என் மலர்
நீங்கள் தேடியது "நிகில் குமாரசாமி"
- தனது மகனுக்காக இந்த தொகுதியை அனிதா குமாரசாமி விட்டு கொடுத்திருந்தார்
- 10,715 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
பெங்களூரு
ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமார சாமியின் மகன் நிகில் குமாரசாமி. இவர் கன்னட திரையுலகின் இளம் நடிகராக உள்ளார். இவர் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கோட்டையான கருதப்படும் ராமநகர் தொகுதியில் நிகில் குமாரசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இக்பால் ஹுசைனும், பா.ஜனதா சார்பில் கவுதம் மரிலிங்கே கவுடாவும் போட்டியிட்டனர்.
இதில் தொடக்க முதலே நிகில் குமாரசாமிக்கும், இக்பால் ஹுசைனுக்கும் இடையே போட்டி நிலவியது. இருப்பினும் இக்பால் ஹுசைன் ஒவ்வொரு சுற்று முடிவிலும் முன்னிலை பெற்று வந்தார்.
மொத்தம் 20 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடந்த நிலையில், 12, 13, 14 சுற்றுக்களில் காங்கிரஸ் வேட்பாளரை விட நிகில் கூடுதல் வாக்குகளை பெற்றார். இருப்பினும் முடிவில் 10 ஆயிரத்து 715 ஓட்டுகள் வித்தியாசத்தில் நிகில் குமாரசாமி தோல்வி அடைந்தார்.
ஏற்கனவே நிகில் குமாரசாமி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதாவிடம் தோல்வி அடைந்திருந்தார். இந்த நிலையில், சட்டசபை தேர்தலிலும் நிகில் குமாரசாமி தோல்வியை சந்தித்து இருப்பது அக்கட்சி தலைவர்களான தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராமநகர் மற்றும் சென்னப்பட்டணா தொகுதிகளில் குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. இதில் குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
தற்போது தனது மகனுக்காக இந்த தொகுதியை அனிதா குமாரசாமி விட்டு கொடுத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இந்த தொகுதி 2004-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஜனதாதளம் (எஸ்) கட்சி தொடர்ச்சியாக பெற்ற வெற்றிக்கு காங்கிரஸ் இந்த முறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ராமநகர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்:-
இக்பால் ஹுசைன் (காங்.) - 87,690
நிகில் குமாரசாமி (ஜனதாதளம்(எஸ்))-76,975
கவுதம் மரிலிங்கேகவுடா (பா.ஜனதா)- 12,912
நோட்டா- 880
- குமாரசாமி மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை பார்த்து வியந்தேன்.
- நான் தேர்தலில் தோற்றாலும், உங்களுடன் எப்போதும் இருப்பேன்.
ராமநகர் :
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) மூத்த தலைவர் குமாரசாமி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் சென்னப்பட்டணாவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் குமாரசாமி, நிகில் குமாரசாமி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் நிகில் குமாரசாமி பேசியதாவது:-
என் தந்தை உங்களை நம்பி போட்டியிட்டார். அவரை நீங்கள் வெற்றி பெற வைத்துள்ளீர்கள். குமாரசாமி மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை பார்த்து வியந்தேன். ராமநகர் மாவட்டத்திலேயே இங்கு தான் அதிக விசுவாசிகள் உள்ளனர். நான் தேர்தலில் தோற்றாலும், உங்களுடன் எப்போதும் இருப்பேன். எங்களுக்கு தோல்வி புதிதல்ல. குமாரசாமி கடந்த 2004-ம் ஆண்டு முதல் ராமநகர் தொகுதியில் வெற்றி பெற்று வளர்ச்சி பணிகளை செய்து வந்தார்.
ஆனால் இந்த முறை மக்கள் வேறு முடிவை எடுத்துவிட்டனர். இதனால் நான் தோல்வி அடைந்துள்ளேன். மண்டியா நாடாளுமன்ற தேர்தலிலும் இப்படி தான் நான் தோற்கடிக்கப்பட்டேன். ராமநகர் தொகுதியில் ரூ.3 ஆயிரம் பரிசுக்கூப்பன்களை மக்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் கொடுத்து என்னை தோற்கடித்தார். வருங்காலத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- சன்னப்பட்டினம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
- மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சன்னப்பட்டினம் தொகுதி எம்..எல்.ஏ.வாக இருந்த மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மந்திரியானார்.
இதையடுத்து சன்னப்பட்டினம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே இந்த தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்த தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகளும், பெங்களூரு ஊரக தொகுதி எம்.பி. டாக்டர் சி.என். மஞ்சுநாத்தின் மனைவியுமான அனசுயா போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் அவர் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்தார். மேலும் பிரசாரத்தின் போது அவர் வகுத்த வியூகம் ஆகியவை வெற்றிக்கு கை கொடுத்தது. இதையடுத்து அனசுயா வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.
- வேட்பாளர் நிகில் குமாரசாமி பிரசாரத்தின் போது கண்ணீர் விட்டு அழுதார்.
- 2 தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியடைந்த நான் என்ன தவறு செய்தேன்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. மனுத்தாக்கல் கடந்த 25-ந் தேதி நிறைவடைந்தது.
இதில் சென்னபட்டணாவில் ஆளும் காங்கிரஸ் சார்பில் யோகேஷ்வர், பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் நிகில் குமாரசாமி, சிக்காவியில் பா.ஜனதா சார்பில் பரத் பொம்மை, காங்கிரஸ் சார்பில் முகமது யாசிர் பதான், சண்டூரில் காங்கிரஸ் சார்பில் அன்னபூர்ணா துகாராம், பா.ஜனதா சார்பில் பங்காரு ஹனுமந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க பிரதான கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா, ஜே.டி.எஸ். ஆகிய 3 அரசியல் கட்சிகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன.
குறிப்பாக ஆளும் கட்சியான காங்கிரஸின் 3 தொகுதிகளில் தேர்தலில் வெற்றி பெறும் பொறுப்பு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் படுதோல்வி அடைந்தால் அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என, காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
சன்னபட்டனா தாலுகா கண்ணமங்களா கிராமத்தில் நேற்று பிரசாரம் செய்த முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரணும், முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியின் மகனுமான வேட்பாளர் நிகில் குமாரசாமி தனது பேச்சின் போது கண்ணீர் விட்டு அழுதார்.
2 தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியடைந்த நான் என்ன தவறு செய்தேன்? என தெரியவில்லை என கண்ணீர் விட்டு அழுதார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.