என் மலர்
நீங்கள் தேடியது "அதிமுக பாஜக கூட்டணி"
- சட்டமன்றத்தில் அதிமுக - திமுக இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.
- நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை யார் கொண்டு வந்தது என்பது தொடர்பாக இன்று கூடிய சட்டமன்றத்தில் அதிமுக - திமுக இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.
அப்போது சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். அதை நாங்கள் மறுக்கவில்லை. எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், நிச்சயம் அதனை செய்திருப்போம்.
ஆனால், இப்போது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே. 'நீட் தேர்வை ரத்து செய்தால் தான் (பாஜக) கூட்டணியில் இருப்போம் என்று கூற உங்களுக்கு அருகதை இருக்கிறதா? என்று இபிஎஸ்-ஐ நோக்கி கேள்வி எழுப்பினார்.
தவறை சரி செய்வதற்கு உங்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 2026ஆம் ஆண்டில் என்ன, 2031ல் கூட கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறிவிட்டு இப்போது கூட்டணி அமைத்திருக்கிறீர்களே என்றும் இது ஏமாற்றுவேலையல்லவா என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
- அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி.
- இன்று மாலை விருந்து திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரும் 23ம் தேதி விருந்து அளிக்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, எடப்பாடி பழனிசாமியின் பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்திலேயே விருந்து உபசரிப்பு நடைபெற உள்ளது.
இன்று மாலை விருந்து திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது என்றார்.
- பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தாங்கள் பேசியது தவறு.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.யுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்க உள்ளது. இதனை கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்த போது உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது. இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்றார்.
மேலும், கூட்டத்தில் திருப்பூர் மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் கூறுகையில், நிர்பந்தம் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும் என்று அவர் நாதழுதழுக்க பேசினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகளின் பேச்சுக்கு பா.ஜ.க.வின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
வணக்கம், குணசேகரன் அண்ணா உங்களுக்குத்தான் இந்த பதிவு. எதுவுமே கவலைப்படவேண்டியதில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததில் பிரச்சனை என்று சொல்கிறீர்கள். பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தாங்கள் பேசியது தவறு. குணசேகரன் அண்ணா உங்களை ஒன்றே ஒன்று கேட்கிறேன்.
நீங்கள் 3 முறை வெற்றி பெற்ற வார்டுக்குள் இன்றைக்கு நீங்க எத்தனை வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். 64 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். 484 வாக்கு பா.ஜ.க. வாங்குகிறது. இதுக்கு என்ன சொல்றீங்க? நீங்கள் தோற்றதுக்கும், பேசுறதுக்கும் எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சிக்கிறீர்கள். இது நல்லது இல்லைங்க அண்ணா... நீங்க தோற்றதுக்கு காரணம் பா.ஜ.க.வா? 3 முறை வெற்றி பெற்ற இடத்தில் ஏன் தோற்றீர்கள்? என்ன காரணம்? பா.ஜ.க. இல்லாததால் என்றார்.
- அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
- பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி போட்டியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதிமுக- பாஜக கூட்டணி, அதிமுகவில் சலசலப்பை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி என சி. விஜயபாஸ்கருக்கு எழுதிய கடிதத்தில், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த லோக் சபா தேர்தலில் கூட்டணி முறிந்தது.
- அண்ணாமலை குறித்து ஜெயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களத்தில் காட்சிகள் அதிரடியாக மாறி வருகின்றன. அதில் சமீபத்தியது, அதிமுக - பாஜக கூட்டணி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சால் கடந்த லோக் சபா தேர்தலில் கூட்டணி முறிந்தது.
இது அத்தேர்தலில் தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்குமே பின்னடைவை தந்தது. இதிலிருந்து பாடம் கற்ற இவ்விரு கட்சிகள் தற்போது மீண்டும் கூட்டு சேர்ந்துள்ளன.
இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து தான் விலகிவிடுவேன் என்று தான் சொல்லவே இல்லை என முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கியுள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை.
பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் இந்த ஜெயக்குமார் நின்றதில்லை. அதிமுகதான் எனது உயிர் மூச்சு" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அண்ணாமலை குறித்து ஜெயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணியுடன் போட்டியிட உள்ளதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
- அதிமுக- பாஜக கூட்டணி மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணியுடன் போட்டியிட உள்ளதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்," அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். தமிழக பா.ஜ.க.வினர் இடையே புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும்.
அதிமுக- பாஜக கூட்டணி மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.
- தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய பாஜகவிடம் விட்டுக்கொடுத்தது அடிமை அதிமுக ஆட்சியில் தான்.
- எந்த வித நிபந்தனையும் பழனிசாமி விதிக்கவில்லை என்று அமித்ஷா அவர்களே போட்டுடுடைத்துவிட்டார்.
தமிழ்நாடு நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் அடிமை சாசனம் எழுதி கொடுப்பது போல கூட்டணிக்கு சரி என தலையாட்டி பொம்மையாய் பேச்சின்றி தலையை மட்டும் ஆட்டி கூட்டணியை உறுதி செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இரண்டு ரைடுகளுக்கு அரண்டு போய் அமித்ஷா முன்னிலையில் ஒருவார்த்தை கூட பேசாமல் தலையாட்டி பொம்மை போல அமர்ந்து கூட்டணியை உறுதி செய்த பழனிசாமியின் யோக்கியதையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டிவிட்டார் என்றவுடன் ரோஷம் வாந்தவரைப் போல வீண் அவதூறுகளை மட்டும் அள்ளிவிட்டு X தளத்தில் பதிவிட்டுள்ளார் பழனிசாமி.
பாரபட்சமான GST வரிப்பகிர்வை ஏற்றுக்கொண்டு பொருளாதார உரிமையை விட்டுக்கொடுத்தது, உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்டு மின்கட்டண நிர்ணய உரிமையை விட்டுகொடுத்தது, CAA வை ஆதரித்து முஸ்லீம் மக்களின் முதுகில் குத்தியது இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய பாஜகவிடம் விட்டுக்கொடுத்தது அடிமை அதிமுக ஆட்சியில் தான்.
அதோடு அடிமை அதிமுக ஆட்சியில் தான் நீட் நுழைவு தேர்வு தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டது என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பாஜக கூட்டணியில் ஒட்டிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தவர் பழனிசாமி. சரி இப்போதாவது அதற்கு பிராயச்சித்தம் செய்யும் வகையில் நீட் விலக்களித்தால் கூட்டணி வைக்கிறேன் என்றாவது பாஜக அரசிடம் வலியுறுத்தினாரா அதுவும் இல்லை.
எந்த வித நிபந்தனையும் பழனிசாமி விதிக்கவில்லை என்று அமித்ஷா அவர்களே போட்டுடுடைத்துவிட்டார்.
இப்படி தமிழ்நாட்டு நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் அடிமை சாசனம் எழுதி கொடுப்பது போல கூட்டணிக்கு சரி என தலையாட்டி பொம்மையாய் பேச்சின்றி தலையைமட்டும் ஆட்டி கூட்டணியை உறுதி செய்துள்ளார் பழனிசாமி.
இதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டி தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள் என்று கூறியதில் என்ன தவறு.
ஏதோ "குறைந்த பட்ச செயல்திட்டம்" உள்ளது என்கிறார். அந்த ரகசியத்தை எப்போது சொல்வார்கள் தேர்தல் முடிந்த பின்னா..? அந்த செயல்திட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த செயல்திட்டம் உள்ளதா..? நீட் தேர்வு விலக்கு, மும்மொழி என்ற இந்தி திணிப்பு, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை , நிதி பகிர்வில் பாரபட்சம் இப்படியான ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகத்திற்கு என்ன செயல் திட்டத்தை மேற்கொள்ள போகிறார் பழனிசாமி என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல துப்பில்லை.
"சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு" மக்கள் நலனைப் பற்றி பழனிசாமி சிந்தித்தால் தானே அதை பற்றி செயல்திட்டம் வகுக்க.. உங்களது அந்த செயல்திட்டம் எல்லாம் இனி அமலாக்கத்துறை அதிமுக வினர் வீட்டுக்கதவை தட்டக் கூடாது என்பதுதான் என தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். துரோகி அதிமுகவும், விரோதி பாஜகவும் சேர்ந்த கூட்டணியை வரும் தேர்தலில் விரட்டி அடிப்பார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
- முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும், பொன்முடியையும் தான்.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணியுடன் போட்டியிட உள்ளதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இந்நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்படவுள்ள நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-
அதிமுக- பாஜக கூட்டணி மக்களின் விருப்பம். மக்கள் யாரை ஏற்கிறார்கள் என்பது தேர்தலில் தெரியும், திமுக தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.
திமுக அரசு செய்துள்ள ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்படும். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும், பொன்முடியையும் தான்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
- புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் இந்த கூட்டணி அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளது.
அதிமுக- பாஜக கூட்டணி மூலம் வளம், வளர்ச்சி, வாய்ப்புக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கைகோர்க்கும் என்ற ஒரு முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிடும் பெருமை எனக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கும் கிடைத்தது.
திமுகவின் பின்னடைவு தீய ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை விடுவிப்பதற்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்வதற்கும், உள்ளடக்கிய வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வாய்ப்புகளின் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் இந்த கூட்டணி அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளது.
எனது இல்லத்தில் நடத்தப்பட்ட இரவு உணவு விருந்தை தனது முன்னிலையில் கவுரவித்ததற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
ஒன்றிணைந்து, பிரகாசமான, வலுவான மற்றும் துடிப்பான தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதியான தீர்மானத்துடன் நாம் முன்னேறிச் செல்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அண்ணா, ஜெயலலிதா இழிவுபடுத்தியவரை அழைத்து எடப்பாடி பழனிசாமி விருந்து கொடுத்துள்ளார்.
- மத்திய பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணிய வைக்கிறது.
தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் என்டிஏ கூட்டணி அமைத்து மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று அறிவித்தார்.
இந்நிலையில், அதிமுக- பாஜக குறித்து திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்தது அதிமுகவுக்கு செய்துள்ள் மிகப்பெரிய துரோகம். அதிமுக மட்டுமல்ல தமிழ்நாடு மக்களுக்கும் இபிஎஸ் துரோகம் இழைத்துள்ளார்.
அதிமுக- பாஜக இடையே கள்ளக் கூட்டணி இருந்தது என்பது உண்மையாகிவிட்டது. வக்பு மசோதாவை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு அதை நிறைவேற்றியவர்களுடன் இபிஎஸ் கூட்டணி வைத்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம் சிறுபான்மையினருக்கு எதிரானவர் இபிஎஸ் என்பது உறுதியாகியுள்ளது. அண்ணா, ஜெயலலிதா இழிவுபடுத்தியவரை அழைத்து எடப்பாடி பழனிசாமி விருந்து கொடுத்துள்ளார்.
மத்திய பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணிய வைக்கிறது. அதிமுக தலைமையில் கூட்டணி என்பது உண்மையில் கண்துடைப்பு. கூட்டணிக்கு தலைமை என கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பில் இபிஎஸ்க்கு பேசக் கூட அனுமதி இல்லை.
அமித் ஷா கூட்டணி பற்றி அறிவிக்க எடப்பாடி பழனிசாமி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்தான் கூட்டணி அறிவிப்பார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி மவுனம் காத்தது ஏன்?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
- தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு.
சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, அமித் ஷா உடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மேடையில் இருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமித் ஷா அறிவித்தார்.
அதிமுக- பாஜக கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அதிமுக - பாஜக கூட்டணிதான் அமையும் என்பது ஏற்கனவே எல்லோரும் யூகித்த ஒன்றுதான். அது இன்று நிறைவேறி இருக்கிறது.
விஜய் போன்ற புதிய அரசியல் கட்சி மற்றும் மற்ற அமைப்புகளுடன் இணைந்து அதிமுக கூட்டணி அமைக்கக் கூடாது என்பதில் பாஜக, ஆர்எஸ்எஸ் மிக கவனமாக இருந்தது.
இன்று ஒரு அழுத்தம், நெருக்கடியின் அடிப்படையில்தான் அதிமுக - பாஜகவுடன் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்சினையை திமுக கையில் எடுத்துள்ளது.
- மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே நீட் தேர்வு விவகாரத்தை திமுக பேசுகிறது.
திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், செய்தியாளர்கள் சந்திப்பின்போது திமுக மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்சினையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே நீட் தேர்வு விவகாரத்தை திமுக பேசுகிறது.
திமுக ரூ.39 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. ரூ.39,000 கோடி டாஸ்மாக் ஊழல் உள்ளிட்டவற்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி பதில் சொல்ல வேண்டும்.
இலவச வேட்டி வழங்குவதிலும் ஊழல், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலும் ஊழல் செய்துள்ளது. மணல் ஊழல், எரிசக்தி ஊழல் என பல்வேறு ஊழல்களை திமுக செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.