அறிவித்ததன்படி சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் வரவிருக்கும் நிலையில் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் குறைப்பார்கள். அவர் பதவிக்கு வருவதற்கு முன்னதாக பெட்ரோல் ரூ.50. டீசல் ரூ.40 எனக் கூறினார். குறைத்துள்ளனரா?.

    ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டுள்ளனரா?

    தேர்தலுக்காக 100 ரூபாய் குறைப்பார்கள். தேர்தல் முடிந்த பிறகு கூட்டமாட்டோம் எனச் சொல்லட்டும். தேர்தலுக்காக குறைக்கிறேன் என்றால்... வேண்டாம் என்று சொல்லல.. மக்களுக்கு பயன்.

     தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் கூட்டமாட்டேன் என்று பிரதமர் மோடி சொலலட்டும்.

    இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    ஐந்து மாநில தேர்தலையொட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,110-ஐ தாண்டியுள்ளது.
    • திரும்ப பெறாத பட்சத்தில் விரைவில் ஒன்றிய அரசு அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    3 மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது ஒன்றிய அரசு. இதனால் நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,110-ஐ தாண்டியுள்ளது.

    ஏழை, நடுத்தர வர்த்தகத்தினர் மாத பட்ஜெட் மேலும் எகிரும் வாய்ப்பு உள்ளன. எனவே ஒன்றிய அரசு கேஸ் விலை உயர்வை உடனயாக திரும்பப் பெற வேண்டும். திரும்ப பெறாத பட்சத்தில் விரைவில் ஒன்றிய அரசு அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×