என் மலர்
நீங்கள் தேடியது "விபூதி"
- சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது.
- அம்பாள் சந்நிதிகளில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம்.
மூலவர் - சங்கரலிங்கம்
அம்மன் - கோமதி அம்மன்
தல விருட்சம் - புன்னை
தீர்த்தம் - நாகசுனை தீர்த்தம்
ஊர் - சங்கரன்கோவில்
மாவட்டம் - திருநெல்வேலி
அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க அம்பாள் பார்வதி, "கோமதி" என்னும் பெயரில் பூலோகம் வந்து தவமிருந்த இடமே சங்கரன்கோவில். சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது.
தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு காட்ட, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். அவளுடன் தேவர்கள் பசுக்கள் வடிவில் வந்து வணங்கி வந்தனர். பசுவை ''கோ" என்பர். தவக்காலத்தில் அம்பாளின் முகம் "மதி" போல் பிரகாசித்தது. எனவே அவள் "கோமதி" எனப்பட்டாள். "ஆவுடையம்மாள்" என்றும் இவளை அழைத்தனர்.
"ஆ" என்றால் "பசு". "பசுக்களை உடையவள்" என்று பொருள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். திங்கள் கிழமைகளில் கோமதி அம்பாளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக்கிழமையில் தங்கப்பாவாடை அணிவிப்பர்.
திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் மாவிளக்கு ஏற்றுவர். அம்பாள் சந்நிதிகளில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். ஆனால், இங்கு அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ''ஆக்ஞா சக்ரம்" என்கின்றனர்.
கோவில் அமைப்பு...
சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.
திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் இலட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இச்சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும்.
மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள். சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது.
இச்சன்னதியில் ஸ்படிகலிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக, பூஜை நடக்கும். ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியேபுறப்பாடாகிறார். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இதன் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள் ஆடித்தபசு விழா, 12 நாட்கள் நடக்கும்.
அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார்.
கோவில் நடை திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் - 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் - இரவு 9 மணி வரை.
- பழநி மலையில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது.
- முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம்.
பழநி: பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநி மலையில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.
திருச்செந்ததூர் : கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.
திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது
சுவாமிமலை: தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை
திருத்தணி: முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.
பழமுதிர்ச்சோலை: நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.
- இளநீர் அபிஷேகம் மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.
- ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது.
மணக்குள விநாயகர் கோவிலில் எண்ணை, தயிர், பால், திரவப்பொடி, அரிசி மாவு, ம.ஞ்சள் பொடி, தேன், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தங்க நகைகள், விபூதி, கலசம், போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருள்களால் ஏற்படும் நன்மைகள் வருமாறு:-
நல்லெண்ணை:-
இது சாமிக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் உலக மக்களுக்கும் குளிர்ச்சி ஏற்படுகிறது.
மஞ்சள் தூள்:-
மங்களகரமான வாழ்க்கை தருகிறது.
அரிசி மாவு:-
நெற்பயிர்கள் அதிகமாக விளையவும் மக்கள் சுகமாக வாழவும் பயன்படுகிறது.
பஞ்சாமிர்தம்:-
இது உடல் நலம் தருகிறது.
தயிர்:-
மக்கள் சுகமாக வாழவும் பால பாக்கியம் கிடைக்கவும்செய்கிறது.
பழ வகைகள்
முக்கனி அபிஷேகம் சிறப்பினை தருகிறது.
இளநீர்:-
மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.
விபூதியும் சந்தனமும்:-
மக்களுக்கு அருள் தருகிறது.
கலசாபிஷேகம்:-
அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கிறது.
மணக்குள விநாயகருக்கு அருகம் புல் மாலை, துளசி, தாமரை பூ போன்றவைகளும் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
திருவிழாக்கள்
மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டையட்டி விநாயகருக்கு காலையில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
மூலவருக்கு செய்யும் போது உற்சவ மூர்த்திக்கும் எண்ணை, பால் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. உற்சவ மூர்த்தி மாலையில் வீதி உலா வருகிறார்.
ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. அப்போது விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறுகின்றது.
தீபாவளி மற்றும் பொங்கல் நேரங்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சாமி வீதி உலா நடைபெறுகிறது.
- வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
- விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
பிள்ளையார் உருவ பலன்கள்
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட, சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட, நல்ல பதவி, அரசு வேலை கிடைக்கும்.
குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.
புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்
வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்
உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்.
வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்.
விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்.
கல் விநாயகர்- வெற்றி தருவார்.
யானைத்தலை விளக்கம்
தலை என்பது உள் அவயங்களான மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளைத் தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு.
அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை.
யானைத்தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வுகிட்டும்.
- கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
- பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி,
விநாயகரின் வாகனங்கள்
விநாயகர் மூஷிக வாகனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அவர் மூஞ்சுறுவைத் தவிர மயில், சிங்கம், ரிஷபம், யானை என்ற வாகனங்களிலும் பவனி வருவார் என்பது அனைவருக்கும் தெரியாத ஒன்றாகும்.
கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இன்றும் ஹேரம்ப கணபதி சிம்ம வாகனத்தில்தான் வீற்றிருப்பார்.
திரேதா யுகத்தில் முருகனுக்கு உதவுவதற்காக மயில் வாகனத்தில் வந்தார்.
ஆண் குழந்தை தரும் விநாயகர்
திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர்.
அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்ற சொல்லில் உள்ள "க" என்னும் எழுத்து ஞானத்தையும், "ண" என்னும் எழுத்து ஜீவன்களின் மோட்சத்தையும், "பதி" என்னும் சொல் தலைவன் என்பதையும் குறிக்கிறது.
பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி, ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் அவரே தலைவன் என்பதால்தான் அவர் கணபதி என்றழைக்கப்படுகிறார்.
மேலும் கணபதி என்னும் சொல் சிவபெருமானின் கணங்களுக்கு அதிபதி என்பதையும் குறிக்கும்.
விநாயகரின் அன்பு வேண்டுமா?
1. விநாயகர் அகவல்
2. விநாயகர் கவசம்
3. விநாயகர் சகஸ்ரநாமம்
4. காரிய சித்தி மாலை
5. விநாயகர் புராணம்
ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகனை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும்.
- மாதுளை இலை - நல்ல புகழை அடையலாம்
- மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.
கணபதி அர்ச்சனை
விநாயக புராணத்தில் கணபதிக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.
மருவு இலை- துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்
எருக்க இலை- குழந்தைப் பேறு
அரச இலை- எதிரிகள் அழிவார்கள்
அகத்தி இலை- துயரங்கள் நீங்கும்
அரளி இலை- அனைவரும் அன்போடு இருப்பார்கள்.
வில்வ இலை- இன்பங்கள் பெருகும்
வெள்ளெருக்கு- சகலமும் கிடைக்கும்
மாதுளை இலை- நல்ல புகழை அடையலாம்
கண்டங்கத்திரி இலை- லட்சுமி கடாட்சம்
கொழுக்கட்டை நைவேத்தியம்
தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் மோதகம் என்றழைக்கப்படும் கொழுக்கட்டை கணபதிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம் ஆகும்.
கொழுக்கட்டையின் தத்துவம் என்ன வென்று அறிவீர்களா?
மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம், நமக்குள் இருக்கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது.
மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.
முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டையைப் படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா?
வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.
பிள்ளையார் செய்வோம்
சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.
விநாயகருக்கு உகந்தவை
தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மாவிலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.
விநாயகரின் அஷ்ட அவதாரங்கள்
1.வக்ரதுண்டர்
2. மஹோத்ரதர்
3. கஜானனர்
4.லம்போதரர்
5. விகடர்
6. விக்னராஜர்
7. தூம்ரவர்ணர்
8. சூர்ப்பகர்ணர்
என்று எட்டு விதமான அவதாரங்களை விநாயகப் பெருமான் எடுத்ததாக விநாயக புராணம் கூறுகின்றது. அவர் எதற்காக எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார் என்றால், மனிதர்களிடையே காணப்படும் தீய குணங்கள் எட்டு (காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம், மமதை, மோகம், அகந்தை)
அந்த எட்டு குணங்களையும் நீக்கி நமக்கு ஞானமளிப்பதற்காகவே அவர் எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார்.
அந்த எட்டுவிதமான அவதாரங்களையும் நினைவிற்குக் கொண்டு வந்து வணங்க விநாயக மந்திரம் துணைபுரிகிறது.
இந்த மந்திரத்தை தினசரி பாராயணம் செய்பவர்கள் அனைத்து விதமான சந்தோஷங்களையும் அடைவார்கள்.
- வன்னி இலைக்கு ஸ்ரீசுமிபத்ரம் என்றும் பெபயர்.
- உறவினர்களுடன் நிவேதனம் செய்த பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.
நாமம் சொல்லி வழிபடுங்கள்!
ஆவணி மாதம் சுக்ல பட்சம் சதுர்த்தி திதி தினமே விநாயக சதுர்த்தி தினமாகும்.
அன்று உங்கள் வீட்டின் வடக்குப் பகுதியில் ஒரு மண்டபம் செய்து நெல் அல்லது பச்சரிசி பரப்பி அதில் அஷ்ட (எட்டு) தளத்துடன் கூடிய தாமரையை வரைந்து, அதன் மேல் பிள்ளையாரை வைத்து அருகம்புல், சந்தனம் ஆகியவற்றால் பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும்.
குறிப்பாக இருபத்தோரு அருகம்புல்லை நல்ல வாசனையுள்ள சந்தனத்தில் நனைத்துக் கொண்டு கீழ்க்கண்ட பத்து நாமங்களை சொல்ல வேண்டும்.
1. கணாதிபாய நம, 2. உமாபுத்ரா நம, 3. அக நாசநாய நம, 4.விநாயகாய நம, 5. ஈசபுத்ராய நம, 6. ஸர்வஸித்திதாய நம, 7. இபவக்த்ராய நம, 8. ஏகதந்தாய நம, 9. மூஷிக வாஹனாய நம, 10. குமார குரவே நம
என்று பத்து நாமங்கள் சொல்லி இரண்டு அருகம்புல்லாலும் கடைசியில் மேற்கூறிய பத்து நாமங்களையும் ஒரு முறை சொல்லி ஒரு அரும்கம்புல்லாலும் கணபதிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
தூப தீபம் காண்பித்து நெய்யில் செய்த கொழக்கட்டை (21), மாவுப் பலகாரங்கள், தேங்காய் (21), வாழைப்பழம் (21), நாவல் பழம் (21), விளாம்பழம் (21), கொய்யா பழம் (21), கரும்புத்துண்டு (21), வெள்ளரிக்காய் (21), அப்பம் (21) இட்லி (21) முதலானவற்றை நிவேதனம் செய்தல் வேண்டும்.
பூஜையை முடித்த பிறகு திருமணம் ஆகாத 21 வயது பையனுக்கு தட்சணையுடன் மோதகம் தந்து பெரியோர்களிடம் ஆசி பெற செய்ய வேண்டும். உறவினர்களுடன் நிவேதனம் செய்த பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.
மறுநாள் காலை புனர்பூஜை செய்து விநாயகரை தண்ணீரில் கரைக்க வேண்டும். இவ்வாறு சித்தி விநாயக விரதத்தை செய்பவர்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் இடையூறு ஏற்படாது.
வளம் தரும் வன்னி இலை
வன்னியின் இலையைக் கொண்டு பக்தியுடன் ஈஸ்வரார்ப்பணம் செய்யும்போது எப்படி தீயில் சம்பந்தப்பட்ட பொருள் சுத்தம் அடைகிறதோ, அதுபோல மனிதனும் மனமும் புத்தியும் சுத்தம் அடைந்து தெய்வீக ஞானம் அடைந்தவனாகிறான்.
இதன் காரணமாகவேதான் வன்னி பத்ரத்தை தனக்கு உகந்த பத்ரமாக வைத்துக் கொண்டு வன்னி மரத்தடியிலும் கணேசர் எழுந்தருள்கிறார்.
வன்னி இலைக்கு ஸ்ரீசுமிபத்ரம் என்றும் பெபயர். விநாயகர் பூசையில் இருப்தொரு (நாமாவளியால்) அருகம்புல்லால் அர்ச்சிக்கப்படுவதுபோல் இருப்பதொரு பத்ர(இலை)ங்களால் அர்ச்சிக்கப்பட வேண்டும். அதற்கு "ஏக விம்சதி பாத்திர பூசை" என பெயர்.
அதில் மாசிப்பச்சை, கண்டங்கத்திரி, வில்வதளம், அருகம்புல், ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, அரளி, விஷ்ணு கிராந்தி, நெல்லி, மரிக்கொழுந்து, நொச்சி, ஜாதி எவன்னெருக்கு, கரிசிலாங்கண்ணி, வெண்மருதை, கிளுவை, நாகை என்ற பத்ரங்கள் கூறப்படுகிறது.
வன்னி இலையைக் கொண்டு வழிபட்டு சாம்பன் என்ற மன்னனும் அவன் மந்திரியும் "பேறு" பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.
நாமும் வன்னி இலைகளால் விநாயகப் பெருமானை பூஜித்து வணங்கி வளம் பெறுவோம்.
- இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவை செய்யப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை
முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான்.
அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.
எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.
விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்.
அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.
பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.
எனவே அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பபாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்
விநாயகர் சதுர்த்தி விரதம்
விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி, புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த நான்காவது நாள் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.
அன்று விடியற்காலையில் எழுந்து வீட்டை நன்றாக பெருக்கி, மெழுகி சுத்தம் செய்துவிட்டு வீட்டு வாசலில் மாவிலை, தோரணங்களை கட்ட வேண்டும்.
வீட்டின் வாசலுக்கு இருபுறமும் வாழைமரக் கன்றையும் கட்டி வைக்கலாம்.
பூசை அறையைக் கழுவி, மொழுகி, கோலம்போட்டு, அதன் மையப்பகுதியில் ஒரு பலகை வைத்து மேலும் ஒரு கோலம் போட்டு தலைவாழை இலை விரித்து பச்சரிசையைப் பரப்பி வைக்க வேண்டும்.
அதில் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு "ஓம்" என்று எழுதி மண்பிள்ளையாரை வைக்க வேண்டும்.
அதற்கு அறுகம்புல், எருக்கம்பூ, விபூதி, சந்தனம் மலர்களால் அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், தேங்காய், வெல்லம் கலந்த மாவு உருண்டை, விளாம்பழம், அப்பம், சுண்டல், அவல், பொரி, கடலை, எள்ளுருண்டை போன்ற நிவேதனப் பொருள்களை வைத்து தூபமிட்டு சாம்பிராணி புகை காட்டி சூடம் ஏற்றி வழிபட வேண்டும்.
அப்பொழுது விநாயகருக்குரிய அகவல், கவசம், சகஸ்ரநாமம், காரிய சித்திமாலை, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் ஆகியவற்றை பாடுவது நற்பலன்களை தரும்.
ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எல்லா விநாயகர் கோவிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும்.
விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவைகள் செய்யப்படுகின்றன. இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு. அவை மோதகம், அவல், நெய், பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத் தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இதை தவிர அறுகம்புல், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம் இவைகளையும் ஹோம நிவேதனமாக செய்ய வேண்டும்.
முதலில் தைலக்காப்பு, பிறகு மாகாப்பு (அரிசி மாவு) பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், பழ வகைகள், தயிர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் அபிஷேகங்கள் செய்யப்படும். மாலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு, பூவலங்காரம் நடைபெறும். துளசி இலைகள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜைக்கு உகந்தது.