search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிச்சர்ட் ரிஷி"

    • 2020 ஆம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார்.
    • மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்தை குறித்து மோகன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    2016 ஆம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானாஇ மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார்.

    இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும். திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

    கடைசியாக செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்தை குறித்து மோகன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இந்த ஆடி பெருக்கு நன்நாளை முன்னிட்டு புதிய அலுவலக பூஜையுடன் அடுத்த திரைப்படத்திற்கான வேலைகல் துவங்கியது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கி என்று பதிவிட்டுள்ளார்.

    இப்பதிவில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தின் அவருடன் நடிகர் ரிச்சர்ட் ரிஷி இருக்கிறார். அடுத்து இயக்கும் படத்தில் இவர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சர்ட் ரிஷி இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு வெளியான சில நொடிகளில் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
    • ஐதராபாத்தில் நடிகர் அஜித் குமார் சிரஞ்சீவியை சந்தித்தார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கியவர் ஷாலினி. நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட ஷாலினி, அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு பேபி ஷாம்லி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற சகோததரரும் உண்டு.

    இந்த நிலையில், ஷாலினி அஜித்குமார் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி தனது சகோதரி மற்றும் சகோதரருடன் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி தற்போது விஷ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வசிஷ்டா இயக்குகிறார்.

     


    முன்னதாக விஷ்வம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் அஜித் குமார் நடிகர் சிரஞ்சீவியை சந்தித்தார். மேலும், படக்குழுவுக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்தார். இது தொடர்பான படங்கள் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வினய் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சில நொடிகள்’.
    • இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சில நொடிகள்'. மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


    இதில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ஜி, "என்னுடைய ஹீரோ ரிச்சார்ட் சாருடைய படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இதுபோன்ற விழா அவருக்கு நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என நான் நீண்ட நாள் காத்திருந்தேன். கடினமான ஒரு சமயத்தில் நான் போய் அவரிடம் நின்றபோது எனக்கு உதவுவதற்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.


    படம் ரிலீஸின் போதும் எதிர்பாராத சில பிரச்சினைகள் வந்தது. அப்போதும் நான் அவரிடம்தான் போனேன். எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக நின்றார். அப்படி உருவானதுதான் 'திரெளபதி'. அவர் இல்லை என்றால் 'திரெளபதி' இல்லை. இந்தப் படம் 18 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. அதேபோல, அடுத்த படமான 'ருத்ரதாண்டவ'-ம் 13 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. மூன்றாவது படம் ஒரு கேப் விட்டு பண்ணலாம் என்றார். அதனால்தான் செல்வா சாருடன் 'பகாசூரன்' செய்தேன். நானும் ரிச்சரட் சாரும் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறோம். அதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வரும்.


    சினிமாவில் நான் ஐந்து வருடம் பயணித்தது அவரால்தான். திடீரென இவர் யாஷிகாவுடன் ஃபோட்டோ போட்டதும், என்ன சாருக்கு கல்யாணமா? என நிறைய பேர் என்னிடமும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவரிடம் நான் கேட்டபோது, சிரித்தார். பின்புதான் படத்திற்கான புரோமோஷன் என புரிந்தது. ரிச்சார்ட் சாரை இது போல திரையில் ஸ்டைலிஷாகப் பார்ப்பது மகிழ்ச்சி. 24-ஆம் தேதி படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்று பேசினார்.

    • நடிகர் ரிச்சர்ட் ரிஷி 'ருத்ரதாண்டவம்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • தற்போது மோகன் ஜி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

    பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'பகாசூரன்' போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ருத்ர தாண்டவம்'. ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்த இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடித்தார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    யாஷிகா -ரிச்சர்ட் ரிஷி

    இதைத்தொடர்ந்து, மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி சில தினங்களுக்கு முன்பு நடிகை யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ரிச்சர்ட் ரிஷியும் யாஷிகாவும் காதலித்து வருவதாக சலசலத்து வந்தனர்.


    ரிச்சர்ட் ரிஷி -யாஷிகா

    இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு நடிகர் ரிச்சர்ட் ரிஷி விளக்களித்துள்ளார். இது குறித்து அவர், "நானும் யாஷிகாவும் நடிக்கும் படத்தின் புகைப்படங்களைத்தான் இணையத்தில் ஷேர் செய்தேன். இப்படத்தை கன்னட இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்குகிறார். படத்தின் புரோமோஷனுக்காக தான் அந்த புகைப்படங்களை பகிர்ந்தேன், மற்றப்படி எனக்கும் யாஷிகாவிற்கும் நடுவில் காதலும் இல்லை கல்யாணமும் இல்லை" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘பகாசூரன்’.
    • மோகன் ஜி சமீபத்தில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

    பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


    செல்வராகவன் - மோகன் ஜி

    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் தனது அடுத்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடிக்கவுள்ளதாக இயக்குனர் மோகன் ஜி தெரிவித்திருந்தார்.


    ரிச்சர்ட் ரிஷி

    இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், "இவரு யாருன்னு தெரியுதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி சார். நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம், முக்கியமான செய்தி... என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான். அறிவிப்பு விரைவில்..." என்று குறிப்பிட்டிருந்தார்.


    ரிச்சர்ட் ரிஷி

    இந்நிலையில், தற்போது இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "இந்த தடவை வேற மாதிரி ஒரு களம், வேற மாதிரி ஒரு ஆட்டம்" என்று ரிச்சர்ட் ரிஷி புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    ×