என் மலர்
நீங்கள் தேடியது "துளசி மாடம்"
- கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான்.
- கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன்.
கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.
கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசி மாலை அணிந்து கொள்வான்.
வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.
- மாலையில் துளசிக்கு முன் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
- துளசி இலை விஷங்களை முறிக்கக்கூடிய தன்மை படைத்தது.
ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் கட்டாயம் இருக்க வேண்டும். துளசி செடியை வைத்து வளர்த்து வழிபட வேண்டும். குளித்து முடித்தபின் தூய நீரும், பாலும் விட்டு துளசியை வளர்க்க வேண்டும். தினமும் வலம் வந்து வழிபட வேண்டும். மாலையில் துளசிக்கு முன் விளக்கேற்றி வைக்க வேண்டும். விசேஷ நாட்களில் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
இப்படியெல்லாம் பக்தியுடன் வழிபட்டால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள். உயர்ந்த நிலையை அடைவார்கள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் தாண்டவமாடும். துளசி இலை விஷங்களை முறிக்கக்கூடிய தன்மை படைத்தது. துளசிக்காற்றுப்படும் இடத்தில் விஷ ஜந்துக்களோ, விஷக் காற்றோ இருக்காது என்பது வைத்திய சாஸ்திரம்.