என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்ச பாண்டவர்கள்"

    • தர்மத்தின் வடிவம் என்பதால் பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் விளங்குகிறது.
    • ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் 'பாஞ்சஜன்யம்' என்ற சங்கு, இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது .

    பொதுவாக நமது இறைவழிபாட்டிலேயே சங்குக்கு முக்கிய பங்கு உண்டு. தர்மத்தின் வடிவம் என்பதால் பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் விளங்குகிறது.

    தருமர் வைத்துள்ள சங்கு , 'அனந்த விஜயம்' என்றும் , அர்ஜுனர் வைத்திருக்கும் சங்கு, 'தேவதத்தம்' என்றும் , பீமசேனன் வைத்திருக்கும் சங்கு , 'மகாசங்கம்' என்றும், நகுலன் வைத்திருக்கும் சங்கு, 'சுகோஷம்' என்றும், சகாதேவன் வைத்திருக்கும் சங்கு, 'மணிபுஷ்பகம்' என்றும் அழைக்கப்படுகிறது . ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் 'பாஞ்சஜன்யம்' என்ற சங்கு, இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது .

    சங்குகளில் மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகையும், அரிய வகையான வலம்புரிச் சங்கும் தோற்றங்களால் வேறுபட்ட இன்னும் 7 வகை சங்குகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை . இந்த பதினாறு வகை சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் உயர்ந்ததும் தெய்வத்தன்மை கொண்டதும் ஆகும்.

    • அறந்தாங்கி அருகே உள்ள கிராமம்தான் எரிச்சி.
    • பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு நடத்தியிருக்கின்றனர்.

    அறந்தாங்கி அருகே உள்ள கிராமம்தான் எரிச்சி. முன்னொரு காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் அறந்தாங்கி பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அறந்தாங்கியில் வீற்றிருக்கும் வீரமாகாளியம்மன், அவர்களிடம் 'நீங்கள் தங்க வேண்டிய இடம்' என்று கையை நீட்டி ஒரு வனப்பகுதியை சுட்டி காட்டியதாகவும், அந்த வனப்பகுதி தீயினால் எரிந்ததாகவும், அந்த இடத்தில் பஞ்ச பாண்டவர்கள் தங்கி வழிபாடு நடத்தும்படி அம்மன் கூறியதாகவும், இதனால் அந்த இடத்திற்கு எரிச்சி என பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதேபோல் அதே கிராமத்தின் அருகே நற்பவளக்குடி கிராமத்தில் உள்ள கலியுக மெய்யர் அய்யனார் கோவிலில், பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு நடத்தியிருக்கின்றனர்.

    அதன் அருகே இருந்த நச்சு பொய்கையை (குளம்) சுத்தமான தண்ணீராக மகா முனிவர் காலமா மகரிஷி மாற்றிக்கொடுத்ததாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. அந்த குளம் தற்போதும் உள்ளது.

    • கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன்.
    • பங்குனி உத்திர விரதம் இருந்தால் பாவம் அகலும். பகை விலகும்.

    பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவன் அர்ஜுனன்.

    பத்துவித பெயர்களை உடையவன் அவன்.

    கூர்மையான பார்வையை உடையவன்.

    நினைத்த பொழுது, நினைத்தபடி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும்.

    அதனால் அவன் குடாகேசன் என்று அழைக்கப்பட்டான்.

    கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தார்.

    கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன்.

    எனவே அர்ஜுனன் பிறந்த தினமான பங்குனி உத்திர திருநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சிறப்பு பலன்கள்

    1. பங்குனி உத்திர விரதம் இருந்தால் பாவம் அகலும். பகை விலகும்.

    2. பங்குனி உத்திரத்தன்று வேண்டுதல்களின் பேரில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோரை பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

    3. பங்குனி உத்திரத்தன்று சுவாமி கடல், ஏரி, கடாகம் போன்ற இடங்களில் தீர்த்தம் கொடுப்பார்.

    அப்போது அதில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

    ×