என் மலர்
நீங்கள் தேடியது "வசுந்தரா"
- பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தனது ஆட்சி கவிழாமல் தப்பியது என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார்.
- அசோக் கெலாட் காங்கிரசை அவமானப்படுத்துகிறார். பா.ஜனதாவை பாராட்டுகிறார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கும், மற்றொரு காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தனது ஆட்சி கவிழாமல் தப்பியது என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார்.
இதற்கு சச்சின் பைலட் இன்று பதிலடி கொடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி (அசோக் கெலாட்) பேச்சை கேட்டதும் அவரது தலைவர் சோனியா காந்தி அல்ல என்றும், வசுந்தரா ராஜே தான் தலைவர் என்றும் நினைக்கிறேன். அசோக் கெலாட் காங்கிரசை அவமானப்படுத்துகிறார். பா.ஜனதாவை பாராட்டுகிறார்.
இவ்வாறு சச்சின் பைலட் கூறியுள்ளார்.
- சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் வசுந்தரா நடிப்பில் தென்மேற்கு பருவகாற்று திரைப்படம் வெளியானது
- அடுத்ததாக சுனில் இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
2010 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் வசுந்தரா இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தென்மேற்கு பருவக்காற்று. இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வசுந்தரா வென்றார்.
இதைத் தொடர்ந்து போராளி, துணிக துணிக,தலைக்கூத்தல், கண்ணை நம்பாதே போன்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார், கடைசியாக சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக சுனில் இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் வசுந்தரா நடிகை அவதாரத்தில் இருந்து எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார். தற்பொழுது தி அக்கியூஸ்ட் என்ற கிரைம் நாவலை எழுதியுள்ளார். அடுக்குமாடியில் நடந்த மர்மமான கொலையை பற்றி மையமாக வைத்து இந்த கிரைம் நாவல் எழுதப்பட்டுள்ளது.
வசுந்தரா எழுதிய (The Accused) நாவலை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.