search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறைவழிபாடு"

    • பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலையை சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது.
    • என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாக மாறுகிறது.

    வெற்றியை யார்தான் விரும்ப மாட்டார்கள்?

    ஆனால் வெற்றி தேவதையின் அருள் பார்வை நம் மீது பட வேண்டுமானால், என்னதான் அதிர்ஷ்டம் இருந்தாலும், உரிய வழிபாடு மிக, மிக அவசியமாகும்.

    அந்த வகையில் ஆஞ்சநேயருக்கும், வீரபத்திரருக்கும் வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    குறிப்பாக அனுமானுக்கு வெற்றிலை மாலை விசேஷமானது.

    அதன் பின்னணியில் உள்ள புராண சம்பவம் வருமாறு:

    இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் சென்றார்.

    நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீதை அசோக வனத்தில் இருப்பதை அவர் கண்டு பிடித்தார்.

    ராமர் நலமாக உள்ள விபரங்களைச் சீதையிடம் அனுமன் தெரிவித்தார்.

    பிறகு ராமர் தந்த மோதிரத்தை சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர்.

    சீதா தேவியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

    தனது துன்பத்தைப் போக்கிய ஆஞ்சநேயருக்கு, விக்ராந்தன் (பராக்ரமம் உடையவன்), சமர்த்தன் (திறமையாகச் செய்து முடிப்பவர்), ப்ராக்ஞன் (அறிவாளி), வானரோத்தமன் (வானரர்களில் சிறந்தவன்) என்று நான்கு விருதுகளை வழங்கி கவுரவித்தாள்.

    அத்துடன், பணிவுடன் வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று சீதாதேவி விரும்பினாள்.

    ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    இதனால் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து அதன் இலைகளைப் பறித்து, அதை அனுமன் மீது தூவி, மனதார ஆசீர்வதித்தாள்.

    அந்த வெற்றிலைகளை மாலையாகவும் கட்டி அனுமனுக்குப் போட்டு மகிழ்ச்சியடைந்தாள்.

    சீதா பிராட்டியார் கையால் கிடைத்த இந்த வெகுமதியை ஸ்ரீ ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

    அன்று முதல் அனுமனுக்கு வெற்றிலை மாலை போடும் வழக்கம் ஏற்பட்டது.

    பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலையை சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது.

    என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாக மாறுகிறது.

    அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும் போது வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

    ஆகவே, ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாகக் கட்டி போடும் போது, இவ்வாறே இரண்டு வெற்றிலை ஒரு பாக்கு அல்லது நான்கு வெற்றிலை மூன்று பாக்கு என்பதாக இருக்க வேண்டும்.

    மேலும் வெற்றிலையை நரம்பில்லாத முன்பகுதி வெளியில் தெரியுமாறு மடித்து, வாழை நார் போன்றவற்றைக் கொண்டு, மாலையாகத் தொடுத்துப் போடலாம்.

    இதனால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருளால் நாம் எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி உண்டாகும்.

    அது போல வீரபத்திரரின் அருளைப் பெறவும் வெற்றிலை மாலை வழிபாடே சிறந்தது.

    சென்னைக்கு அருகில் உள்ள அனுமந்தபுரத்தில் இருக்கும் வீரபத்திரர் ஆலயத்தில் வெற்றிலை மாலை வழிபாடு சிறப்பாக நடக்கிறது.

    1.         லிங்கோத்பவர்-மோட்சப்பிரதாயினி-மோட்சம் சித்திக்கும்

    2.            திரிமூர்த்தி-வம்ச விருத்தி பிரதாயினி   -குழந்தைப்பேறு கிட்டும்

    3.            கல்யாண சுந்தரர் -    சர்வ மங்களா தேவி        -           திருமணப் பேறு கிடைக்கும்

    4.            சுகாசனர்          -                    தர்மசம்வர்த்தினி         -               நியாயமான ஆசைகள் நிறைவேறும்

    5.            கங்காதரர்      -              சர்வ பாவஹரணி            -            பாவங்கள் விலகும்

    6.            நடேசர்           -                சம்பத்யோக காரணி              -   மகப்பேறு கிட்டும்

    7.            சண்டேச அனுக்ரகர்- மகாபாதக நாசினி          -            கெட்ட எண்ணம் நீங்கும்

    8.            ரிஷபாரூடர்           -     தர்மசித்திப் பிரதாயினி     -       நல்ல முயற்சிகளில் வெற்றி கிட்டும்

    9.             நீலகண்டர்              -    விஷதோஷ் நிவர்த்தினி       -      விஷ ஜந்துக்களினால் ஏற்படும் ஆபத்து நீங்கும்

    10.ஹரிஹர மூர்த்தி- தர்மார்த்தாயினி -வழக்குகளில் வெல்லலாம்

    11.ஏகபாத மூர்த்தி- மகாரோக விநாசினி -தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

    12.உமாசகாயர் -பார்யா சவுபாக்யப் பிரதாயினி -மனைவியின் உடல்நலம் சீராகும்

    13.அர்த்தநாரீஸ்வரர்- சவுபாக்ய பிரதாயினி-  தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

    14.தட்சிணாமூர்த்தி- மேதாப்ரக்ஞ பிரதாயினி- கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்

    15.சோமாதி நாயகர்- சர்வ சித்தி -காரணிசகலமும் சித்தியாகும்

    16.சோமாஸ்கந்தர்- புத்ர சவுபாக்யபிரதாயினி -குழந்தைகள் ஆரோக்கியம் நிலைக்கும்

    17.சந்திர மவுலீஸ்வரர் -தனதான்ய பிரதாயினி -தனமும் தானியமும் சேரும்

    18.வீரபத்ரர்சத்ரு -வித்வேஷ் நாசினி -எதிரி பயம் நீங்கும்

    19.காலசம்ஹாரர்- சர்வாரிஷ்ட நாசினி-  மரண பயமும், அகால மரணமும் நேராது

    20.காமாந்தகர் -ரோக விக்ன நாசினி-  தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்

    21.கஜசம்ஹாரர்- பராபிசார சமநீ -பிறர் செய்த தீவினையின் பாதிப்புகள் அகலும்

    22.திரிபுர சம்ஹாரர் -ஜன்ம ஜரா ம்ருத்யு விநாசினி -பிறவிப் பிணி தீரும், எம பயம் நேராது.

    23.பிட்சாடனர்- யோசித் பந்தவி மோஹினி-  மோகமாயை விலகும்

    24.ஜலந்தர- சம்ஹாரர்துஷ்ட விநாசினி -விரோதிகள் விலகுவர்

    25.சரப மூர்த்தி- அரிப்ரணாசினி-             மாயை, கன்மம் விலகும்

    26.பைரவர்                       -  ரஷாகரி -இறையருள் எப்போதும் காக்கும்

    அனைத்து விதமான நோய்களையும் நீக்கும் இந்த “துக்க நிவாரண அஷ்டகத்தை” கூறி, அம்பாளை வழிபட உங்கள் நோய்கள் யாவும் நீங்கிடும்.

    அனைத்து விதமான நோய்களையும் நீக்கும் இந்த "துக்க நிவாரண அஷ்டகத்தை" கூறி, அம்பாளை வழிபட உங்கள் நோய்கள் யாவும் நீங்கிடும்.

    துக்க நிவாரண அஷ்டகம்

    மங்கள ரூபிணி மதியணி சூலினி

    மன்மத பாணியளே;

    சங்கடம் நீக்கிடச் சடுதியில்

    வந்திடும்

    சங்கரி சவுந்தரியே!

    கங்கண பாணியன் கனிமுகங்

    கண்டநல்

    கற்பகக் காமினியே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    கானுறு மலரெனக் கதிர்

    ஒளி காட்டிக்

    காத்திட வந்திடுவாள்;

    தானுற தவஒளி தாரொளி மதி

    யொளி தாங்கியே வீசிடுவாள்;

    மானுறு விழியாள் மாதவர்

    மொழியாள்

    மாலைகள் சூடிடுவாள்;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    சங்கரி சவுந்தரி சதுர்முகன்

    போற்றிடச்

    சபையினில் வந்தவளே;

    பொங்கரி மாவினில் பொன்னடி

    வைத்துப்

    பொருந்திட வந்தவளே;

    எங்குலந் தழைத்தட எழில்வடிவுடனே

    எடுத்தநல் துர்க்கையளே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரண காமாட்சி!

    கொடுத்தநல் குமரியளே;

    சங்கடம் தீர்த்திட சமரது செய்தநற்

    சக்தியெனும் மாயே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    எண்ணிய படி நீ அருளிட வருவாய்

    எங்குல தேவியளே;

    பண்ணிய செயலின்

    பலனது நலமாய்ப்

    பல்கிட அருளிடுவாய்;

    கண்ணொளியதனால்

    கருணையைக் காட்டிக்

    கவலைகள் தீர்ப்பவளே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    தணதண தந்தன தவிலொலி

    முழங்கிட

    தண்மணி நீ வருவாய்;

    கணகண கங்கண

    கதிர்ஒளி வீசிடக்

    கண்மணி நீ வருவாய்;

    பணபண பம்பண பறையொலி

    கூவிடப்

    பண்மணி நீ வருவாய்;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    பஞ்சமி பைரவி பர்வத புத்திரி

    பஞ்சநல் பாணியளே;

    • இறைவனை பூஜிக்க, பூஜிக்க மனம் பக்குவத்துக்கு வந்து விடும்.
    • எந்த சலனமும் உங்கள் மன அமைதியை சீர்குலைக்க முடியாது.
    • இது நோய்களை மிக எளிதாக விரட்டும்.

    வீட்டில் பூஜைகள் செய்வதை முதலில் நாம் ஒரு பயிற்சி மாதிரி கூட தொடங்கலாம்.

    பிறகு அதுவே பழக்கமாகி விடும். அந்த பழக்கம் நீடித்தால் அது வழக்கமாகி ஒரு புதிய மரபை ஏற்படுத்தி விடும்.

    தினசரி வாழ்க்கையில் நாம் தினமும் எப்போது சாப்பிட்டு பழகுகிறோமோ, அந்த நேரம் வந்ததும் பசி வயிற்றை கிள்ளத்தொடங்கி விடும்.

    தூங்கும் நேரம் வந்ததும் கண்கள் சொக்கத்தொடங்கி விடும்.

    அது போலவே அதிகாலையில் இறைவனுக்கு பூ போட்டு பூஜை செய்து பழகி விட்டால், அது உங்களை தினம், தினம் இறைவன் பக்கம் கொண்டு வந்து விடும்.

    இறைவனை பூஜிக்க, பூஜிக்க மனம் பக்குவத்துக்கு வந்து விடும்.

    எந்த சலனமும் உங்கள் மன அமைதியை சீர்குலைக்க முடியாது. இது நோய்களை மிக எளிதாக விரட்டும்.

    அதுமட்டுமா குடும்பத்தில் மகிழ்ச்சி, உள்ளத்தில் ஒருவித சந்தோஷம், கடவுளுடன் நெருங்கி விட்டோம் என்ற நெகிழ்ச்சி போன்ற எல்லாம் கிடைத்து விடும்.

    கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் இவையெல்லாம் கிடைக்கவே கிடைக்காது.

    ஒருநாள்..... ஒரே ஒருநாள் வீட்டில் முழுமையான பூஜையை கேட்டு தெரிந்து கொண்டு செய்து பாருங்கள்.

    இறை அனுபவத்தை உணர்வீர்கள்.

    • நோய் பயம் நீங்கவும், புத்துணர்ச்சியுடன் வாழ்வை கொண்டு செல்லவும் இறைவழிபாடு முக்கியமானது.
    • இறைவழிபாடு செய்து வந்தால்தான் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.

    பல புதுப்புது வியாதிகள் மனிதர்களை தாக்கி வரும் இந்த காலகட்டத்தில் எத்தனையோ மருத்துவ வளர்ச்சி இருந்தாலும் தெய்வ வழிபாடிலும் மக்கள் நம்பிக்கை அதிகமாக உள்ளது.

    திக்கற்றவர்களுக்கு தெய்வம்தான் துணை என்று சொல்வார்கள்.

    ஆம்.... நம் ஒவ்வொருவருக்கும் தெய்வம்தான் துணை.

    நோய் பயம் நீங்கவும், புத்துணர்ச்சியுடன் வாழ்வை கொண்டு செல்லவும் இறைவழிபாடு முக்கியமானது.

    இறைவழிபாடு செய்து வந்தால்தான் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.

    புதிய தன்னம்பிக்கை வரும். எனவே வீட்டிலேயே வழிபாட்டை உற்சாகத்துடன் தொடங்குவோம்.

    விரைவில் ஆடி மாதம் பிறக்க இருக்கிறது.

    எனவே, தினசரி பூஜைகளில் நம்மை ஈடுபடுத்த வேண்டும்.

    பகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் வந்து அலை மோதும்.

    மாலை வந்ததும், பகவானிடம் மனதை வைத்து, சிறிது நேரம் தரிசனம் செய்யும் போது மனம், மற்ற விஷயங்களை மறந்து, சில நிமிட நேரமாவது பகவானிடம் லயித்திருக்கும்.

    மனதுக்கும் அமைதி கிடைக்கும்.

    அந்த சந்தர்ப்பத்தில் பகவானிடம் "பகவானே... நான், பிறர் கையை எதிர்பாராமல், வாழ்நாளை போக்கி விட வேண்டும்" என்று பிரார்த்தித்து கொள்ள வேண்டும்.

    பிறருக்காக உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம், குடும்பத்தை கவனிக்கிறோம்.

    இதெல்லாம் ஒரு கடமை. அதே போல தன் நன்மைக்கும், ஆத்ம லாபத்துக்கும் சுலபமான வழி பகவானை வழிபடுவதுதான்.

    மனித வாழ்க்கை என்பது மிகவும் குறுகிய கால அளவு கொண்டது. இந்த குறுகிய காலத்துக்குள் நாம் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில் ஆனந்தமாக செலவிடுவதே நம்மை உயர்நிலைக்கு அழைத்து செல்லும்.

    இந்த பிறவியில் நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.

    அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட இயல்பைக் கொண்டது. ஆனால் எல்லாவற்றிலும் நம் ஆத்மா மகிழ்ச்சி அடையாது.

    நமது ஆத்மா திருப்தி அடைய வேண்டுமானால், இந்த பிறவியில் நமக்கு உயிரையும், அழகான உடம்பையும் கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    நமக்கு கிடைத்த எல்லா பொருட்களையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல் வேண்டும்.

    இதற்காகதான் நம் முன்னோர்கள் ஆலயங்களை கட்டினார்கள்.

    ஆனால் கடந்த சில மாத வாழ்க்கை சூழலில் தினமும் ஆலயத்துக்கு செல்ல இயல்வதில்லை.

    எனவே வீட்டில் பூஜை செய்து இறைவனுக்கு நாம் அர்ப்பணிக்கலாம். 

    • சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது.
    • ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும்.

    பிறப்பு, இறப்பு என அனைத்திலும் சங்கு முக்கியம் இடம் வகிக்கிறது. இதன் ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும்செய்து பூஜைகள் செய்யப்படும். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர்.

    மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.

    ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்தபோது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று. இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீடசம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

    ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோமடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறுவோம்.

    ×