search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறகுப்பந்து போட்டி"

    • காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் இறகுப்பந்து போட்டி நடந்தது.
    • மதுரை எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 4-வது இடத்தையும் பிடித்தது.

    அருப்புக்கோட்டை

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த இறகுப்பந்து போட்டி அருப்புக்கோட்டை சைவ பானு சத்திரிய கல்லூரியில் நடந்தது. இந்த போட்டிகளை கல்லூரி முதல்வர் செல்லத்தாய் தொடங்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் ஜாக்லின் பெரியநாயகம் வாழ்த்துரை வழங்கினார். போட்டிகளின் முடிவில் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல் இடத்தையும், திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி 2-ம் இடத்தையும், அருப்புக்கோட்டை சைவ பானு சத்ரிய கல்லூரி 3-வது இடத்தையும், மதுரை

    எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 4-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி செயலர் முத்து தினகரன் கோப்பைகளை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன் சான்றிதழ்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் மணிகண்டன், மாதவன் மற்றும் ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • போட்டியில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் ஒட்டுமொத்த சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி தருணுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

    வள்ளியூர் :

    குழந்தைகள் மற்றும் மகளிருக்கான சிறப்பு கோடைக்கால இறகுப்பந்து போட்டி கடந்த 3 நாட்களாக வள்ளியூர் எஸ்.டி.என். பேட்மிட்டன் கிளப்பில் நடைபெற்றது. போட்டிகளில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று நடந்த பரிசளிப்பு விழாவில் கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    பரிசளிப்பு விழாவில் எஸ்.டி.என். பயிற்சி அரங்க உரிமையாளர் எட்வின் பிரைட், நிஷா எட்வின் மற்றும் வள்ளியூர் வணிகர் நல சங்க தலைவரும், நிலா பேக்கரி உரிமையாளருமான தா.எட்வின் ஜோஸ், வணிகர் நல சங்க செயலாளர் முல்லை கவின் வேந்தன், மருத்துவர் சங்கர வெங்கடேசன், எஸ்.என். ஜுவல்லரி உரிமையாளர் மணிவண்ணன், டி.ஜே.ஆர். கட்டுமான நிறுவனத் தலைவர் தேவேந்திரன், கல்லூரி பேராசிரியர்கள் புஷ்பராஜ், பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    போட்டியில் ஒட்டுமொத்த சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி தருணுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் பிரியா கவின் வேந்தன் செய்திருந்தார்.

    ×