search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவக்கிரக தோஷம்"

    • இறைவியின் திருநாமம், மருவார் குழலி.
    • தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் திருச்செம்பொன்பள்ளி என்னும் செம்பனார்கோவில் திருத்தலத்தில் இருக்கிறது மருவார்குழலி உடனாய சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென் கரைத் தலங்களில், இது 42-வது திருத்தலமாகும். புராண காலத்தில் இந்த ஊர், லட்சுமிபுரி, இந்திரபுரி, கந்தபுரி என்று அழைக்கப்பட்டுள்ளது.

    தல வரலாறு

    பிரம்மாவின் மானச புத்திரராக பிறந்தவர், தட்சன். இவருக்கு பார்வதிதேவியே, மகளாகக் கிடைத்திருந்தாள். அவளுக்கு தாட்சாயிணி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பின்னர் மகள் விருப்பப்படியே அவளை, சிவ பெருமானுக்கு மணம் முடித்தார்.

    சில காலம் கழித்து தட்சன் ஒரு யாகத்தை நடத்தினான். அப்போது அகந்தையால், அந்த யாகத்திற்கு சிவபெருமானை அழைக்க மறுத்தான். இதையறிந்த தாட்சாயிணி, தன் தந்தையை நல்வழிபடுத்தும் எண்ணத்தில் யாகம் நடந்த இடத்திற்கு வந்தாள்.

    ஈசனுக்கு அழைப்பு விடுக்காதது பற்றி மகள் கேட்டதில், தட்சன் கோபம் கொண்டான். ஆணவத்தின் உச்சத்தில் இருந்த அவன், தாட்சாயிணியையும், சிவனையும் கடும் வார்த்தைகளால் வசைபாடினான். இதனால் கோபம் கொண்ட தாட்சாயிணி, தட்சனின் யாகம் அழிந்து போகட்டும் என்று சாபமிட்டாள்.

    பின்னர் சிவபெருமானிடம், தட்சனுக்கு தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொண்டாள். சிவபெருமான் தன்னுடைய அம்சமாக வீரபத்திரரையும், அவருக்கு துணையாக பத்ரகாளியையும் அனுப்பிவைத்தார். அவர்கள் தட்சனின் யாகத்தை அழித்தனர்.

    இந்த நிலையில் சிவனை நிந்தித்த தட்சனுக்கு மகளாகப் பிறந்தது, தட்சனுக்கு சாபம் அளித்தது ஆகியவற்றை பாவமாக கருதிய தாட்சாயிணி, அந்த பாவம் நீங்க இத்தலத்தில் பஞ்சாக்னி வளர்த்து அதன் நடுவில் அமர்ந்து தவம் புரிந்தாள்.

    சிவபெருமான், தாட்சாயிணிக்கு காட்சி கொடுத்து, பார்வதியாக தன்னுடன் சேர்த்துக்கொண்டார். மேலும் 'நீ இந்த தலத்தில் மருவார் குழலியம்மை என்ற திருநாமத்துடன் என்னருகில் இருந்து அருள் செய்வாய்' என்று கூறியதாக தல வரலாறு எடுத்துரைக்கிறது.

    இவ்வாலயத்தின் அமைப்பு முறை மற்றும் இங்குள்ள ஜேஷ்டா தேவி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்த ஆலயம் கி.பி 879 முதல் கி.பி. 907 வரை ஆட்சி செய்த ஆதித்த சோழன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    கோச்செங்கண் சோழனும் இவ்வாலயத்தில் திருப்பணி செய்திருக்கிறான். இவ்வாலயத்தில் மூன்றாம் குலோதுங்கச் சோழன், ராஜராஜ சோழன், பிற்காலத்தில் தஞ்சையை ஆட்சி செய்த சரபோஜி மன்னர் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.

    தட்சனை மகனாகப் பெற பிரம்மாவும், திருமாலை கணவனாக அடைவதற்கு லட்சுமிதேவியும், லட்சுமியை மனைவியாக அடைந்ததற்கு திருமாலும், விருத்திராசுரனை வெல்ல வஜ்ஜிராயுதம் வேண்டி இந்திரனும், தாருகாசுரனை வதம் செய்ய முருகனும் இவ்வாலயத்தில் உள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி, இவ்வாலய இறைவனை வழிபாடு செய்துள்ளனர். இவர்களைத் தவிர, குபேரன், வசிஷ்டர், அகத்தியர் ஆகியோரும் இத்தல இறைவனை வணங்கி இருக்கிறார்கள்.

    ஆலய அமைப்பு

    இவ்வாலயம் கிழக்கு நோக்கிய திருவாசலுடன் மாடக்கோவிலாக அமைந்துள்ளது. பலிபீடம், நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறத்தில் தெற்கு நோக்கிய நிலையில் அம்மன் சன்னிதி உள்ளது.

    இறைவியின் திருநாமம், மருவார் குழலி. இவருக்கு புஷ்பாளகி, தாட்சாயிணி, சுகந்த குந்தளாம்பிகை, சுகந்தவன நாயகி என்ற பெயர்களும் உண்டு. மகாமண்டபத்தில் சூரிய மகா கணபதி, சூரிய லிங்கம், சந்திர லிங்கம், சுப்பிரமணியர், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி உள்ளனர்.

    கருவறையில் மூலவர் சுவர்ணபுரீஸ்வரர், மேலும் கீழும் தலா 16 இதழ்களைக் கொண்ட தாமரை போன்ற ஆவுடையில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இவர் தேவப்பிரியர், சுவர்ண லட்சுமீசர், செம்பொன் பள்ளியார் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

    கோஷ்டத்தில் கோஷ்ட கணபதி, தட்சிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இங்குள்ள பிட்சாடனத் திருக்கோலம் மிகப் பழைமையானது. அருகே சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.

    திருச்சுற்றில் மேற்கில் தலவிநாயகரான, `பிரகாசப் பிள்ளையார்' உள்ளார். தவிர வன துர்க்கை, விசுவநாதர், சீனிவாசப் பெருமாள், சிபிகாட்சிநாதர் எனப்படும் மான் மழு ஏந்திய சிவபெருமான், ருத்ராட்ச மாலையும், சக்தி ஆயுதமும் தரித்த நான்கு கரங்களைக் கொண்ட பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, வீரபத்திரர், சூரியர், பைரவர் ஆகிய மூர்த்தங்களும், சேத்ரகால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னிதிகளும் காணப்படுகின்றன.

    தென்மேற்கில் பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, சாமுண்டி, வைஷ்ணவி, வராகி, மகேந்திரி ஆகிய சப்த மாதர்களுடன் விநாயகர் மற்றும் சாஸ்தா உள்ளனர். கோவிலுக்கு அருகில் ஆலயத்தின் தல தீர்த்தமான சூரிய தீர்த்தமும், காவிரியும் உள்ளன. இவ்வாலய தல விருட்சமாக வன்னி மரமும், வில்வ மரமும் உள்ளன.

    இவ்வாலய தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். நவக்கிரக தோஷத்திற்கு சிறந்த பரிகாரத்தலமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இங்கு துர்க்கை வழிபாடும் மிகவும் விசேஷம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாலயத்தில் சித்திரை மாதம் 7-ம் நாளில் இருந்து 18-ம் நாள் வரை, பன்னிரண்டு நாட்கள் சூரிய பூஜை திருவிழா நடத்தப்படுகிறது.

    ஆறுகால பூஜை நடைபெறும் இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    மயிலாடுதுறையில் இருந்து ஆக்கூர் செல்லும் சாலையில் செம்பனார்கோயில் திருத்தலத்தின் வடக்கு பகுதியில் சுவர்ண புரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

    • ராவணணை புல்லுக்கு சமமாக நினைத்தவர்.
    • சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவர் ஸ்ரீராமதூதர்.

    புத்தி, பலம், புகழ், உறுதி, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை, நோயற்ற வாழ்வும், சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவார். நவக்கிரஹங்களும் ஆஞ்சநேயரின் வாலில் ஆவாஹனம் ஆகி உள்ளார்.

    நவகிரஹ தோசங்கள பில்லி சூன்யங்கள் செய்வினை கோளாறுகள் ஆகிய தோஷங்களையும் தீர்ப்பவர். குழந்தை பேறு இல்லாமை தீராத வியாதி திருமணத்தடை மேலதிகாரிகள் தொல்லை குடும்ப வாழ்க்கை பதவி உயர்வு மற்றும் ஏவல் பேய் பிடித்தவர்களுக்கு நிவர்த்தியும் உண்டாகும்.

    ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பழம், தேங்காய், தயிர்சாதம், வெண்ணெய், உளுந்துவடை நிவேத்தியம் செய்யலாம். பசுநெய் தீபம் ஏற்றலாம். துளசிமாலை ஸ்ரீ ராம நாம வடைமாலை பழ மாலைகள் பவள மல்லி மாலைகள், வெற்றிலை மாலை சாத்துபடி செய்யலாம்.

    யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவர் ஸ்ரீராமதூதர். ஆயிரம் யோசனை தூரம் கடலைத் தாண்டியவர் அஞ்சனாகுமாரர். சிரசை வாயில் புகுந்து வெளியே வந்தவர். மைநாக மலையினால் கௌரவிக்கப்பட்டவர். சமுத்திராஜனால் ஆதரிக்கப்பட்டவர்.

    நிழல் இழுக்கும் சிம்ஹீயைக் கொன்றவர் கையினால் அடித்தே லங்கினியை வீழ்த்தியவர். அசோகவனத்தை அழித்தவர். ராவணணை புல்லுக்கு சமமாக நினைத்தவர். வாலில் வைத்த தீயினால் இலங்கையை அழித்தவர். லஷ்மணரை காப்பாற்ற நிமிடத்தில் சஞ்சீவி மலையை கொண்டு வந்த மகாத்மாவான ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை சேவிப்போம். நமது இடர்களை களைந்து சகல மேன்மைகளையும் பெறுலாம்.

    • எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம்.
    • புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.

    சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை-குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்ச்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.

    இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.

    கருடபுராணம், விஷ்ணு புராணம் போன் புராணங்களிள், "ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும், முடியாதவர்கள் காகத்திற்கு அன்னம் வைக்கலாம்,. பசுவுக்கு அகத்திகீரை, பழம் கொடுக்க வேண்டும் என்கிறது.

    இப்படி முன்னோர்களின் ஆத்மாவையும் சமீபத்தில் இறந்தவர்களின் ஆத்மாவையும் பூஜை மூலமாக திருப்திப்படுத்தினால் திருமணத்தடை விலகும், புத்திரபாக்கியம் கிடைக்கும். கடன்தொல்லை, மனக்கவலை, நவக்கிரக தோஷங்கள் போன்ற அனைத்து துன்பங்களும் விலகும்" என்கிறது புராணங்கள்.

    படையல்

    நம் முன்னோர்களுக்கு பிடித்த உணவை சமைத்து அவர்களுக்கு படைக்க வேண்டும்.

    ×