search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சன்ஸ்கிரீன்"

    • தோல் பராமரிப்பு விஷயத்தில் முன்னெச்சரிக்கை தேவை.
    • தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

    இப்போது அழகாக இருப்பது ஆண் பெண் இருபாலரும் பின்பற்றும் டிரெண்ட் ஆகிவிட்டது. எனவே ஆண்களும் தங்கள் சருமத்தின் அழகில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. ஆண்களுக்கான சில அழகு குறிப்புகள் இங்கே...

    சுற்றுச்சூழலில் உள்ள தூசி, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, நாள்பட்ட மன அழுத்தம் ஆகியவை நமது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நமது சருமத்தையும் பாதிக்கிறது.

    பெண்கள் தங்கள் சரும அழகில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை. எப்பொழுதும் ஏதாவதொரு வேலையில் பிசியாக இருக்கும் இவர்கள் தங்கள் அழகில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

    ஆனால் சிலர் இப்போதெல்லாம் ஆண்களும் தங்கள் அழகு மற்றும் உடற்தகுதியில் கவனம் செலுத்துகிறார்கள்.

    ஒரு வேளை, தாங்கள் அழகாகத் தெரிந்தால் மற்றவர்களை கவர முடியும் என்ற எண்ணத்தினாலோ அல்லது தங்கள் தன்னம்பிக்கையின் காரணமாகவோ, முகத்தில் பொலிவு மற்றும் நல்ல உடலமைப்புக்காக ஏங்குகிறார்கள்.

    சில சமயங்களில், பெண்களை விட ஆண்கள் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் மற்றும் அழகு நிலையங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

    ஆனால் ஆண்கள் தங்கள் தோல் பராமரிப்பு விஷயத்தில் சில சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனெனில் ஆண்கள் தான் அதிகமாக வெளியே செல்வார்கள்.

    அவர்களின் தோல் ஏற்கனவே கடினமாக இருக்கும். அப்படி இருக்கும் போது முகம், தாடி மீசையில் தூசி போன்றவற்றால் தோல் எரிச்சல் ஏற்படலாம். இதை தவிர்க்க தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.


    ஆண்களுக்கான சில அழகுக் குறிப்புகள்:

    நீரேற்றமாக இருங்கள்:

    சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க உடலில் எப்போதும் நீர்ச்சத்து இருக்க வேண்டும். உடல் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அர்த்தம். நீரிழப்பைத் தடுக்க நாள் முழுவதும் போதுமான நீர் உட்கொள்ளல் அவசியம்.

    எண்ணெய் பசை சருமத்தை போக்க சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கும்.


    சன்ஸ்கிரீன்:

    வெளியில் செல்லும் போது உங்கள் சருமத்தில் சன் ஸ்க்ரீன் லோஷனைப் பயன்படுத்துவது அவசியம். இந்த சன் ஸ்கிரீன் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சருமத்திற்கு நல்லது.

    இது தீங்கு விளைவிக்கும் மாசுக்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், சூரிய ஒளியால் சருமம் கருமையாவதையும் தடுக்கிறது. வெளியில் செல்லும்போது தூசி மற்றும் அழுக்குத் துகள்கள் காற்றில் வந்து தோலில் படர்ந்து சருமத் துளைகளை அடைத்துவிடும்.

    அவை சருமத்தில் பருக்கள், வெடிப்புகள் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் சன் ஸ்க்ரீன் தடவினால் இந்தப் பிரச்னைகள் வராது. ஆனால் சருமத்திற்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.


    சமச்சீர் உணவு:

    சருமத்தில் ஏற்படும் மாசுபாட்டின் விளைவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி அழகுசாதனப் பொருட்கள் அல்ல. எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்க மிக முக்கியமான விதி சமச்சீரான உணவை உண்ண வேண்டும்.

    உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்கும் உணவைத் தேர்ந்தெடுக்கவும். இது உடலை உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியமாக வைக்கிறது.

    புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவற்றை சாப்பிட்டால் சருமம் பளபளக்கும்.

    சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளைத் தடுக்க, காரமான உணவுகள், புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கங்களைத் தவிர்க்கவும்.


    இப்போது அழகாக இருப்பது ஆண் பெண் இருபாலரும் பின்பற்றும் டிரெண்ட். எனவே ஆண்களும் தங்கள் சருமத்தின் அழகில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. ஆண்களுக்கான சந்தையில் பல பிராண்டுகளின் தயாரிப்புகள் உள்ளன.

    ஆண்களுக்கான கரி முகமூடிகள் மற்றும் திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் தோல் கண்டிஷனர்கள் இதில் அடங்கும். இவற்றை காலையில் தடவினால், நாள் முழுவதும் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    யோகா, தியானம், ஜிம் போன்ற தினசரி பயிற்சிகள் உங்களை உடல் ரீதியாக மட்டுமின்றி மனதளவிலும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

    • சன்ஸ்கிரீன்களை வாங்கும் போது காலாவதி தேதியை பார்க்க மறந்துவிடாதீர்கள்.
    • சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு தான் நீங்க வெளியில போகணும்.

    எப்போதும் புதிய சன்ஸ்கிரீன் லோஷன்களை உபயோகிப்பதே நல்லது. ஏற்கெனவே வாங்கி, சென்ற ஆண்டு பயன்படுத்தி மிச்சமான சன்ஸ்கிரீன் போடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, மருத்துவர் ஆலோசனைப்படி, நம் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.

    * நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களை வாங்கும் போது காலாவதி தேதியை பார்க்க மறந்துவிடாதீர்கள்.

    * சன்ஸ்கிரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்' (SPF – Sun Protection Factor) 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்தளவு வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்பதற்கு அடையாளம். `எஸ்பிஎஃப்' 15 உள்ள சன்ஸ்கிரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பளிக்கும். நம்ம ஊரு வெயிலுக்கு குறைந்தது 30 spf யூஸ் பண்ணனும்.

    * முகத்துக்கு மட்டும் இல்லைங்க வெயில்படும் எல்லா இடங்களையும்(கழுத்து, கை, கால்) சன்ஸ்கிரீன் அப்ளை செய்யவும்.

    * சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு தான் நீங்க வெளியில போகணும்.

    * எவ்வளவு தான் நீங்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலைவதைத் தவிர்க்க பாருங்கள். தொடர்ந்து வெயிலில் இருந்தால், மூன்று மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவி மீண்டும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

    தரமான பிராண்டட் சன்ஸ்கிரீன்களையே பயன்படுத்தவும். தற்போது, ஆர்கானிக் புராடக்டுகளிலும் சன்ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீன்களை எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம் எனப் பரிசோதித்து வாங்குங்கள்.

    • எக்ஸ்ஃபோலியேட் செய்துகொள்வதுதான் முதல் ஸ்டெப்.
    • சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம்.

    உங்கள் அழகான சருமத்தை மேலும் பொலிவாகக் காட்டிட சருமத்தில் இருக்கும் தேவை இல்லாத முடிகளை நீக்குதல் மிகவும் முக்கியமானது. முகம், கை, கால் மற்றும் மென்மையான பாகங்களில் உள்ள தேவை இல்லாத முடிகளை நீக்குவதற்குப் பல வழிகளை பின்பற்றி வருகிறார்கள். அவற்றில், பலர் பெரிதும் ஆர்வம் காட்டும் ஒரு வழி - வேக்சிங். இதை எளிமையாக வீட்டிலேயே செய்துகொள்ளலாம். வேக்சிங்கில் ஹாட் வேக்ஸ் மற்றும் கோல்டு வேக்ஸ் என இருவகைகள் உள்ளன.

    எக்ஸ்ஃபோலியேட்

    வேக்சிங் செய்வதற்கு முன் எக்ஸ்ஃபோலியேட் செய்துகொள்வதுதான் முதல் ஸ்டெப். வேக்சிங் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பு சருமத்தின் மேல் இருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். அதற்கு சர்க்கரை, காபி ஸ்கிரப்கள், ஆல்ஃபா ஹைட்ராக்சி அமிலங்கள், பீட்டா ஹைட்ராக்சி அமிலங்கள், சாலிசிலிக் அமிலங்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மாஸ்க், ஓட்மீல் ஸ்கிரப் போன்றவற்றைப் பயன்படுத்தி எளிதாக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம். இதன் மூலம், சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்புடனும் காணப்படும்.

    மாய்ஸ்ச்சரைஸர்

    நமது உடலில் ஈரப்பதம் குறையும் போது, சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கு, இயற்கை உட்பொருள்கள் நிறைந்திருக்கும் மாய்ஸ்ச்சரைஸரை உபயோகப்படுத்தும்போது நம் உடலில் ஈரப்பதம் மேலோங்கி இருக்கும். மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவதும் சருமத்தின் தன்மைகளைப் பொறுத்து மாறுபடும். எண்ணெய் வழியும் சருமம் உடையவர்கள் லைட் மாய்ஸ்ச்சரைசர், நார்மல் சருமம் உடையவர்கள் மீடியம் மாய்ஸ்ச்சரைசர் மற்றும் வறண்ட சருமம் உடையவர்கள் ஹெவி மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்தலாம்.

    ஒவ்வொரு நாளும் அலுவலகம் கிளம்பும்போது உங்களது வாட்ச், போன் போன்ற அடிப்படையான விஷயங்களை மறக்காமல் எடுத்துக்கொள்வது போல உங்கள் சருமத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். இது உங்கள் தோல் ஆரோக்கியத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுக்காக்கிறது. மேலும், வெளிப்புற சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தோலில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

    மேற்கூறிய வழிகளைப் பின்பற்றி, சருமத்தை ஆரோக்கியமாகவும், வேக்சிங் செய்து பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.

    • டேன் இருந்தால் சருமமே பொலிவிழந்து காணப்படும்.
    • தயிர் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

    நாம் அதிகமாக வெளியில் சூரிய ஒளியில் பயணிக்கும்போது நமது முகம், கை மற்றும் கால்களில் டேன் ஏற்படுவது சகஜம். பொதுவாக வெளியில் வேலை செய்பவர்களுக்கு இது சிரமமானதாக கூட இருக்கலாம். வீட்டிலேயே இந்த டானை எப்படி சரிசெய்யலாம் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

    சருமப் பராமரிப்பு என்றாலே முகத்தை ஆரோக்கியமாகவும் பளிச்செனவும் வைத்துக் கொள்வது முக்கியம். நம்முடைய முகம், கை மற்றும் கால்களின் ஒரு சில பகுதிகளில் மட்டும் சருமம் அதிக கருமையுடன் டேனாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. டேன் இருந்தால் சருமமே பொலிவிழந்து காணப்படும்.

    நம் வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தக்காளி. தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளதால் இது இயற்கையான சன் ஸ்கிரீனாக நமது சருமத்தில் செயல்படுகிறது. மேலும் வயதானது போல தோற்றத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    கடலைமாவு

    தேங்காய் எண்ணெய்

    கஸ்தூரி மஞ்சள்

    தயிர்

    தக்காளி சாறு

    எலுமிச்சை சாறு

    செய்முறை:

    ஒரு பவுலில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து இதில் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கி ஃபேஸ் பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இதை நீங்கள் குளிக்கச் செல்வதற்கு முன் இந்த கலவையை உங்கள் முகம், கழுத்து, கைகளில் தடவி குறைந்தது 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும், அதன்பிறகு மிதமான நீரில் கழுவலாம்.

    இந்த பேஸ்டை தொடர்ந்து வாரத்திற்கு 2 தடவை பயன்படுத்தி வர முகம், கழுத்து, கைகளில் உள்ள கருமை நிறம் நீங்கி பளபளப்பாகும். தயிர் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

    • கடுகு எண்ணெய்யை பலரும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
    • கடுகு எண்ணெய்யில் வைட்டமி ஈ நிறைந்துள்ளது.

    கடுகு எண்ணெய்யை பலரும் சமைய லுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இதை மேற்பூச்சாகவும் யோகிக்க முடியும் இந்த எண்ணெய்யில் கால்சியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்டுகள் சல்பர், அப்லோ டாக்சின், சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக் அலிக் பாவமிடிக் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன.

    சரும நிறம்:

    கடுகு எண்ணெய்யில் வைட்டமி ஈ நிறைந்துள்ளது. இது பிரி-ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவும். இதில், சிறந்த ஆக்சிஜனேற்றங்கள் உள்ளதால் சரும செல்களை மேம்படுத்தும். இளமையிலேயே ஏற்படும் வயதான தோற்றத்தை தடுக்கும் ஆற்றலும் இந்த எண்ணெய்க்கு உண்டு. இதைத்தொடர்ந்து முகத்தில் தடவும்போது மெல்லிய கோடுகள். சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளை குறைக்க உதவும். தோல் அமைப்பு மற்றும் நிறத்தை மேம்படுத்தும். முகத்தில் உள்ள கருந்திட்டுகள், கரும்புள்ளிகளை குறைக்க உதவுவதுடன், முகத்திற்கு இயற்கையான பளபளப்பையும் தரும்.

    சன்ஸ்கிரீன்:

    கடுகு எண்ணெய்யில் மாய்ஸ்சுரைசர் பண்புகள் உள்ளன. அவை உலர்ந்த மற்றும் வெடிப்பு ஏற்பட்ட உதடுகளை குணப்படுத்தி ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவும். இந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலங்கள். இறந்த சரும செல்களை அகற்றவும். வெயிலினால் முகம் கறுத்துப்போவதை தடுக்கவும் உதவிபுரியும். இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து, இயற்கையான சன்ஸ்கிரின்போல் செயல்பட்டு, சூரியனின் புறஜாதா கதிர்களால் உண்டாகும் சரும பாதிப்பை தடுக்கும்.

    முடி வளர்ச்சி

    தற்போது பல பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வுதான். வறட்சி, உதிர்தல் மற்றும் போலிவில்லாத கூந்தலுக்கு சுடுகு எண்ணொய் சிறந்த தீர்வாகும். கடுகு எண்ணெய்யில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து மேம்படுத்தும். இதில் உள்ள ஆஸ்டி-பாக்டீரியல் பண்புகள் ' வழுக்கை விழவது மற்றும் ஸ்கால்ப் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும். கடுகு எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தடவி வரும்போது பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

    பாத வெடிப்பு:

    பலருக்கும் வறட்சி காரணமாக கால்களில் வெடிப்பு. நகங்கள் வெடிப்பு, தோல் உரிதல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். மழை மற்றும் குளிர்காலங்களில் இதுமேலும் அதிகரிக்கும். இதை தவிர்க்க கடுகு எண்ணெய்யை பாதங்களில் பூசி வரலாம்.

    கொழுப்பைக் குறைக்கும்:

    கடுகு எண்ணெய் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்றுப்பகுதியில் கொழுப்பு தேங்கி உள்ளவர்கள். அப்பகுதியில் இந்த எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தினமும் தடவி வரலாம். இதுபோன்று மசாஜ் செய்யும்போது, உடலில் இருந்து ஒருவித சூடு வெளியேறும். இது உடலில் பல நாட்களாக தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

    • கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது.
    • சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

    வெளி இடங்களுக்கு செல்லும்போது சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து செல்களை சேதம் அடையாமல் காக்கும். கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது. வெளியே செல்லும்போது தான் அதனை பயன்படுத்த வேண்டும் என்றில்லை. வீட்டிற்குள் இருக்கும்போதும் சன்ஸ்கிரீனை சருமத்திற்கு பூசி வரலாம். அதனை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

    நீல ஒளியில் இருந்து காக்கும்:

    ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், கணினிகள் மற்றும் டி.வி.கள் போன்ற எலெக்ட்ரிக் சாதனங்களின் டிஜிட்டல் திரைகள் நீல ஒளியை வெளியிடுகின்றன. அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. நீல ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் ப்ரீ ரேடிக்கல்கள் வயதாகும் செயல்முறையை விரைவுபடுத்தும். மெலனின் உற்பத்தியையும் ஊக்குவித்து சரும புள்ளிகளை விரைவாக வயதான தோற்றத்திற்கு வித்திடும்.

    நீல ஒளியின் வீரியம் சருமத்தை எளிதில் பாதிப்புக்குள்ளாக்குவதுதான் அதற்கு காரணம். அதனை தவிர்க்க தினமும் சன்ஸ்கிரீன் அணிவது நல்லது. குறிப்பாக டிஜிட்டல் திரை சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துபவர்கள் மறக்காமல் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

    புற்றுநோயை தடுக்கும்:

    வீட்டுக்குள் இருக்கும் சமயங்களில் சூரிய கதிர்வீச்சுக்களால் தீங்கு ஏற்படாது என்று பலர் நினைக்கிறார்கள். அதனால் சன்ஸ்கிரீன் உபயோகிக்க தேவையில்லை என்று கருதுகிறார்கள். ஆனால் சூரியனால் உமிழப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுகளின் வீரியம் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.

    ஆரம்பத்தில் சருமத்திற்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும். காலப்போக்கில் செல்கள் சேதமடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. புற ஊதாக்கதிர்களால் சருமம் பாதிப்புக்குள்ளாகுவதை கவனிக்காவிட்டால் சரும புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

    சருமத்தை பாதுகாக்கும்:

    சருமத்துக்கு ஈரப்பதமூட்டும் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் சன்ஸ்கிரீன் மூலக்கூறுகள் கொண்ட அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவது சிறப்பானது. நவீன சன்ஸ்கிரீன்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் கூறுகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தியும் சருமத்தை பாதுகாக்கலாம்.

    வயது முதிர்ச்சியை தடுக்கும்:

    சருமம் விரைவில் முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தவிர்ப்பதில் சன்ஸ்கிரீனுக்கு முக்கிய பங்கு உண்டு. சன்ஸ்கிரீனிலும் எஸ்.பி.எப். 30-க்கும் அதிகமாக இருக்கும் கிரீமை பயன்படுத்துவது சருமத்திற்கு இதமளிக்கும்.

    சன்ஸ்கிரீனை அறவே தவிர்ப்பது, மற்ற சரும பொருட்களின் செயல்திறனைக் குறைப்பதுடன், சூரிய ஒளி அதிகம்படும் பகுதியில் செல்லும்போது சருமத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    ×