என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை தி நகர்"
- நவீன வசதிகளுடன் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
- திருமலை திருப்பதி கோவில் சார்பில் விரைவில் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை:
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக் குழுத் தலைவர் ஏ.ஜே.சேகர் ரெட்டி மற்றும் 4 நன்கொடையாளர்கள் குழு சார்பில் திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் புனரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.5 கோடி நன்கொடை வழங்கும் விழா தி.நகரில் இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஏ.சி. சண்முகம், ஐசரிகணேசன், காயத்ரிதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது சேகர் ரெட்டி கூறியதாவது:-
தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் 48 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட உள்ளது.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையொட்டி இக்கோவிலை மிகப் பிரமாண்டமாக புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக விரைவில் கோவிலில் பாலாலயம் செய்யப்படுகிறது.
இக்கோவில் ரூ.50 கோடி செலவில் பிரமாண்டமாக கற்கோவில் கட்டிடமாக மாற்றப்பட உள்ளது.
இதற்காக அருகில் உள்ள நிலங்கள் நன்கொடையாக வாங்கப்பட்டு வருகிறது.இக்கோவிலில் நவீன வசதிகளுடன் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
பக்தர்களிடமிருந்து நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ரூ.5 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி கோவில் சார்பில் விரைவில் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஃபால் சீலிங்கை உடைத்து உள்ளே குதித்து கொள்ளையர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.
- 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என மாம்பலம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
4வது மாடியில் உள்ள ஃபால் சீலிங்கை உடைத்து உள்ளே குதித்து கொள்ளையர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.
3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என மாம்பலம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில் 3 கொள்ளையர்களை பிடிக்க மாம்பலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தி.நகரில் பிரபல ஜவுக்கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.