என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் அதிகாரிகள்"

    • சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர்.
    • சென்னை தலைமைச் செயலகம் சென்ற பீகார் அதிகாரிகள் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர்.

    இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகம் சென்ற பீகார் அதிகாரிகள் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.

    ×